எஸ்.ராமகிருஷ்ணன்,நம் காலத்து நாவல்கள் > Quotes > Quote > Anitha liked it
“கவிதை எப்போதும் பிரிவின் ஜாடையைத்தான் கொண்டிருக்கிறது.ஞாபகத்தின் குடுவையைத் திறந்ததும் கவிதையின் விசித்திர வாசனை கசிகிறது. கவிதை சொற்களின் வழியே சொற்களால் அடைய முடியாத ஆழத்தை, நுண்மையை, உவப்பை கைப்பற்ற எத்தனிக்கின்றன."
"காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
―
"காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
―
No comments have been added yet.
