Ragupraksh > Ragupraksh's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
    ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
    மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
    காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
    வெந்து தணிந்தது காடு;-தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
    தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #3
    Subramaniya Bharathiyar
    “காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
    கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
    பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
    பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
    கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
    கீத மிசக்குதடா நந்த லாலா!
    தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
    தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!”
    Subramaniya Bharathiyar, பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]



Rss