மதுரையில்
மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் இன்றும் நாளையும் இருப்பேன். மதுரை எனக்கு எப்போதும் நெருக்கமான நிலம். சகோதரர்கள் நிரம்பிய ஊர். எங்கே, யாருடன் சாப்பிடுவது என்று முடிவெடுப்பதே சிரமமாய் இருக்கும். உபசரிப்புக்கு குறைவைக்காத விருந்தோம்பல் மாண்புடையவர்கள்.
இம்முறை திருவாதவூர் செல்ல வேண்டும்.. மணிவாசகர் சந்நிதியில் அமர்ந்திருந்து “யானே பொய், என் நெஞ்சும் பொய்” என்று பாடவேண்டும் போல் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆதீரன் பிறப்பதற்கு முன்னர் மனைவியோடு சென்றது. அம்மையே அப்பா என்று பாடிவிட்டு எழுந்து வந்தால் போதும்.
ஒரு ஈழப்படைப்பாளியாக மதுரைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஈழ இனப்படுகொலைக்கு பின்பாக தமிழ்நாட்டின் அறிவுச்சூழலில் ஈழ இலக்கியம் குறித்து தீவிரமான உரையாடலை தோற்றுவித்தது மதுரையில் இயங்கிய கூழாங்கற்கள் இலக்கிய அமைப்புத்தான். கவிஞர் கடங்கநேரியான் முன்னெடுப்பில் அணியம் ஆனவர்கள் அனைவரும் ஈழத்தோடும் ஈழ இலக்கியங்களோடும் தார்மீகமான உணர்வோடு கலந்தவர்கள். எப்போதும் அவர்கள் ஒவ்வொருவரையும் நினைத்துக்கொள்வேன்.
மதுரையே வருகிறேன்!
The post மதுரையில் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

