Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Satinath Bhaduri.
Showing 1-30 of 44
“- সামনে বাত্তি দেখাও'- কতকগুলি বিকৃতাঙ্গ প্রেতের ছায়া ক্রমে ছোট হইয়া লণ্ঠনের আলোকে মিলাইয়া যায়। লণ্ঠনগুলি এই দিকে আগাইয়া আসিতেছে- সহস্র গ্রহ-উপগ্রহ কক্ষচ্যুত হইয়া আমার দিকে ছুটিয়া আসিতেছে। প্রতি লোমকূপে প্রত্যাশিত আতঙ্কের সাড়া- প্রতি স্নায়ুতে টাইফুনের বিক্ষোভ- এই আলোড়ন অক্ষিগোলকের মধ্যে দিয়া ফুটিয়া বাহির হইতে চায়।- তুমুল ব্যাতাবিক্ষোভে আর বুঝি দাঁড়াইতে পারা যায় না।... দৃঢ় মুষ্টিতে গরাদ চাপিয়া ধরিয়াছি।”
― জাগরী
― জাগরী
“வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு ஆசையாய் இருக்கிறது. பாக்கி இருக்கும் இரண்டு மணி நேரத்தை இனபக்கனவு நிறைந்த வாழ்க்கையாக மாற்றி அதில் திளைக்க வேண்டும். உலகத்தில் உள்ள அவ்வளவு ஆனந்தத்தையும் பிழிந்தெடுத்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது. நுகரவேண்டிய போகங்களையெல்லாம் நுகரவேண்டும் என்ற வேட்கை எழுகிறது. இந்தக் கடைசி நிமிஷத்தில் எனது தூக்குத் தண்டனை ரத்தாகி விட்டால்? ஏன் நடக்கக்கூடாது? எத்தனை பேர்களுக்கு இந்த மாதிரி நேர்ந்திருக்கிறது? சிரச்சேதம் செய்பவன் தனது வாளை உயர்த்துகிறான். ஒரு வீரன் தொலைவிலிருந்து குதிரைமேல் காற்று வேகத்தில் விரைந்து வருகிறான். "துரோகி! வெட்டாதே, வெட்டாதே!" என்று கத்துகிறான். எத்தனை கதைகள் படித்திருக்கிறேன், பிதியாஸீம் டாமனும்!
1934-ஆம் வருஷத்திய பூகம்பம் போல் ஒன்று இப்பொழுது நிகழ்ந்து, ஜெயிலின் சுவர்கள் இடிந்து விழுந்தாலும் நான் பிழைப்பதென்பது நடவாத காரியம். என் கழுத்தில் கயிற்றை மாட்ட வேண்டியவன் திடீரென்று நோயுற்றால்? அதனால் என்ன? மற்றும் ஒருவனைக் கொண்டு வருவதற்கு அதிக நேரம் பிடிக்காது. ஹைகோர்ட்டிலிருந்து, ப்ரொவின்ஷியல் அட்வைசரிடமிருந்து என் தூக்குத் தண்டனையை ரத்து செய்து கடிதம் வந்திருந்தும் துரதிர்ஷ்டவசமாக அது திறக்கப்படாமல் இருந்தால்? இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதே மாதிரி தான் சில வருஷங்களுக்கு முன் பஞ்சாப்பில் நடந்திருக்கிறதே! துரையின் பாக்கெட்டிலேயே கடிதம் பிரிக்காமலே கிடந்தது. ஆசாமி தூக்கிலிடப்பட்ட பிறகு தான் ஞாபகம் வந்தது துரைக்கு.”
― জাগরী
1934-ஆம் வருஷத்திய பூகம்பம் போல் ஒன்று இப்பொழுது நிகழ்ந்து, ஜெயிலின் சுவர்கள் இடிந்து விழுந்தாலும் நான் பிழைப்பதென்பது நடவாத காரியம். என் கழுத்தில் கயிற்றை மாட்ட வேண்டியவன் திடீரென்று நோயுற்றால்? அதனால் என்ன? மற்றும் ஒருவனைக் கொண்டு வருவதற்கு அதிக நேரம் பிடிக்காது. ஹைகோர்ட்டிலிருந்து, ப்ரொவின்ஷியல் அட்வைசரிடமிருந்து என் தூக்குத் தண்டனையை ரத்து செய்து கடிதம் வந்திருந்தும் துரதிர்ஷ்டவசமாக அது திறக்கப்படாமல் இருந்தால்? இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதே மாதிரி தான் சில வருஷங்களுக்கு முன் பஞ்சாப்பில் நடந்திருக்கிறதே! துரையின் பாக்கெட்டிலேயே கடிதம் பிரிக்காமலே கிடந்தது. ஆசாமி தூக்கிலிடப்பட்ட பிறகு தான் ஞாபகம் வந்தது துரைக்கு.”
― জাগরী
“எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் இடையே இவ்வளவு ஆழமான ஒரு பள்ளம் இருப்பதை இதற்கு முன் நான் உணரவே இல்லை. பீலுவின் அம்மாவின் சகிப்புத்தன்மையை நான் உற்சாகமான சம்மதம் என்று இத்தனை நாட்களாகத் தப்பாக எண்ணி இருந்தேன்.”
― জাগরী
― জাগরী
“ராஜ்யத்தையும், செல்வங்களையும் வைத்துவிட்டுத் துறவு பூண்டதால், சித்தார்த்தன் தன் மனைவி குழந்தைகளிடம் சரிவர நடந்து கொண்டான் என்று சொல்ல முடியுமா, என்ன?”
― জাগরী
― জাগরী
“இரும்புத் தூண்கள் வழியே ஏதேனும் கேட்கிறதா என்று காதைச் சாய்த்துக் கொண்டு உஷாராக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். ஓ, மனிதக் குரல்கள் எவ்வளவு இனிமையானவை! ஜெயில் பாலிடிக்ஸ், ஜெயிலுக்கு வெளியே நடக்கும் பாலிடிக்ஸ் எல்லாவற்றையும் இங்கு உட்கார்ந்தவாறே கேட்டுக்கொள்ள முடியும்.”
― জাগরী
― জাগরী
“வாரத்தில் ஒரு நாள் தான் கீழ் வகுப்புக் கைதிகளுக்குத் தயிர். பித்தளைத் தட்டில் வெண்ணெய் எடுக்கப்பட்ட, வெடவெடவென்று இருக்கும் தயிர். தீய்ந்து போன வாசனை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தச் சீர்திருத்தம் மூன்றாம் வகுப்பு அரசியல் கைதிகளிடையே ஒரு நிரந்தரமான கேலிப் பொருளாக இருந்தது. காங்கிரஸ் பெருந்தலைவர்கள் தாம் இந்தக் கேலிக்கு இலக்கு. அரசியல் கைதிகள் எல்லாரையும் ஒரே வகுப்பில் இவர்கள் ஏன் போடவில்லை? உயர் வகுப்பு, கீழ் வகுப்பு என்று அரசியல் கைதிகளிடையே பாகுபாடு செய்வதன் பொருள் என்ன? உயர் வகுப்புக்குத் தினத் திண்டிப்படி பத்தணா, கீழ்வகுப்பிற்கு மூணரையணா—இதென்ன கணக்கு? கீழ்வகுப்பு அரசியல் கைதிகளுக்குச் சொந்தச் செலவில் சௌகரியங்கள் செய்து கொள்ளும் சலுகை கிடையாது. இதைத் தந்துவிட்டால் என்ன குடி முழ்கிப் போய்விடும்? வெளியில் இருந்து அவர்களுக்கு ஏதாவது சாப்பாடோ கீப்பாடோ வந்தால் தலைவர்கள் வீட்டு அரிசி மக்கலாகிவிடுமா என்ன? மாதம் இருமுறை கடிதம் எழுதுவதற்கு இக்கைதிகளுக்கு அனுமதி பொடுத்துவிட்டால் மகாபாரதம் அசுத்தமாகிவிடுமோ? சொந்தச் செலவில் இவர்கள் பீடி வாங்கிக் கொண்டால் என்ன விபரீதம் நேர்ந்துவிடும்? இதுமாதிரி இன்னும் எத்தனையோ குறைகள்....”
― জাগরী
― জাগরী
“அடித்துக் கொன்று போட்டு விடுவோம் என்று மொட்டைக் கடிதங்கள் எனக்கு வருகின்றன. என்ன அர்த்தமற்ற கடிதங்கள்! முதல் பாகத்தில் மதிப்புக்குரிய பிதாவின் ஒப்பற்ற புத்திரன் என்று அண்ணாவை வர்ணித்துவிட்டுக் கடைசி வரியில் நான் யாருக்குப் பிறந்தவன் என்பதில் தங்களுக்குள்ள சந்தேகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்!”
― জাগরী
― জাগরী
“இந்த வாழ்க்கையிலிருந்து ஜெயிலுக்கு வருவதே ஒரு பெரிய நிம்மதி. மரண தண்டனை கூட ஒரு பெரிய வரப்பிரஸாதம்.”
― জাগরী
― জাগরী
“பல பிராணிகள் தங்கள் குழந்தைகளையே சாப்பிட்டுவிடுமாம். நானும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்தவனோ?”
― জাগরী
― জাগরী
“நைனாதேவி, பஹீரியாஜியிடம் என்னமோ சொல்லிண்டிருக்கா. குரல் கொஞ்சம் சூடாவே இருக்கு. "இதிலே பகவானை எதுக்காக இழுக்கணும்? தண்டனை கொடுத்தது சர்க்கார், இவ இழுக்கிறா பகவானை. கதை சொல்றதில்லையா? ஒரு பிராமணனுக்கு ஒரு குதிரை இருந்தது. பக்கத்து வீட்டுக்கார வண்ணான் கிட்ட ஒரு கழுதை இருந்தது. பிராமண சிரோமணி பூஜையில் உட்காரும் போதெல்லாம் வண்ணானின் கழுதை உரக்கக் கத்த ஆரம்பிக்கும். இந்த அவஸ்தை தாங்காமல் பிராமணன், பகவானிடம் பிரார்த்தித்திக் கொண்டான். "ஹே பகவான்! இந்தக் கழுதை ஒரு நாளும் என்னைப் பூஜை பண்ண விடாது. அது போடும் சத்தத்தில் என் வார்த்தைகள் உன் காதில் விழவே விழாது. அதைக் கொஞ்சம் கொன்னு போட்டுவிடு."
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பிராமணனுடைய குதிரைக்குக் காய்ச்சல் வந்து செத்துப் போய்விட்டது. அப்பொழுது பிராமணன் பகவான் கிட்டச் சொல்றான்: "எத்தனை நாள் பகவானா இருந்திருக்கிறாய், குதிரைக்கும் கழுதைக்கும் கூடவா வித்தியாசம் தெரியல்லே?" என்று. அந்த மாதிரிதான் இருக்கு, இவ சொல்றது. பகவானுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?"
மூக்கை மூடிக்காமலே மூச்சை அடைச்சுக்க முடிகிறதே, அதேமாதிரி காதைப் பொத்திக் கொள்ளாமலே கேட்பதை ஏன் நிறுத்த முடிவதில்லை? இப்போ காதைப் பொத்திண்டா நன்னாயிருக்காது எல்லாரும் பார்ப்பா.”
― জাগরী
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பிராமணனுடைய குதிரைக்குக் காய்ச்சல் வந்து செத்துப் போய்விட்டது. அப்பொழுது பிராமணன் பகவான் கிட்டச் சொல்றான்: "எத்தனை நாள் பகவானா இருந்திருக்கிறாய், குதிரைக்கும் கழுதைக்கும் கூடவா வித்தியாசம் தெரியல்லே?" என்று. அந்த மாதிரிதான் இருக்கு, இவ சொல்றது. பகவானுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?"
மூக்கை மூடிக்காமலே மூச்சை அடைச்சுக்க முடிகிறதே, அதேமாதிரி காதைப் பொத்திக் கொள்ளாமலே கேட்பதை ஏன் நிறுத்த முடிவதில்லை? இப்போ காதைப் பொத்திண்டா நன்னாயிருக்காது எல்லாரும் பார்ப்பா.”
― জাগরী
“இறப்பதற்கு ஒரு விநாடி முன்னால் ஒருவரின் வாழ்க்கை முழுவதும் சினிமாக் காட்சி மாதிரி கண் முன் ஓடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதை என்னால் நம்ப முடியவில்லை.”
― জাগরী
― জাগরী
“ஒரே உஷ்ணம்! ஸெல்லில் காற்றின் சுவடே இல்லை. வைசாக மாதம் முடிந்துவிட்டது. ஸெல்லுக்கு வெளியிலும் இதே அனல் தான் என்று நினைக்கிறேன். கதவின் மேல், தரையில், கம்பியைப் பிடித்துக்கொண்டு என பல விதமாக உட்கார்ந்து பார்க்கிறேன், வெளியில் உள்ள குளிர்ச்சி கொஞ்சம் எனக்குக் கிட்டுமா என்று. ஸெல்லுக்குள்ளே அடைப்பட்ட காற்றில், தலை ஒரேயடியாக கனக்கிறது. இந்த மாதிரி சமயங்களில் நான் ஒன்று கவனித்திருக்கிறேன். சில விநாடிகள் இரும்புக் கம்பிகளின் இடுக்கு வழியே மூக்கையும் வாயையும் எவ்வளவு தூரம் வெளியில் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் நீட்டி, திறந்த வெளிக்காற்றைக் கொஞ்சம் சுவாசித்தால் தலை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைந்துவிடும்.”
― জাগরী
― জাগরী
“அன்று ஒரு அஸிஸ்டென்ட் ஜெயிலர் கையில், பீலுவுக்காக ஒரு பாக்கெட் ஸைஸ் பகவத்கீதை கொடுத்தனுப்பினேன். அஸிஸ்டென்ட் ஜெயிலர் மறுநாளே அதைத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, "உங்கள் பிள்ளை இந்தப் புத்தகம் தனக்குத் தேவையில்லை. வேறு ஏதாவது நல்ல புத்தகம் இருந்தால் கொடுங்கள், படிக்கிறேன் என்று சொல்கிறார்" என்று சொல்லிவிட்டுப் போனான்.”
― জাগরী
― জাগরী
“லூஸி ஜமோதரிணி கிட்டேயிருந்து எங்க வார்டில் சில பேர் துணி தோய்க்கும் சோப்பைக் கொடுத்துப் பதிலுக்குப் பீடி வாங்கிப்பா. அந்தப் பீடியைக் கல்கட்டிக்குக் கொடுத்து அவள் அதைக் குடிக்கும் போது அவள் தொண்டையில் இருக்கிற ஓட்டை வழியாகப் புகை வரதையும் வேடிக்கை பார்ப்பா. நாலு பீடி கொடுத்தால், துணியை எடுத்துவிட்டுத் தன் தொண்டை ஓட்டையைக் காட்டுவாள்.”
― জাগরী
― জাগরী
“காம்ரேட் பனாரஸி' இன்னும் ஏதேதோ சொன்னான். எல்லாம் மனத்தில் இருக்கிறதா என்ன? பேசும்பொழுது அவர்கள் என்ன என்ன வார்த்தைகளெல்லாமோ உபயோகிக்கின்றனர். அவற்றுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதே எனக்கு விளங்குவதில்லை. என்ன சொல்கிறார்கள் என்பதே புரிவதில்லை. சாதாரண நடைமுறை பாஷை இவர்களால் பேசமுடியாதா என்ன? வீட்டிலும் இப்படித்தான் பேசுவார்களோ? அவர்களுடைய பேச்சில் பாதிக்கு மேல் எனக்கே புரியவில்லை, இவர்களுடைய அம்மா, சகோதரிகளுக்கு எப்படிப் புரியுமோ?
கதை கேட்டதில்லையா? ஒருவன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து தன் அன்னையிடமும் ஆங்கிலத்திலேயே பேசுவது என்று தீர்மானித்திருந்தானாம். அவளுக்கோ ஆங்கிலம் தெரியாது. இவன் வியாதி வந்து, தாகத்தில் உயிர் விடுகிறான். ஆனாலும் ஆங்கிலத்தில், "வாட்டர், வாட்டர்" என்கிறான். அவன் தாயாருக்கு இது புரியவே இல்லை. அதுபோலத்தான் இருக்கும் இவர்கள் நிலையும்.”
― জাগরী
கதை கேட்டதில்லையா? ஒருவன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து தன் அன்னையிடமும் ஆங்கிலத்திலேயே பேசுவது என்று தீர்மானித்திருந்தானாம். அவளுக்கோ ஆங்கிலம் தெரியாது. இவன் வியாதி வந்து, தாகத்தில் உயிர் விடுகிறான். ஆனாலும் ஆங்கிலத்தில், "வாட்டர், வாட்டர்" என்கிறான். அவன் தாயாருக்கு இது புரியவே இல்லை. அதுபோலத்தான் இருக்கும் இவர்கள் நிலையும்.”
― জাগরী
“ஒரு பூனையையும் அதன் குட்டியையும் ஒரு சட்டியிலே போட்டு மூடி, அடுப்பு மேலே வெச்சு, கீழேயிருந்து நெருப்பை மூட்டினார்களாம். கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறத் தொடங்கிப் பொறுக்க முடியாமல் போனபோது, குட்டியின் முதுகு மேலே அம்மாப் பூனை ஏறி உக்காந்துடுத்தாம்.”
― জাগরী
― জাগরী
“மாலையில் செந்நிறம் மங்குகிறது. அசோக மரத்தின் உச்சியில் மட்டும் ஆகாசத்தின் செவ்வொளி சிறிதே படர்ந்திருக்கிறது. இலைகளில் பசுமை கொஞ்சம் கொஞ்சமாக மங்குகிறது. இங்கிருந்து கண்ணில் படும் இச்சிறு பசுமையும் இன்னும் சில விநாடிகளில் மறைந்துவிடும். போகட்டும். இப்பசுமையும் ஒரு கரு நீல ஆகாயத் துண்டுமே இவ்விரும்புக் கம்பிகளின் இடையேயிருந்து தெரியும். இரும்பு டோஸ்டரில் இருக்கும் ரொட்டித் துண்டைப் போல. தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கான இந்த ஸெல்லில் இருப்பவனுக்கு இதுதான் உண்மையிலேயே ரொட்டியாகப் படும்....
ஆகயத்தின் அச்சிறு நீலத்துண்டு எனக்கு மட்டுமே சொந்தம். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிர்மல நீல ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் செய்வது போலவே வேறு யாரேனும் இந்த ஆகாயத்தின் துண்டைத் தனதாக்கிக் கொண்டிருப்பார்களா? எனது நீல ஆகாயம் விநாடிக்கு விநாடி உருமாறியவாறு இருக்கிறது. ஸிந்தூர வண்ணம் சிவப்புக் கத்திரிக்காய் நிறமாய் மாறி, பார்த்திக்கொண்டிருக்கும் போதே ஊதா நிறமாகி மங்கிவிடுகிறது. சிறிது நேரத்திலேயே எல்லாம் பேரிருளில் முழுகிவிடும். எல்லாம் இழந்த ஒரு கைதி இத்தகைய விசித்திர ரஸாநுபவங்களைத் தனதாக்கிக் கொள்வதை எப்படி இந்த ஜெயிலர் துரை அநுமதிகிறார் என்பது எனக்கு ஒரு புதிராக இருக்கிறது. ஒரு வேளை இந்த விஷயம் அவருக்குத் தெரியாதோ என்னவோ? தெரிந்துவிட்டால், நாளையே என் ஸெல்லிற்கு எதிரே உள்ள சுவரை உயர எழுப்பும்படி ஜெயில் மேஸ்திரிக்கு உத்தரவு போட்டுவிடுவார்! கட்டளைகள் பறக்கும்: "ஊம்! இன்னும் உயரமாகக் கட்டு! இன்னும் உயரமாகக் கட்டு. தேவைப்பட்டால் ஆகாயம் வரை சுவரை எழுப்பு" என்று.”
― জাগরী
ஆகயத்தின் அச்சிறு நீலத்துண்டு எனக்கு மட்டுமே சொந்தம். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிர்மல நீல ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் செய்வது போலவே வேறு யாரேனும் இந்த ஆகாயத்தின் துண்டைத் தனதாக்கிக் கொண்டிருப்பார்களா? எனது நீல ஆகாயம் விநாடிக்கு விநாடி உருமாறியவாறு இருக்கிறது. ஸிந்தூர வண்ணம் சிவப்புக் கத்திரிக்காய் நிறமாய் மாறி, பார்த்திக்கொண்டிருக்கும் போதே ஊதா நிறமாகி மங்கிவிடுகிறது. சிறிது நேரத்திலேயே எல்லாம் பேரிருளில் முழுகிவிடும். எல்லாம் இழந்த ஒரு கைதி இத்தகைய விசித்திர ரஸாநுபவங்களைத் தனதாக்கிக் கொள்வதை எப்படி இந்த ஜெயிலர் துரை அநுமதிகிறார் என்பது எனக்கு ஒரு புதிராக இருக்கிறது. ஒரு வேளை இந்த விஷயம் அவருக்குத் தெரியாதோ என்னவோ? தெரிந்துவிட்டால், நாளையே என் ஸெல்லிற்கு எதிரே உள்ள சுவரை உயர எழுப்பும்படி ஜெயில் மேஸ்திரிக்கு உத்தரவு போட்டுவிடுவார்! கட்டளைகள் பறக்கும்: "ஊம்! இன்னும் உயரமாகக் கட்டு! இன்னும் உயரமாகக் கட்டு. தேவைப்பட்டால் ஆகாயம் வரை சுவரை எழுப்பு" என்று.”
― জাগরী
“திரும்பத் திரும்ப ஏன் நீலுவின் நினைவு வருகிறது. நான் ஏதோ ஒன்றை மறக்கப் பார்க்கிறேனே, அதனாலா? சில நாட்களாக எனக்கு நானே வேண்டுமென்று திரும்பத் திரும்ப எதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேனோ அதை என் உள்மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உண்மையில் எனக்கு எதிராகச் சாட்சி சொன்னதால் நீலு தன் கடமையைத்தான் செய்தான் என்பது எனக்குத் தெரியும். தன்மானமுடைய, உண்மை நெறியைக் கடைப்பிடிக்கும் அரசியல் தொண்டனுக்கு வேறு எவ்விதமான வழியும் இல்லை. இது வறட்டு வாதம். வற்றி, உலர்ந்துபோன இதயம் இந்த வாதத்தை ஒத்துக்கொள்ளலாம். ஒருவேளை கோர்ட்டில் செல்லுபடியாகலாம். புத்தகத்தில் படித்தால் நியாயமாகக் கூடத் தோன்றலாம். ஆனால், வேறு எந்த இடத்திலும் இதற்கு இடமில்லை. இல்லாவிட்டால் நீலுவின் நினைவு சுற்றிச் சுற்றி வருவானேன்? தான் சார்ந்த கட்சியிடம் அசையா விசுவாசத்தைக் காட்டுவதற்காக தனது உடன் பிறந்த அண்ணனையே தூக்கிற்கு அனுப்பும் தன்மை அவனது இதயத்தின் ஆரோக்கியத்தைக் காட்டுகிறதா அல்லது பிணியுற்ற மனத்தைக் காட்டுகிறதா? என்னால், என்னுள் இருக்கும் உண்மையான என்னால், நீலுவின் இந்த நடத்தையை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் பழைய நினைவுகள் என்ற தேனைத் தடவி, தகிக்கின்ற மனவேதனையைச் சமனப்படுத்திக்கொள்கிறேன் போலும்.”
― জাগরী
― জাগরী
“மங்கிய மாலை ஒளி இரண்டாம் வார்ட் அசோக மரத்தின் கிளைகளிடையே ஊடுருவிக் கொண்டிருக்கிறது. பறவைகள் ஒரு விநாடி கூட ஓய்வின்றிக் கிளைக்குக் கிளை தாவி விளையாடிக் கொண்டிருக்கின்றன. சிறிது நேரத்திற்குள்ளேயே நான்கு பக்கங்களிலும் இருள் படர்ந்துவிடும். பிறகு இரவு முழுவதும் நிசப்தந்தான். இத்தனை சிறகடிப்பும் இதனாலேயே தான் என்று நினைக்கிறேன். கடைசி சில விநாடிகளில் கிட்டும் இந்த கோலாகலம், காலத்தின் கையிலிருந்து கிடைத்த மட்டும் களிப்பைப் பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆவேசந்தான்.”
― জাগরী
― জাগরী
“மேல் வகுப்பு வார்டு விசாலமான ஹால். இதில் முப்பத்துநாலு கைதிகள் இருக்கின்றனர். பத்தொன்பது பேர் ஸெக்யூரிட்டி கைதிகள், பதினைந்து பேர் அரசியல் கைதிகள். இவர்களில் சிலர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் மேலே வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. வார்டு நடுவில் கதவுக்கு அருகில் என் இடம். அறையின் நடுவில் போவோர் வருவோருக்காக வழி. இரு பக்கத்திலும் சுவர்களை ஒட்டிக் கட்டில்கள். ஒவ்வொரு கட்டிலின் மேலும் ஒரு கொசுவலை, பக்கத்தில் ஒரு மேசை நாற்காலி, புத்தகங்கள் வைக்கும் ஷெல்ஃப். முக்கால்வாசிக் கட்டில்களுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு கம்பளி விரிப்பு, மேசைகள் மேல் ஒரே மாதிரியான மேசை விரிப்பு. அதன் மேல் கண்ணாடி, சீப்பு, இத்தியாதி. இருப்புக் கம்பிகள், பூட்டுச் சாவி, வார்டர்களின் முகங்கள் கண்ணில் படாவிட்டால் இதைச் சிறைச்சாலையாகவே எண்ணமுடியாது. ஏதோ காலேஜ் மாணவர்கள் ஹாஸ்டல் மாதிரி தோன்றும்.
சென்ற ஆகஸ்டு மாதத்தில் ஹரிஹர்ஜியும் அவன் தந்தை குடுகுடுக் கிழவனும் அண்டர்ட்ரயல் கைதிகளாக இங்கே கொண்டு வரப்பட்டார்கள். ஹரிஹர்ஜியின் தந்தை இது எதுவோ தர்ம சத்திரம் என்று நினைத்துக்கொண்டு விட்டார். ஜெயில் என்பது வேறெங்கோ இருப்பதாகவும், போலீசார் இங்கிருந்து பிறகுதான் அங்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தார். கிழவர் ஒரு தரம், "எப்போ ஜெயிலுக்கு அழைத்துச் செல்வார்கள்?" என்று கேட்டேவிட்டார். இதற்குப் பிறகு சில தினங்களுக்குள்ளேயே இவரை விடுதலை செய்துவிட்டனர்.
1921-22இல் நான் வந்திருந்த ஜெயிலுக்கும் இப்போதைய ஜெயிலுக்கும் ஆகாசத்துக்கும் பாதாளத்துக்கும் உள்ள வித்தியாசம். அப்போது நான் இருந்த சாதரணக் கைதிகளின் வகுப்பில் எல்லாக் கைதிகளும் வேலை செய்தாக வேண்டும். 'சர்காருக்கு ஸலாம் போட வேண்டும்' என்ற விதியின் காரணமாக எவ்வளவு அமர்க்களம்! எங்கே போனாலும் 'மேட்'டின் கா, கா என்ற குரல் காதில் விழும், "இரட்டை வரிசையில் போ". கக்கூஸிற்குப் போனாலும் இந்த வரிசைதான். எல்லார் கையிலும் ஒரே மாதிரியான இரும்புக் குவளை. சாப்பாடு கீப்பாடு எல்லாவற்றுக்கும் இந்தக் குவளையைத்தான் உபயோதித்துக் கொள்ள வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் சங்கிலிப் பிணைப்பு, கைவிலங்கு, சாக்குத்துணி உடுப்பு (sack cloth) போன்ற தண்டனைகள். இவற்றையெல்லாம் இன்றைய நிலையுடன் ஒப்பிட முடியுமா? ஜெயிலில் நடந்து திரிதல், சாப்பாடு, தங்குதல் ஆகிய பலவற்றில் வசதிகள் அதிகரித்திருப்பதன் பின்னால் எத்தனை வீரர்களின் ஆச்சரியமூட்டும் தியாகங்கள் பொதிந்து கிடக்கின்றன! இந்த அதிகாரிகளின் மனப்போக்குத்தான் என்ன விசித்திரம்! எனக்கு உயர் வகுப்பு, என் மனைவிக்கு உயர் வகுப்பு, ஆனால் என் மகன் பீலுவுக்கு மூன்றாம் வகுப்பு.”
― জাগরী
சென்ற ஆகஸ்டு மாதத்தில் ஹரிஹர்ஜியும் அவன் தந்தை குடுகுடுக் கிழவனும் அண்டர்ட்ரயல் கைதிகளாக இங்கே கொண்டு வரப்பட்டார்கள். ஹரிஹர்ஜியின் தந்தை இது எதுவோ தர்ம சத்திரம் என்று நினைத்துக்கொண்டு விட்டார். ஜெயில் என்பது வேறெங்கோ இருப்பதாகவும், போலீசார் இங்கிருந்து பிறகுதான் அங்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தார். கிழவர் ஒரு தரம், "எப்போ ஜெயிலுக்கு அழைத்துச் செல்வார்கள்?" என்று கேட்டேவிட்டார். இதற்குப் பிறகு சில தினங்களுக்குள்ளேயே இவரை விடுதலை செய்துவிட்டனர்.
1921-22இல் நான் வந்திருந்த ஜெயிலுக்கும் இப்போதைய ஜெயிலுக்கும் ஆகாசத்துக்கும் பாதாளத்துக்கும் உள்ள வித்தியாசம். அப்போது நான் இருந்த சாதரணக் கைதிகளின் வகுப்பில் எல்லாக் கைதிகளும் வேலை செய்தாக வேண்டும். 'சர்காருக்கு ஸலாம் போட வேண்டும்' என்ற விதியின் காரணமாக எவ்வளவு அமர்க்களம்! எங்கே போனாலும் 'மேட்'டின் கா, கா என்ற குரல் காதில் விழும், "இரட்டை வரிசையில் போ". கக்கூஸிற்குப் போனாலும் இந்த வரிசைதான். எல்லார் கையிலும் ஒரே மாதிரியான இரும்புக் குவளை. சாப்பாடு கீப்பாடு எல்லாவற்றுக்கும் இந்தக் குவளையைத்தான் உபயோதித்துக் கொள்ள வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் சங்கிலிப் பிணைப்பு, கைவிலங்கு, சாக்குத்துணி உடுப்பு (sack cloth) போன்ற தண்டனைகள். இவற்றையெல்லாம் இன்றைய நிலையுடன் ஒப்பிட முடியுமா? ஜெயிலில் நடந்து திரிதல், சாப்பாடு, தங்குதல் ஆகிய பலவற்றில் வசதிகள் அதிகரித்திருப்பதன் பின்னால் எத்தனை வீரர்களின் ஆச்சரியமூட்டும் தியாகங்கள் பொதிந்து கிடக்கின்றன! இந்த அதிகாரிகளின் மனப்போக்குத்தான் என்ன விசித்திரம்! எனக்கு உயர் வகுப்பு, என் மனைவிக்கு உயர் வகுப்பு, ஆனால் என் மகன் பீலுவுக்கு மூன்றாம் வகுப்பு.”
― জাগরী
“அவளும் ஜெயில் விசிறியை வெச்சிண்டு கிட்ட உட்கார்ந்துகொண்டே தூங்கி வழியறா. நாள் பூரா அரிசி பொறுக்கிற வேலை; எப்படி ராத்திரி பூரா முழிச்சிண்டு இருக்க முடியும்? ஜெயிலுக்கு வந்துட்டால் வீட்டிலேயே தூக்கம் கீக்கம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டாள் என்று அர்த்தமா? அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிவிட்டாள் அவள்? உதவாக்கரைப் புருஷனின் கொடுமை தாங்காமல் தற்கொலை பண்ணிக்கப் பார்த்தாள். கத்தியாலே தன் தொண்டையைத் தானே அறுத்துக்கொண்டாள். நினைச்சாலே கை, காலெல்லாம் நடுங்கறது எனக்கு. இப்பக்கூட அவ கழுத்துப் பக்கம் பார்க்க முடியறதில்லே என்னாலே. ரணம் எதுவுமில்லை, ஆனால் அவள் குரல்வளையில் சின்னதாக ஒரு துவாரம் தெரிகிறது. உள்ளே பார்க்க முடியும். இந்த துவாரத்தை மறைக்க இருபத்துநாலு மணிநேரமும் ஒரு சின்னத் துணியைக் கட்டி வெச்சிருக்கா. "இந்தத் துணி இல்லேன்னா, பேசற போது 'புஸ் புஸ்'னு துவாரம் வழியாக் காத்து வறது. சாப்பிடற போது சாப்பாட்டுச் சாமானெல்லாம் வெளியே வந்துடறது" ன்னு சொல்லுவா.
ஏதாவது குடிக்கும்போது ஜலம் பட்டு இந்தத் துணி லேசா ஈரமாயிடறது. பார்த்தியா இவள் தலைவிதியை? செத்துப் போயிருந்தா அவளும் பொழச்சிருப்பா, அவ புருஷனுக்கும் நிம்மதியா இருந்திருக்கும். அவ செத்தும் போகல்லே. தற்கொலை பண்ணிக்கப் பார்த்ததுக்காக ஒரு வருஷம் தண்டனை. இவாளோட சட்டத்தின் அழகை பார்த்தியா? தன்னுடைய உயிரை விடக்கூட அதிகாரம் இல்லை. யாரு சாகக்கூடாதுனு இருக்காளோ அவாளுக்குத் தூக்கு தண்டனை. யார் சாகனும்னு ஆசைப்படறாளோ அவாளைப் பிடிச்சு இழுத்துண்டு வந்து ஜெயிலில் வைக்கிறது.”
― জাগরী
ஏதாவது குடிக்கும்போது ஜலம் பட்டு இந்தத் துணி லேசா ஈரமாயிடறது. பார்த்தியா இவள் தலைவிதியை? செத்துப் போயிருந்தா அவளும் பொழச்சிருப்பா, அவ புருஷனுக்கும் நிம்மதியா இருந்திருக்கும். அவ செத்தும் போகல்லே. தற்கொலை பண்ணிக்கப் பார்த்ததுக்காக ஒரு வருஷம் தண்டனை. இவாளோட சட்டத்தின் அழகை பார்த்தியா? தன்னுடைய உயிரை விடக்கூட அதிகாரம் இல்லை. யாரு சாகக்கூடாதுனு இருக்காளோ அவாளுக்குத் தூக்கு தண்டனை. யார் சாகனும்னு ஆசைப்படறாளோ அவாளைப் பிடிச்சு இழுத்துண்டு வந்து ஜெயிலில் வைக்கிறது.”
― জাগরী
“பேசுவதற்கு ஆள் இல்லை. ஆகவே இந்த ஸெல்லிற்கு வெளியே இருக்கும் ஜெயில் உலகத்துக்கும் எனக்கும் உள்ள ஒரே உறவு என் காதுதான்.”
― জাগরী
― জাগরী
“இது வறட்டு வாதம். வற்றி, உலர்ந்துபோன இதயம் இந்த வாதத்தை ஒத்துக்கொள்ளலாம். ஒருவேளை கோர்ட்டில் செல்லுபடியாகலாம். புத்தகத்தில் படித்தால் நியாயமாகக் கூடத் தோன்றலாம். ஆனால், வேறு எந்த இடத்திலும் இதற்கு இடமில்லை.”
― জাগরী
― জাগরী
“கொஞ்சம் ஜலத்தை வாயில் விட்டுக் கொப்பளித்து வெளியே துப்புகிறேன், சுவரும் தரையும் சேருமிடத்தில் உள்ள ஒரு சிறு செடியின் மேல் தண்ணீர் விழும்படி. தினமும் இப்படிக் கொப்பளித்து, தண்ணீர் தெளித்து இந்தச் செடியை வளர்க்க முயன்று வருகிறேன். ஒவ்வொரு தடவை வாயை அலம்பும்போதும் எவ்வளவு அதிக தூரம் தண்ணீரைத் துப்ப முடியும் என்று பரிசோதனை செய்கிறேன். இப்பொழுதெல்லாம் ஒரு மாதிரி 'குத்து மதிப்பாய்' அநுமானம் ஏற்பட்டுவிட்டது. நின்றுகொண்டு, உட்கார்ந்தபடியே, வாயின் கோணங்களை மாற்றிக் கொண்டு, எவ்வளவு தூரம் தண்ணீர் துப்ப முடியும் என்று பல வகைளில் எனக்கு நானே போட்டி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய முந்திய 'ரிகார்ட்களை'த் தகர்ப்பதற்கு முயற்சிகள் செய்து வருகிறேன். பிற்பகலில், வெளியில் ஸிமென்ட் தரையின் மீது வெயில் கொளுத்தும்போது, கொப்பளித்து அதன் மேல் துப்புவேன். பிறகு ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்குவேன், ஜலம் இருந்த இடம் தெரியாமல் வற்றிவிட எவ்வளவு நேரமாகிறது என்று கண்டுபிடிக்க.”
― জাগরী
என்னுடைய முந்திய 'ரிகார்ட்களை'த் தகர்ப்பதற்கு முயற்சிகள் செய்து வருகிறேன். பிற்பகலில், வெளியில் ஸிமென்ட் தரையின் மீது வெயில் கொளுத்தும்போது, கொப்பளித்து அதன் மேல் துப்புவேன். பிறகு ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்குவேன், ஜலம் இருந்த இடம் தெரியாமல் வற்றிவிட எவ்வளவு நேரமாகிறது என்று கண்டுபிடிக்க.”
― জাগরী
“இந்தச் சிறுமையைத் தாங்கிக்கொண்டு வாழ்வதைவிட உயிர் துறப்பதே மேல் என்ற எண்ணம் எழுந்தது. சரி, இன்று இரவே பொட்டாஷியம் ஸயனைடைச் சாப்பிட்டு விடுவோம். இவ்வாறு எண்ணிக்கொண்டு ஜில்லா காங்கிரஸ் ஆபீஸ் கடிகாரம் பல மணிகளை அடிக்கும் வரை விழித்துக்கொண்டே இருந்தேன்.
கடைசி நிமிஷத்தில், "சரி, இன்று வேண்டாம். திடீரென்று ஏற்பட்ட அற்ப ஆசையான லேடீஸ் ஆஃப்டர்நூன் பிஸ்கட்டைத் தின்கிற ஆவலைத் தீர்த்துக் கொண்டுவிட்டு, நாளை செய்து கொள்ளலாம்" என்று தீர்மானித்து விட்டேன். மறுநாள் என் மனம் மாறிவிட்டது. இதை நினைத்து எவ்வளவோ தடவை சிரித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று மட்டும் ஸயனைட் இருந்தால் கட்டாயம் சாப்பிட்டிருப்பேன். இது நானாக வலுவில் செய்துகொள்ளும் தற்கொலையல்லவே? ஏதோ தவிர்க்க முடியாத விபத்தில் இருந்து என்னைத் தப்புவித்துக் கொள்ளும் உபாயம் இந்த ஸயனைட்.”
― জাগরী
கடைசி நிமிஷத்தில், "சரி, இன்று வேண்டாம். திடீரென்று ஏற்பட்ட அற்ப ஆசையான லேடீஸ் ஆஃப்டர்நூன் பிஸ்கட்டைத் தின்கிற ஆவலைத் தீர்த்துக் கொண்டுவிட்டு, நாளை செய்து கொள்ளலாம்" என்று தீர்மானித்து விட்டேன். மறுநாள் என் மனம் மாறிவிட்டது. இதை நினைத்து எவ்வளவோ தடவை சிரித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று மட்டும் ஸயனைட் இருந்தால் கட்டாயம் சாப்பிட்டிருப்பேன். இது நானாக வலுவில் செய்துகொள்ளும் தற்கொலையல்லவே? ஏதோ தவிர்க்க முடியாத விபத்தில் இருந்து என்னைத் தப்புவித்துக் கொள்ளும் உபாயம் இந்த ஸயனைட்.”
― জাগরী
“வார்டர், உட்கார்ந்தபடியே தூங்கி விழுகிறான். எனக்கு மிகவும் பரிச்சயமான பூனை மெதுவாக என் பக்கம் வருகிறது. திடிரெனத் திடுக்கிட்டு நிற்கிறது. ஒரு வேளை, நான் கதவுக்கு அருகில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு உள்ளே வருவதற்குப் பயப்படுகிறது போலும். ஒவ்வோர் இரவும் என் தட்டை நக்குவதற்காக வரும். வாரத்தில் ஒரு நாள் தயிர் கிடைக்கும். மற்ற தினங்களில் எதை நக்குகிறதோ? ஜெயிலில் வளர்ந்ததால் சைவ உணவு சாப்பிடும் வழக்காமாகிவிட்டது.”
― জাগরী
― জাগরী
“ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சாதாரணமாக நல்ல மனிதர்கள். பக்காத் திருடர்களிடமுள்ள சிறுமைத்தனமும் அயோக்கியத்தனமும் இவர்களிடம் கிடையா. ஜெயிலையே தங்கள் வீடாக்கிக் கொண்டுள்ளார்கள். ஒரு 'லைஃபர்' ஜெயில் அங்கணத்தில் ஒரு துளசிச் செடியை நட்டுத் தண்ணீர்விட்டுக் காப்பாற்றி வருகிறான். மற்றும் சிலர் தங்களுக்கென ஓர் இடத்தைச் சுத்தம் செய்து தங்கள் பிரத்தியோக உபயோகத்திற்கு என்று வைத்துக் கொண்டுள்ளார்கள். மற்றும் சிலர் தங்களுக்கே சொந்தமான மிளகாய் செடிகளை வளர்க்கின்றனர். இச்செடிகளிடம் இவர்களுக்கு எவ்வளவு ஆசை அஞ்ஞானம்! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் பொழியும் வாத்ஸல்யம், ஆசை, கனிவு, எல்லாவற்றையும் இந்தச் செடிகளின் மேல் இவர்கள் கொட்டுகின்றனர்.
ஹஸாரிபாக் ஜெயிலில் அந்த ஆங்கிலோ-இந்தியன் வில்லியம்ஸ், அவனை விடுதலை செய்த தினத்தில் எப்படி அழுதான்? பதினாலு வருஷம் அந்த ஜெயிலில் கழித்திருந்தான். அவன் நட்டிருந்த கொய்யாச் செடி எவ்வளவு பெரிதாகிவிட்டது! அவன் நட்ட குலாப் ஜாமுன் மரமும் பௌடர் பஃப் மாதிரி மிருதுவான மலர்களைப் பொழிந்து கொண்டு நின்றது. அசோக மரத்தடியில் இருந்த உட்காரும் மேடை அவன் எழுப்பியதுதான்....வில்லியம்ஸ் தனது மேடை, மரங்கள் எல்லாவற்றையும் கடைசி முறையாகப் பார்த்துவிட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டான். இந்த மாதிரி வயதான ஒருவர் மனமுடைந்து அழுவதை நான் அதிகம் பார்த்தவன் அல்ல. வீடு திரும்பித் தனது உற்றார் உறவினரைப் பார்க்கப் போவதில் உள்ள ஆனந்தத்தைவிட அந்தச் செடிகள், ஜெயிலில் உள்ள சிநேகிதர்கள், ஆகியோரை விட்டுச் செல்வதில் உள்ள துக்கம் அவனுக்கு அதிகமாயிருந்தது.”
― জাগরী
ஹஸாரிபாக் ஜெயிலில் அந்த ஆங்கிலோ-இந்தியன் வில்லியம்ஸ், அவனை விடுதலை செய்த தினத்தில் எப்படி அழுதான்? பதினாலு வருஷம் அந்த ஜெயிலில் கழித்திருந்தான். அவன் நட்டிருந்த கொய்யாச் செடி எவ்வளவு பெரிதாகிவிட்டது! அவன் நட்ட குலாப் ஜாமுன் மரமும் பௌடர் பஃப் மாதிரி மிருதுவான மலர்களைப் பொழிந்து கொண்டு நின்றது. அசோக மரத்தடியில் இருந்த உட்காரும் மேடை அவன் எழுப்பியதுதான்....வில்லியம்ஸ் தனது மேடை, மரங்கள் எல்லாவற்றையும் கடைசி முறையாகப் பார்த்துவிட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டான். இந்த மாதிரி வயதான ஒருவர் மனமுடைந்து அழுவதை நான் அதிகம் பார்த்தவன் அல்ல. வீடு திரும்பித் தனது உற்றார் உறவினரைப் பார்க்கப் போவதில் உள்ள ஆனந்தத்தைவிட அந்தச் செடிகள், ஜெயிலில் உள்ள சிநேகிதர்கள், ஆகியோரை விட்டுச் செல்வதில் உள்ள துக்கம் அவனுக்கு அதிகமாயிருந்தது.”
― জাগরী
“ஆனால் பொட்டாஷியம் ஸயனைட் சாப்பிடுவதும் அவ்வளவு சுலபமானதல்ல. அந்தச் சமயம் என்னால் முடியவில்லையே?”
― জাগরী
― জাগরী
“காலில் ஒரு படுகாயம். தொட்டால் வலிக்கும் என்ற பயத்தால் தொடவில்லை. தெருவில், குளத்துப் படிகளில், சந்தைகளில் மூடி மறைத்து வைத்திருக்கும் ரணம், வீட்டுக்குள் வந்தவுடன் ஒரு மேஜையில் இடிபட்டுத் துடிதுடிப்பது போல இருக்கிறது இப்போதைய என் நிலைமை. இந்த ரணத்தை ஆழமான மறதி என்ற அஞ்சனத்தையோ, தர்க்கம் என்ற களிம்பையோ தடவி மூடி மறைக்க முடியாது.”
― জাগরী
― জাগরী




