சூப்பர்வைசரும்…மத்தியான சாப்பாடும்….

இது நான்…

அண்ணே… சாப்பாடு ஆச்சாண்ணே…


 


அவர்


ஆச்சு ஆச்சு அதுதான் வேளாவேலைக்கு ஆகுதுள்ள….


 


இது நான்..


என்ன சாப்பாடு ?


 


அவர்


சம்பா கோதுமை கஞ்சி…


 


இது நான்..


ஓஓ…


 


அவர்


எங்க சாப்புட்டீக…


 


இது நான்…


இங்க தான்.. சரவணபவன்ல…


 


அவர்..


சசீ… அந்தஸ்து சாப்பாட்டுக்காரன் சாப்புடுற இடமா ?


 


இது நான்


என்னன்ன இப்படி சொல்லிப்புட்ட ? தமிழ்நாட்டுக்கே சோறுபோடுற ஊர்லேந்து வாறேன்… சோறு எங்க கிடைச்ச என்ன ?


 


அவர்..


வக்கனையா 40 ரூவா சாப்பாட்ட 130 ரூவாய்க்கு சாப்ட்டீயே… சோறு ஒன்னு ஒன்னும் ஒட்டிக்கிடவே ஒட்டிக்கிடாது அவன் கடையில. உடம்புக்கு அத்தனையும் ஆகாது.


 


இது நான்..


ஆமாம்.. ஒட்டிக்கிடல. பொன்னியா இருக்கும்.


 


அவர்


எல்லா பயலுக்கும் சோத்து ருசி இல்லாம போச்சு. நா திருவண்ணாமலைக்காரன். காரை அரிசி கேள்விப் பட்டிருக்கியா ? சோத்த திண்ணுதுக்கு அப்பறம்… கைய மோந்து பாத்தா ஆப்பிள் வாசனை அடிக்கும். 40 வருசத்துக்கு முன்னாடி இங்க சென்னையில கெடச்சிது. இப்போ திருவண்ணாமலையில தேரடி வீதியில கெடைக்கிது. ஒரு கிலோ வாங்கி பொங்கி திண்ணு பாரு. சோறா போடுறானுவ இங்க … கேட்டா மெட்ரோவாம்.. சிட்டியாம்…. எல்லா கெடைக்கிது வயித்துக்கு நல்ல சோறு இல்ல….




 


இது நான்…


அண்ணே இப்புடி கோவப்பட்டுப்புட்ட ?


 


அவர்..


உங்க ஊரு கைகுத்தல் அரிசி சாப்பிட்டுருக்கியா ? உங்க ஊரு சம்பா அரிசி சாப்பிட்ருக்கியா ? சாப்பிட்டுருக்க மாட்ட… நீ சாப்புடுறது எல்லாமே மைசூர் பொன்னி…. சின்ன வயசுல ஐஆர் இருவது சாப்பிட்டுருப்ப.. அப்போ விலை வாசியும் சம்பாத்தியமும் அவ்வளவுதான்… இப்ப அப்படி இல்ல. சம்பாவையே பிரியாணி அரிசி அளவுக்கு சமச்சி சாப்புட நினைக்கிறானுவ.


 


இது நான்…


சரிதான். நீங்க சொல்றது எல்லாமே சரிதான். என்னச்செய்ய… சம்பாத்தியம் இருக்கற அளவு அரிசி விலை வாங்கணும்ன்னு முடிவு பண்ணிடறான்…


 


அவர்..


நீங்க வாங்குறதுனாலத்தான்டா அவன் விக்கிறான். கேப்ப, கேழ்வரகு இதையெல்லாம் மளிகை கடையில வாங்குன காலம் போய் டயட் சென்டர்ல வச்சி ஆயிரக்கணக்குல விக்கிறான். நீங்களும் அந்தஸ்துக்காக அதையெல்லாம் வாங்கி திண்ணு எல்லா திருட்டுப்பயலுகளையும் பணக்காரன ஆக்கிடறீங்க.


 


இது நான்…


இவ்வளவு பேசிறீயேண்ணே.. யாருனே நீ… எங்க இருக்க…


 


அவர்..


திருவண்ணாமலை வெவசாயி. இப்போ… ஷாப்பிங் மால் சூப்பர்வைசர். போ… போய் அந்த லட்சிய வாழ்க்கைய வாழ்ந்திடு…

இது நான்…


இப்போதாண்ணே நீ நல்ல வார்த்தை பேசியிருக்க… ஆனா.. நீ சொன்னது எல்லாமே உண்மைதான்.


 


அவர்..


போ… அரியலூர் வந்திடுச்சு… போய் ஊர் சேரு. இனிமே பெரிய கடையில.. போய் சாதாரண அரிசிய தங்க விலை கொடுத்து சாப்புடாதீங்க…. வெதச்சவன் பிச்சையெடுக்குறான்… விக்கிறவன் பங்களா கட்டுறான்… இந்த மாச சம்பளம் கூட இன்னும் வரல…. இந்த நாட்டோட நிலை இன்னும் மோசமா போகும். நம்ம எதிர்கால சந்ததிக்கு நாம ஏதுமே பண்ணப்போறதில்ல. நாம நல்லா வாழ்ந்தோம் … சாப்பிட்டோம். அதுங்களுக்கு அது கிடைக்கவே கிடைக்காது. ஆனா… ஊர் முழுக்க பணக்காரனுங்க கூட்டம் மட்டும் இருக்கும்.


 

…….


வெவசாயத்த விட்டு நகரவாழ்க்கையில பொழப்பு நடத்துற ஒவ்வொரு வெவசாயியோட மனசும் இப்படித்தான் தீயா எறிஞ்சிக்கிட்டு இருக்கும் போல.



 



 


 


 


 


 


 


 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 09, 2016 08:50
No comments have been added yet.