KO > KO's Quotes

Showing 1-3 of 3
sort by

  • #1
    “Writing makes us complete.”
    KO

  • #2
    Subramaniya Bharathiyar
    “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #3
    Subramaniya Bharathiyar
    “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss