Soniya Rajendran > Soniya's Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
    செண்பகத் தோட்டத்திலே,
    பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
    பாங்கியோ டென்று சொன்னாய்
    வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
    மார்பு துடிக்கு தடீ!
    பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
    பாவை தெரியு தடி!

    மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
    வேதனை செய்கு தடீ!
    வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
    வந்து தழுவுது பார்!
    மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
    மூழ்கித் துயிலினிலே,
    நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
    நரகத் துழலுவதோ?

    கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்
    காவலுன் மாளிகையில்;
    அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்
    அங்கு வருதற் கில்லை;
    கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்
    கூடிக் கிடக்கு தங்கே;
    நடுமை யரசி யவள்-எதற் காகவோ
    நாணிக் குலைந்திடுவாள்.

    கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
    கொஞ்சிக் குலவி யங்கே
    ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
    ஆயிரங் கோடி முறை
    நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
    நல்ல களி யெய்தியே
    பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
    பண்ணிய தில்லை யடி!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
    வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
    மூலைக் கடலினையவ் வான வளையம்
    முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
    நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
    நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
    சாலப் பலபலநற் பகற் கனவில்
    தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

    ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
    ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
    பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
    பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
    ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
    ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
    ‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
    மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

    சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
    திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
    “நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
    நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
    திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
    சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
    பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
    பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.

    “நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
    நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
    திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
    சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
    பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
    பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
    சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
    திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss