அனிதா சரவணன் (Anitha Saravanan) > Quotes > Quote > Anitha liked it

“பேர்ரட்(parrot) மீன் ஒன்று கிளியின் நிறக் கலவையில் ஒரு அடி நீளத்தில் அத்தீவின் ராணி போல் கம்பீரமாக நீந்திக் கொண்டிருந்தது.

பச்சையும் சிகப்பும் நீளமும் கலந்த அந்தக் கடல் ராணியைத் துல்லியமாகப் பிரதிபலித்தது நீர். பச்சை கச்சை கட்டி நீல நிற முழுக் கால் சராய் அணிந்த சிகப்பு முடி உள்ள கடற்கன்னி நீரின் பளபளப்பை நகையாக அணிந்து கொண்டு மினுங்கி மினுங்கி சென்றாள்.

கரு கருவென்று கெண்டை மீன்கள் கூட்டமாக வளைந்து வளைந்து சுழன்று சென்றன.கொழுத்த மீன்களை அவளைப் போலவே நாவூர கொக்கும் பார்த்துக்கொண்டு நடுவில் இருந்த பாறை மேட்டில் தவத்தில் நின்றிருந்தது.”
அனிதா சரவணன் (Anitha Saravanan)

No comments have been added yet.