கொலு கொலு சுண்டல்…..

நவராத்திரி கொலு கொலு சுண்டல்… நவராத்திரி கொலு கொலு சுண்டல்….
நவராத்திரி கொலு கொலு சுண்டல்… நவராத்திரி கொலு கொலு சுண்டல்….

கொலு கொலு சுண்டல்…கொலு கொலு சுண்டல்….



அப்போதெல்லாம் கொலு வைக்கும் வீட்டில் இப்படி பாடிக்கொடே சுண்டல் சாப்பிட வருவார்கள் சிறுவர்கள். அதுமட்டுமின்றி உறவினர்கள் நண்பர்களை கொலுவிற்கு அழைப்பது பழக்கம். வீட்டில் நல்ல காரியம் நடப்பதற்கு சமமாக இதை பாவித்து செய்வார்கள். 9 மரப் படிக்கட்டுகள் வைத்து ஐந்து பெரிய பெட்டிகள் அடங்கிய பொம்மைகள் வைத்து எங்களது கும்பகோணத்து இல்லத்தில் நவராத்திரியை கொண்டாடுவோம். தற்போது அந்த கொலு பொம்மைகளை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு கொடையாக கொடுத்துவிட்டோம். எங்கள் தெருவிலேயே ஓரளவிற்கு பெரிய மற்றும் அதிக படிக்கட்டுக்கள் கொண்ட கொலு வீடு எங்களுடையதுதான். பொம்மையை பராமரிப்பதற்கே பொறுமை வேண்டும்.


 


இன்று …. கொலுபொம்மைகளை பார்த்து காலை ஸ்பென்சர் பிளாசாவின் உள் அரங்கினுள் கொஞ்ச நேரம் நின்றுவிட்டேன். எல்லாம் நினைவிற்கு வந்தன. மெழுகுவர்த்தி வச்சி படகு விட்டதை, சுண்டல் சாப்பிட்டதை, அட்டப்பெட்டியில பொம்மைய பேப்பர் சுத்தி மேல ஏத்தி வச்சதை, கொலுப் படிக்கு முன்னாடி பூங்கா அமைச்சதை, லைட்டு போட்டதை, பலகை மேல் ஏறி வேஷ்டியை விரிச்சி விரிச்சி மேல உத்தரம் வரைக்கும் ஏறியதை என்று ஆசை தீர ரிவைண்ட் பண்ணி ரிவைண்ட் பண்ணி பார்த்தேன். அது ஒன்றுமட்டுந்தானே இப்போதைக்கு சாத்தியம். கொலு கொலு சுண்டல்… கொலு கொலு சுண்டல்…. என்று மனதினுள் பாடிக்கொண்டே வந்தேன், ஆனால் சுண்டல் கொடுக்கத்தான் யாருமேயில்லை.

பஞ்சுமிட்டாய் வாங்கித்தான்னு கேட்டு அது கெடைக்காத கொழந்த அந்த பஞ்சுமிட்டாயையே அப்படியே ஏமாற்றத்தோட பார்க்கும் ஒரு பார்வை. அதே போல் கொலுவை யாராலும் இனி எனக்கு வாங்கித்தந்துவிட முடியாது.


ஏனென்றால் இது ஆண்டவன் கணக்கு அல்ல. ஆண்டவன் கட்டளை.






[image error] [image error]






 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2016 03:24
No comments have been added yet.