Sase > Sase's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
    ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
    மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
    காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
    வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
    பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
    நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #3
    Subramaniya Bharathiyar
    “சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
    நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
    கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
    வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #4
    Subramaniya Bharathiyar
    “நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்
    பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
    என்னை கவலைகள் தின்ன தகாதென..

    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்
    மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
    குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

    தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
    நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்

    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்
    துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
    சோர்வில்லை, தோற்பில்லை
    நல்லது தீயது நாமறியோம்
    நாமறியோம் நாமறியோம்
    அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
    நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்”
    Subramaniya Bharathiyar, பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]



Rss