மணிப்பூர் அம்மாக்களும், தமிழக தந்தைகளும்…

இன்றைய நிர்வாண போராட்டம் இந்தியாவிற்கு புதிது அல்ல.





விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்திற்கு பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. இதில், ஆளும் கட்சியை ஆதரிக்கும் பக்தர்கள் சிலர், தமிழகமே தலை குனிந்தது. தமிழர்கள் தலை கவிழ்ந்தது என்று பாடி வருகிறார்கள்.





ஒரு தேசத்தின் தலைநகரில் அந்த தேசத்தின் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் அம்மணமாக போராடியது எப்படி அந்த மாநிலத்தின் அவமானம் என்று பேச முடிகிறது இவர்களால் ? இது ஒட்டு மொத்த இந்தியாவிற்கே அவமானம்தானே ? மணிப்பூர் பெண்கள் “இந்தியன் ஆர்மி ரேப்புடு அஸ்” என்று பதாதைகளை நிர்வாணமாக நின்று போராடியதை இந்த தேசம் மறந்துவிட்டதா என்ன ? அன்று மணிப்பூர் அம்மாக்கள். இன்று தமிழகத்தின் தந்தைகள். அவ்வளவுதான்.





தமிழகமே தலை குனிந்தது. தமிழர்கள் தலை கவிழ்ந்தது என்று ஏன் இந்தியாவிடமிருந்து தமிழ்நாட்டை பிரித்து பேசுகிறீர்கள் ? இப்படி பேசுபவர்களை நாம் இந்திய தேசியவாதி என்று கூறலாமா ?





தலை கவிழ்ந்து அம்மணமாக நிற்பது அந்த பாரத மாதாவேதானேத் தவிர தமிழ்நாடோ தமிழர்களோ அல்ல.





பொன் ராமச்சந்திரன் எழுதிய கவிதைதான் நினைவிற்கு வருகிறது..





நாங்கள் தமிழர்கள்


உலக நாடுகள் அவையில்


யாதும் ஊரே யாவரும் கேளிர்


கணியன் பூங்குன்றன்


வரிகளே உங்களை வரவேற்கும்





உலக மொழிகளில்


முதல் மொழியாம்


எங்கள் தமிழில்


திருவள்ளுவர் தந்த


திருக்குறளை


அறிஞர்கள், அறிந்தவர்கள்


எல்லாம் போற்றுகிறார்கள்


உலகப் பொதுமறை இதுவே என்று.





ஆனால் நாங்கள்


வாலறிவன் தாளை வணங்காது


வந்தேறிகள் காலைக் கழுவினோம்


குடித்தோம்.


தறுதலைகள் காட்டிய கல்லைக்


கடவுள் என நம்பினோம்


தந்திரச் சொல்லை எல்லாம்


மந்திரம் என ஏற்றோம்.





உலகம் மேலே ஏறஏற


மேலே இருந்த நாங்கள்


வீழ்ந்தோம் படுகுழியில்.


மூடத்தனத்தின் எல்லைக்கோட்டில்


விழிமூடிக் கிடந்தோம்


பகுத்தறிவுப் பகலவன்


சூட்டொளிப் பட்டு


குதித்தெழுந்தோம்.





அழுக்கு முதுகுக் கயிறுகள்


இழிவுபடுத்திய போது


பகுத்தறிவு வாளால்


அறுத்துப் போட்டோம்.





விறுவிறுவென உயர்ந்தோம்


கல்வியில் பொருளில்


பதவியில் புகழில்


ஆனால்


பகுத்தறிவில்…?





நேற்று கயிறு கட்டினோம்


இடுப்பில்


மானம் காக்கும்


கோவணத்திற்காக





இன்றும்


கருப்பு பச்சை


சிகப்பு மஞ்சள்


கிளிஞ்சல்கள் மணிகள்


பொம்மைகள் சொருகிய


முடிச்சிட்டக் கயிறுகளை


கோயில் தெருக்களில் வாங்கி


கட்டுகிறோம்


இடவலக் கைகளில்


மூடத்தனம் காட்ட.





பச்சைக் குழந்தை


பழுத்த முதியவர்


படிக்காத பாமரன்


பெரும் படிப்பாளி


தொழிலாளி முதலாளி


ஏழை பணக்காரன்


நீதிபதி குற்றவாளி


அரசு அலுவலர்கள்


அமைச்சர்கள்


ஆளப்படுவோர்


கைகளில் எல்லாம்


கைஞ்ஞாண்!





எல்லாரும் கோவணம் கட்டாதவர்களாய்.





[image error]இந்திய நாட்டின் பிரதமர் விவசாயிகளின் பிரச்சினையை இந்திய விவசாயிகள் சங்கத் தலைவி ஏமா மாலினியிடம் கைகட்டி விசாரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2017 09:10
No comments have been added yet.