Pa Raghavan
கடந்த ஜனவரியில் ‘சலம்’ எழுதி முடித்ததும் அதன் பிடியிலிருந்து விடுபடுவதற்காக எழுதிய நாவல் மிருது. சலத்தின் உக்கிரம், ஆக்ரோஷம், தகிப்பு அனைத்திலிருந்தும் முற்றிலும் விலகி, தொட்ட இடமெல்லாம் வருடித்தரும் விதமாக இதனை எழுதினேன். ஒரு கொண்டாட்ட மனநிலையில் எழுதியது எனலாம். இந்நாவலில் கூடி வந்திருக்கும் நகைச்சுவை இதற்குமுன் எனக்கு ஒரு புனைகதையில் அமையாதது. அது தானாக நேர்ந்தது. அதனாலேயே இது எனக்கு மிகவும் பிடித்த நாவலாகிப் போனது.
மிருது, அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகிறது. என்னுடைய அனைத்துப் புத்தகங்களையும் வெளியிடும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் இதையும் வெளியிடுகிறது.
முப்பது சதவீதச் சிறப்புத் தள்ளுபடி விலையில் முன்பதிவு செய்ய இங்கே செல்க.
முன்பதிவு செய்வோருக்கு அக்டோபர் 13 ஆம் தேதி பிரதியில் கையெழுத்திட்டு அனுப்புவேன்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .
Published on October 09, 2025 11:06