Pa Raghavan
நீ வேறு, நான் வேறு
கடந்த மே மாதம் 9 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பலூசிஸ்தான் மாகாணம் தன்னை விடுவித்துக்கொண்டதாக அறிவித்தது. பலூசிஸ்தான் என்கிற பிராந்தியம் குறித்தும் அதன் பிரச்னைகள் குறித்தும் உலகம் சற்றே விரிவாகத் தெரிந்துகொள்ள அமைந்த முதல் தருணம் அது.
1948 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தானின் விடுதலைப் போராட்ட வரலாறு மிக நீண்டது; தீவிரமும் தகிப்பும் கொண்டது. கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. விரிவான ஆய்வுக்குப் பிறகு மெட்ராஸ் பேப்பர் வார இதழின் தினசரிப் பகுதியில் இதனைத் தொடராக எழுதினேன்.
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு இப்போது ஜீரோ டிகிரி பிரசுரம் மூலம் புத்தகமாக வெளிவருகிறது.
அக்டோபர் 13 ஆம் தேதி புத்தகம் வெளியாகிறது. முன்பதிவு செய்வோருக்கு முப்பது சதவீத சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புத்தகத்தை முன்பதிவு செய்ய இங்கே செல்க.
முன்பதிவு செய்வோருக்கு அக்டோபர் 13 ஆம் தேதி பிரதியில் கையெழுத்திட்டு அனுப்பிவைப்பேன்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
Published on October 09, 2025 11:19