இதுவரை நான் எழுதிய நாவல்கள் அனைத்தும் இலகுவான அல்லது காத்திரமான கருவைக் கொண்டவையாக, என்னைச் சுற்றியுள்ள, நான் அறிந்த கேள்விப்பட்ட கதை மாந்தர்களையும் சந்தர்ப்பங்களையும் கொண்டு எழுதப்பட்டவையாக இருப்பினும், அங்கே, என் விருப்பும் கற்பனையும், ஏன் என் வாசகர்களின் விருப்பும் ஓரளவேனும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.