Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Ramesh Predan.

Ramesh Predan Ramesh Predan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-17 of 17
“உலகிலேயே தங்கள் தாய்மொழியின் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத ஓர் இனமாகத் தமிழர் இருக்கின்றனர்.”
Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]
“சங்ககாலச் சிற்றரசர்கள் தங்களிடம் பிச்சை பெற்ற புலவர்களின் பாடல்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்கிறேன், தமிழிலக்கியம் பிச்சைக்காரர்களாலானது; சங்ககாலம் முதல் இன்றைய பின்நவீன காலம்வரை செம்மொழியில் பிச்சைக்காரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். படைப்பாளர்களைப் பிச்சைக்காரர்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகம் திட்டமிட்டு நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. பரிசில் வாழ்க்கை. இந்தியாவில் தலித்தாகப் பிறப்பதைவிடத் தமிழ்க் கவிஞனாகப் பிறப்பது சாபக்கேடானது. திருவள்ளுவர் உணவருந்தும்போது அவருடைய பத்தினி வாசுகி அம்மையார் ஒரு குவளைவில் நீரும் ஊசியும் அருகே வைப்பாராம். அம்மையார் சோறு பரிமாறும்போது இலைக்கு வெளியே சிந்துவதையும், தான் சாப்பிடும்போது கீழே சிந்துவதையும் வள்ளுவர் ஊசியால் குத்தியெடுத்து நீரில் அலசி மீண்டும் இலையிலிட்டுச் சாப்பிடுவாராம். வறுமை அவரைப் பருக்கைகளைப் பொறுக்கித்தின்ன வைத்திருக்கிறது. பாரதியார் சோறு சோறு என எத்தனை இடங்களில் பேய்க்கூச்சல் போட்டிருக்கிறார் என்பதைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டு, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்.”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]
“ஆணும் பெண்ணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்; ஆனால், சேர்ந்தே இயங்க முடியாது. எதிர்காலத்தில் உலகப்போர் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அணி பிரிந்து மூளுவதாக இருக்கும்.”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]
“வறுமை, உறவுகளுக்கிடையே வெறுப்பின் வெம்மையாகச் சுழித்துக்கொண்டோடுகிறது. கைப்பிடியளவு பணம் உனது மரணத்தைத் தள்ளிப்போடக்கூடிய ஆற்றல் கொண்டது.”
Ramesh Predan, அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]
“ஆண் என்பது ஆண்குறி மட்டுமல்ல மகளே. ஆண்மையைத் துறப்பதே பேராண்மை.”
Ramesh Predan, அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]
“ஒடுக்குதலுக்கு உள்ளாவதையே தனது உயிர்வாழும் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் யுக்தி அறிந்த மொழி உலகில் தமிழ் போல் வேறில்லை. பிணமாக நடிக்கத் தெரிந்தவர் சாவதில்லை. தேவகி நான் உயிரோடு இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறேன்; ஆதலால் எனக்கு மரணமில்லை.”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]
“இயல்பிலேயே தமிழ் மொழி அத்தனை கவித்துவமானது; என்னை உனக்கு அடையாளம் காட்டிவிட்டது. ஒழுங்காகத் தமிழ் பேசி வாழ்ந்தாலே நம் மக்களின் ஆயுள் கூடும். நல்ல தமிழ் பேசுபவர்க்கு ரத்த அழுத்தம்,”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]
“மனதைத் தொந்தரவு செய்து, அதன் விழிப்பற்ற நிலையை அதிர்வு உண்டாக்கி மாற்றுவது என்பது நடக்கத்தான் வேண்டும்”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“குளம் பேசும்
மீன்கள் அதன் சொற்கள்
சொற்களற்றுப் பேசும் குளத்தில்
மூழ்கி அடிமண்ணில் புதையவேண்டும்
பிறகு பேசப் பழகவேண்டும்”
Ramesh Predan, அயோனிகன் [Ayonigan]
“மனித உடம்புபோன்ற உன்னதமான பொருள்
உலகில் வேறில்லை- அதன் வாசனை
கடவுளுக்கே இல்லை
மனித உடம்பின் கலவிச் சுகம்
கடவுளுக்கே வாய்க்காதது- அதன் கவிச்சி
கவித்துவமான கொலை நெடி கொண்டது
மனித மரணம்- மூளை
சிந்திப்பதை நிறுத்திக்கொள்ளும்போது நேர்வது
புதைக்கப்பட்ட உடல் மூலக்கூறுகளாய்ச் சிதையும்போது
மொழிக்கிடங்கு சொற்களாய்ப் புழுத்து நெளிவது

அன்றும் அப்படித்தான் நேர்ந்தது
என்னுடன் நீ நடக்கும்போது
என் நிழலின் தலையை மிதித்துவிட்டாய் நான்
மரித்துப்போனேன்
அவ்வளவே”
Ramesh Predan, அயோனிகன் [Ayonigan]
“ஒரு படைப்பு என்பது தானாக நிகழ வேண்டும். அது நிகழும்போது அடுத்தவரின் மனதைத் தொட வேண்டும். அறிவைத் தொட்டால் அது வித்வமாக மட்டுமே இருக்கும். அந்த நிகழ்வு இயல்பாக இருக்க வேண்டும். வலிந்து செய்ததாக இருக்கக்கூடாது.”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“இந்தியாவில் தோன்றிய பாடல்களோ சங்கீதங்களோ எல்லாமே பக்தியின் அடிப்படையில் தோன்றியவைதான். மொகலாயர்களின் வருகைக்குப் பிறகே இசை என்பது கேளிக்கைக்கான ஒன்றாகவும் அரண்மனைக்கானதாகவும் கஸல் போன்ற வடிங்களில் உருவானது.”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“பீத்தோவன் சொன்னான் Rules are my humble servents என்று. ஏனென்றால் He was tharough with the rudiments.”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“எதுவரை போகுமோ அதுவரை
கால்களின் போக்கில் தலை
ஒரு முட்டுச் சந்தில் என் நிழலை உன் நிழல்
மடக்கிக் கொன்ற அன்று அறிந்தேன்
நிழல்களுக்கும் மரணமுண்டு என்பதை

யாருமற்ற மரணம் பயமற்ற உறக்கம்
தொலைதூரப் பயணி பார்வையிலிருந்து தொலைந்துவிட்டான்

ஆட்களை விடுத்து நிழல்களைக் கொல்லும் மனநோய்க்கு
ஆட்பட்ட நீ வெற்று நிழல் என்பதை
சென்ற நூற்றாண்டின் இறுதியில் அறுதியிட்டேன்
இந்த நூற்றாண்டின் விளிம்பில் நின்றுகொண்டு
சூன்யத்தில் நீளும் உன் நிழலை நீயே கொன்றுகொண்டிருக்கிறாய்

கவிதையைப் போல ஒரு கொலை
வாசிப்பின் திளைப்பு அற்றுப்போதலின் இதம்
உன்னால் மட்டுமே இப்படியான நிகழ்த்துதலைச் செய்ய முடியும்”
Ramesh Predan, அயோனிகன் [Ayonigan]
“எப்பொழுது ஒரு இசை இன்பத்துய்ப்பின் ஒரு வடிவமாக மாறுகிறதோ அப்பொழுதே அது இறைமை நீக்கம் செய்யப்பட்டுப் புலன்தன்மை பெறுகிறது”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“புதிய வெளிப்பாடுகள் உருவாவதற்குக் காரணமே உள்ளவற்றிற்குள் போதாமையை உணர்வதும் புதிது புதிதாக உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் படைப்புச் சுதந்திரமும்தான். விதிமுறைகளுக்குள், சூத்திரங்களுக்குள் மட்டும் அடங்கி இருந்தால் பிறகு புதியவை படைப்பது எப்படி சாத்தியம்?”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“திருப்தியின்மை, புதிய படைப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அதே சமயம் முழுமையான அதிருப்திதான் படைப்பை உருவாக்கும் என்றும் கூறிவிட முடியாது. ஏனெனில், இசை என்பது தன்னளவில் இன்பம் தரக்கூடிய ஒரு கலை.”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்

All Quotes | Add A Quote