எசாலம் செப்பேடு

 சிவபெருமானின் திருவடிகளில் பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்த இராஜேந்திர சோழரின் பிறந்த நாள் இன்று 12 ஆகஸ்ட் ...

--------------------------------------------------------------------

விழுப்புரம் மாவட்டம், எசாலம், இராமநாத ஈஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 


"எசாலம் செப்பேட்டின்"‌‌ காலம்: 

பொது ஆண்டு 1027 


கண்டெடுக்கப்பட்ட நாள்:

11.08.1987


செப்பேட்டின் தற்போதைய இருப்பிடம்: தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலகம், எழும்பூர், சென்னை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


எசாலம் செப்பேட்டின் வடமொழி சுலோகத்தின் ஒரு பகுதி, இராஜேந்திரச் சோழரை இப்படியாகப் புகழ்கிறது...

*******************************************


“ராஜராஜனுடைய மகனான ராஜேந்திர சோழன் சௌந்தர்யத்தின் திருமாளிகை. வீரத்தின் விசால விளையாட்டுத் திடல். துணிவு, பேரறிவு, காதல், கருணை போன்றவற்றின் பிறப்பிடம். உலக உயிர்களை மகிழ்விக்கும் சக்ரவர்த்தி. கல்வியாகிய நதிக்குக் கடல் போன்றவன். உதயத்தின் இருப்பிடம்.


சாளுக்கிய அரசனான ஜெயசிம்மனை போர்க்களத்தில் தோற்கடித்து அவன் புகழை மங்கச் செய்தான். வீரம் நிறைந்த தம் படைவீரர்களாலும் கீர்த்தியாலும் திசைகளை மறைத்தான். எடுப்பான நகில்களை உடையவளும் குணங்கள் நிறைந்தவளுமான கங்கையை தன் நாட்டிற்குக் கொண்டு சென்றான். செல்வத்தை அடைந்த அவன் கடினமின்றியே கங்கை நீரை பெற்றதினால் ஆகாய கங்கையைக் கொண்டு வந்த பகீரதனை வென்றவன் ஆனான்.


நற்குணங்களின் தொகுதியான ராஜேந்திர சோழன் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினான். சிவபெருமானின் திருவடிகளில் பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்தான்.”





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2023 07:30
No comments have been added yet.