Kirthica > Kirthica's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
    வெந்து தணிந்தது காடு;-தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
    தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #3
    Subramaniya Bharathiyar
    “மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
    வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
    மூலைக் கடலினையவ் வான வளையம்
    முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
    நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
    நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
    சாலப் பலபலநற் பகற் கனவில்
    தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

    ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
    ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
    பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
    பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
    ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
    ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
    ‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
    மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

    சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
    திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
    “நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
    நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
    திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
    சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
    பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
    பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.

    “நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
    நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
    திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
    சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
    பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
    பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
    சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
    திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #4
    Subramaniya Bharathiyar
    “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss