“அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்ட குஜராத் பேரழகிகள் தத்தம் கணவர்களோடு கோட்டையின் படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்தனர். இல்லற சாகஸத்தின் வினைப்பயன்கள் எதிரே ராட்சச ரப்பர் பலுன் பொம்மையில் குதித்துக்கொண்டிருந்தன. இடைப் பிரதேசத்தை காண்போரின் கண்ணுக்கு விருந்தாக காற்றோட்டமாக விட்டுவிட்ட ராதைகளின் பெருந்தன்மையையும் உண்ணும் உணவில் சேர்க்கும் வெண்ணை எப்படி உடலாக மாறி உலா வருகிறது எனும் மகத்தான சிந்தனையில் நான் ஆழ்ந்திருக்குங்கால், உடன் வந்திருந்த நரன்கள் மோடியின் ஜாதி பற்றிய விவாதத்திற்குள் சென்றிருந்தார்கள்.”
―
செல்வேந்திரன் Selventhiran,
பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)