மாலையில் அரங்கு நிறைந்த அவையில் இரா.முருகனைப் பற்றி அகரமுதல்வன் இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஒரு கூத்துக்கலைஞனின் கூற்று வழியாக படம் விரிவடையும் விதம் அற்புதமான அனுபவமாக இருந்தது. கனவுகளைப்பற்றியும் மாயங்களைப்பற்றியும் விசித்திரங்களைப்பற்றியும் ஏராளமாக எழுதி நிலைத்திருக்கும் இரா.முருகனைப்பற்றிய ஆவணப்படமும் ஒரு கனவுக்காட்சியைப்போல மாயத்தன்மையோடு அமைந்திருந்தது. அகரமுதல்வனின் ஆற்றலைப் புரிந்துகொள்ள இந்தப் படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும் என்று குறிப்பிடத் தோன்றுகிறது.
விழாவில்… பாவண்ணன்
The post விழாவில் first appeared on அகரமுதல்வன்.
Published on January 04, 2025 09:48