நான் குழந்தையாகவிருந்தேன்
பழைய காயத்தின் தழும்பைப் போல
வளர்ந்தேன்
ஆயுளின் தொடக்கத்திலேயே
நான் செய்த
முதல் குற்றமும் இதுவே
காற்றின் நெஞ்சில்
பறந்து வீழும்
இறகின்
தத்தளிப்புச் சுமையை
தாங்கவியலாத
பழுத்த இலையைப் போல
இப்போது நான்
நடுங்கியிருக்க வேண்டாம்.
நானோர் குற்றம் இழைத்தேன்
திரும்பிச் செல்லவியலாத
என் காயத்தின் தணல் சிவப்பில்
குழந்தையாக
புன்னகைக்க மறந்துவிட்டேன்.
அதற்காக
இன்னும் எத்தனை காலம்
வெறித்தபடி
நிற்கவேண்டும்.
The post குழந்தையாக… first appeared on அகரமுதல்வன்.
Published on January 14, 2025 23:22