Sivamaniyan > Sivamaniyan's Quotes

Showing 1-30 of 34
« previous 1
sort by

  • #1
    Jeyamohan
    “செயலாற்றுவதால் கிடைப்பது ஒரு தன்னிறைவு. என்னுடைய சாத்தியங்களை நான் முழுமையாக நிகழ்த்தும்போதுதான் எனக்குள் இருந்து என்னை கவனித்துக்கொண்டிருக்கும் ஒன்று நிறைவடைகிறது”
    Jeyamohan

  • #2
    Jeyamohan
    “புத்தகங்கள் முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை.”
    Jeyamohan

  • #3
    Mahatma Gandhi
    “Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.”
    Mahatma Gandhi

  • #4
    Jeyamohan
    “அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது.”
    Jeyamohan

  • #5
    Jeyamohan
    “மானுட மனத்தின் அதி நுண்மையான ஒரு இடத்தை 'தற்செயலாக’ ஆனால் தீவிரமாக தீண்டிச்செல்வதே மிகச் சிறந்த கதை”
    Jeyamohan

  • #6
    Leo Tolstoy
    “The best stories don't come from "good vs. bad" but "good vs. good.”
    Leo Tolstoy

  • #7
    Fyodor Dostoevsky
    “Nothing in this world is harder than speaking the truth, nothing easier than flattery.”
    Fyodor Dostoevsky

  • #8
    Jeyamohan
    “பறவையை நேர் முன்னால், அது நம்மை நோக்கி முகத்திற்கு நேராக பறந்து வருவதை பார்ப்பது கிளர்ச்சியான அனுபவம்.”
    Jeyamohan
    tags: nature

  • #9
    Jeyamohan
    “இலக்கணம் பின்னால் ஊர்ந்து ஊர்ந்து வரும், இலக்கியம் முன்னால் பறந்து சென்றுகொண்டிருக்கும்”
    Jeyamohan

  • #10
    Jeyamohan
    “அறிவதொவ்வொன்றும் அறியாமையையே..”
    Jeyamohan

  • #11
    Jeyamohan
    “காமத்தின் அனல்காற்று குளிர்ந்துதான் ஆகவேண்டும் ஆனால், குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடி கொடிகளுடன் நகரையே கொளுத்திவிடுகிறது”
    Jeyamohan
    tags: lust

  • #12
    Jeyamohan
    “ஒரு முச்சந்தி வியாபாரிக்குத் தேவையில்லை. முழுமையாக விடுதலையடைந்த மனிதர்களுக்கும் தேவையில்லை இந்த இரண்டு எல்லைகளுக்கும் நடுவில் இருப்பவர்களுக்கு இலக்கியம் தேவை..”
    Jeyamohan

  • #13
    Jeyamohan
    “நோயாளியும், பித்தனும், ஞானியும், கலைஞனும் இரவில் தூங்குவதில்லை..”
    Jeyamohan

  • #14
    Jeyamohan
    “எல்லா கலையும் அப்பு சொன்ன வரியையே மீண்டும், மீண்டும் சொல்கின்றன: ‘தெய்வம் உண்டு.”
    Jeyamohan, அறம் [Aram]
    tags: art, god

  • #15
    Jeyamohan
    “முகமூடிக்கு எப்போதும் ஒரே உணர்ச்சிதான், முகம் அப்படிபட்டதல்ல..”
    Jeyamohan

  • #16
    Jeyamohan
    “வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது”
    Jeyamohan

  • #17
    Jeyamohan
    “இன்றைய மனிதனுக்கு காமம் பசியைப்போன்றதல்ல. நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலில் இருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. மனிதன் அளவுக்கு காமத்தையே எண்ணிக்கொண்டிருக்கும் பிற உயிரினம் ஏதும் இருக்க முடியாது. உள்ளத்துக்கு எல்லை இல்லை. ஆகவே மானுடனின் காமத்துக்கும் எல்லையே இல்லை. அது அவனுக்குள் பெருகிப்பெருகிச் சென்றபடியே இருக்கும். உண்மையில் காமத்தை கட்டுப்படுத்துதல் என்ற செயலைவிட ஒரு சாதாரண மனிதனுக்குள் இருக்கும் இந்த காமம் பலமடங்கு செயற்கையானது”
    Jeyamohan, இன்றைய காந்தி

  • #18
    Jeyamohan
    “காமத்தை வெல்பவன் மட்டுமே அகங்காரத்தை வெல்லமுடியும். உலகம் மீது பரவி அதை மறைக்கும் அகங்காரத்தையும் வென்றவனாலேயே உலகை உண்மையில் அறியமுடியும். ’தன்னுடைய உண்மை’க்குப் பதிலாக ’உண்மை’யை அவனால்தான் அறிய முடியும். ஆகவேதான் காமத்தை வெல்லுதல் ஞானத்தின் முதலடியாக எல்லா மரபுகளிலும் சொல்லப்படுகிறது.”
    Jeyamohan

  • #19
    Jeyamohan
    “தன்னிரக்கம் விசித்திரமான ஒரு மனநிலை. அதைப்போல இனிய துக்கம் வேறில்லை. தன்னுடைய பலவீனங்கள் பிழைகள் செயலின்மை அனைத்தையும் அங்கே இனியவையாக ஆக்கிக்கொள்ளமுடியும். அனுபவிக்க அனுபவிக்க தன்னிரக்கம் பெருகும்”
    Jeyamohan

  • #20
    Jeyamohan
    “மனித மனம் என்பது பெரும்பாலும் சூழல்களின் சிருஷ்டி. உடல் என்ற மனிதனால் அறியமுடியாத அமைப்பின் ஒரு பகுதியே மனம் என்பது”
    Jeyamohan, இன்றைய காந்தி

  • #21
    Jeyamohan
    “தொலைக்காட்சி நமக்குத் தெரிவுகளை அளிப்பதில்லை. அது அளிப்பதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது. சிந்திக்கவிடாமல் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை அடித்துச்செல்லும் தன்மை கொண்டது”
    Jeyamohan

  • #22
    Jeyamohan
    “மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.”
    Jeyamohan

  • #23
    Frank Zappa
    “So many books, so little time.”
    Frank Zappa

  • #24
    Jeyamohan
    “நான் நினைவறிந்த நாள் முதலே என் விழிகள் எட்டும் தொலைவுக்கு அப்பாலுள்ளவற்றை கற்பனையில் கண்டுகொண்டிருந்தவன்”
    Jeyamohan

  • #25
    Jeyamohan
    “என்னுடைய சாத்தியங்கள் முழுவெளிப்பாடு கொள்ளும் களமே தன்னறம் என்பது. அதில் இறங்கிச் செயலாற்ற நான் என் பிறப்பால் பணிக்கப்பட்டிருக்கிறேன்”
    Jeyamohan

  • #26
    Jeyamohan
    “உங்கள் ஆளுமை எதைக்கோருகிறதோ அதை மட்டுமே நீங்கள் கற்பீர்கள் என்றால் ஒருபோதும் அதன் ஒரு துளிகூட வீணாகாது.”
    Jeyamohan

  • #27
    Jeyamohan
    “மொழியுடன் இருந்து கொண்டிருங்கள். மிக இளமைப்பருவத்தில் ஒளிமிக்க மணிமுடியுடன் உங்களுக்குக் காட்சியளித்த அந்த தேவதையை ஒவ்வொரு கணமும் கூடவே வைத்திருங்கள்.”
    Jeyamohan

  • #28
    Jeyamohan
    “. தன் சிறந்த மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு தன் அடுத்த தலைமுறையை உருவாக்கும் சமூகங்களே வாழும் சமூகங்கள். வெல்லும் சமூகங்கள். சராசரியை முன்னிறுத்தும் சமூகங்கள் உறைந்துவிட்டவை. அடிமைப்பட்டவை.”
    Jeyamohan

  • #29
    Jeyamohan
    “பெரும்செயல்வீரர்கள் சோர்வை அறியாதவர்கள் அல்ல, சோர்வைக் குறைந்த கால அவகாசத்தில் சமாதானம் செய்துகொண்டு மீளத்தெரிந்தவர்கள்.”
    Jeyamohan

  • #30
    Jeyamohan
    “படைப்பு என்பது அர்ப்பணிப்பின் விளைவு”
    Jeyamohan



Rss
« previous 1