Krishanth > Krishanth's Quotes

Showing 1-3 of 3
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
    ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
    மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
    காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
    வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
    பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
    நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #3
    Subramaniya Bharathiyar
    “ஓடி விளையாடு பாப்பா!-நீ
    ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
    கூடி விளையாடு பாப்பா!-ஒரு
    குழந்தையை வையாதே பாப்பா!

    சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
    திரிந்து பறந்துவா பாப்பா!
    வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
    மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

    கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
    கூட்டி விளையாடு பாப்பா!
    எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
    இரக்கப் படவேணும் பாப்பா!

    பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
    பசுமிக நல்லதடி பாப்பா!
    வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
    மனிதர்க்கு தோழனடி பாப்பா!

    வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
    வயலில் உழுதுவரும் மாடு,
    அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
    ஆதரிக்க வேணுமடி பாப்பா!

    காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
    கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
    மாலை முழுதும் விளையாட்டு-என்று
    வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

    பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
    புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
    தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
    தீங்குவர மாட்டாது பாப்பா!

    பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
    பயங்கொள்ள லாகாது பாப்பா!
    மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

    துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
    சோர்ந்துவிட லாகாது பாப்பா!
    அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
    அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

    சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
    சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
    தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
    திடங்கொண்டு போராடு பாப்பா!

    தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
    தாயென்று கும்பிடடி பாப்பா!
    அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
    ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

    சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
    தொழுது படித்திடடி பாப்பா!
    செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
    தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

    வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
    வாழும் குமரிமுனை பாப்பா!
    கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
    கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

    வேத முடையதிந்த நாடு,-நல்ல
    வீரர் பிறந்ததிந்த நாடு;
    சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
    தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

    சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
    நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
    நிறை உடையவர்கள் மேலோர்.

    உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
    உண்மையென்று தானறிதல் வேணும்;
    வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
    வாழும் முறைமையடி பாப்பா!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss