01
நிலவு மங்கிய
நள்ளிரவில்
மலர்ச்செடியொன்றை
பதியம் வைத்தேன்.
கண்ணீராலும்
குருதியாலும்
ஈரலிக்கும்
நிலத்தில்
மலரும்
பூ
மலரும்.
02
குழந்தை உறங்கும் தொட்டிலில்
அமர்ந்திருக்கிறது வண்ணத்துப்பூச்சி
மொக்கில் தேனருந்தும்
ஒரு சரித்திரத்தின் தொடக்கத்திற்காக
எப்போதும் காத்திருக்கிறது
காலம்.
The post மலரும் பூ மலரும் first appeared on அகரமுதல்வன்.
Published on January 16, 2025 21:03