ஜோதிடம் - வெற்றிகரமான தொழில்.
இந்த பரந்து விரிந்த உலகில் மனிதனின் பணத்தேவை இவ்வளவுதான் என்று இல்லை. உழைக்கும் வர்க்கம் ஒரு பக்கம் இருக்க, உழைப்பின் மேல் வெறுப்பில் இருக்கும் கூட்டமும், தொழில் துவங்கினால் படுத்துகொண்டே சம்பாதிக்கலாம் என நினைக்கும் கூட்டமும் இல்லாமல் இல்லை.
இன்றைய தேதியில் உலகில் குறிப்பாக இந்தியாவில் இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழகத்தில் வெற்றிகரமான தொழில் என்றால் அது மதம் மட்டும்தான். சாமியாராகி விடுதல்தான் எளிய வழியும்கூட. அல்லது ஜோதிடராகி விடுதல்.
மதத்தை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் எளிய வழியாக தெரிந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், சதுரங்கமும் எல்லோருக்கும் கை கொடுக்காது என்பதே நிதர்சனம். ஜக்கியைபோல ஆயிரத்தில் பத்து பேருக்கு அமைந்தால் ஆச்சர்யம்தான். போலவே தாக்குபிடிப்பதும் சற்றே கடினமான ஒன்று.
இங்கே நாம் எளிய வழியின் குறுக்கு வழியை சற்றே பார்ப்போம். எதிர்காலம். மனிதனின் ஒட்டுமொத்த ஆர்வமும் கையில் இருந்து இந்த நொடியை எப்படி பயன்படுத்தலாம் என்பதில் இருக்காது. அடுத்த நொடி எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் இருக்கும். இந்த நாளை சரியாக பயன்படுத்தினால் அடுத்த நாள் சிறப்பாக அமையும் என சிந்திப்பாரில்லை. அல்லது அவர் குறைவு. எனவே மனிதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கிறான். அந்த ஆர்வம் பணத்தை கொட்டித் தீர்த்துவிடும்.
ஜோதிடத்தை படிக்க வகுப்புகள் இருக்கின்றன. கூடவே சில வாழ்க்கைக்கு தேவையான தத்துவ புத்தகங்களையும் படித்துக் கொள்ளுங்கள். காலம் நேரம் கோள்கள் அண்டம் கட்டம் என இவைகளை மனப்பாடம் செய்ய ஜோதிட வகுப்புகள். மனிதர்கள் பிரச்சனைகள் தீர்வுகள் பணம் பொருளாதாரம் நடப்பு நிலமை இவைகளுக்கு ஏற்றார்போல பேசிவிட தத்துவ புத்தகங்கள். சரியாக ஆறு மாதங்களில் நீங்கள் இந்த தொழிலுக்கு தகுதியாகிவிடுவீர்கள்.
பிரச்சனை என வருபவனின் பிரச்சனைகளை கேட்டு பொதுவாக எதாவது தீர்வு சொன்னால் போதுமானது.
அந்த தீர்வில் அவனுக்கு திருப்தி இல்லை என்றால் நேரம் சரியில்லை இந்த பரிகாரம் செய்யுங்கள் என சொல்லுங்கள். சரியாகாது. மீண்டும் வருவான்.
கண் பார்வை இந்த பரிகாரம் செய்யுங்கள் என சொல்லுங்கள். சரியாகாது. மீண்டும் வருவான்.
குல தெய்வத்தை கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள் உங்கள் எதிரிகள் எனவே இந்த கோவிலுக்கு இந்த தேதிக்குள் சென்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள் என சொல்லுங்கள். அவனால் செல்ல முடியாது. அப்படி சென்றாலும் சரியாகாது. மீண்டும் வருவான்.
எல்லோர் வீட்டிலும் 1980 க்கு முன் ஒரு பெண்ணை காதலின் காரணமாக கொலை செய்திருப்பார்கள். அந்தப் பெண்ணை கன்னி தெய்வம் என்றும் அந்த உயிர் அவீர் பவீர் என போய்விட்டது என்றும் அந்த கன்னி தெய்வத்தின் கோபத்தினால்தான் நீ சீழ்படுகிறாய் என்றும் சொல்லி மற்றுமொரு பரிகாரத்தை சொல்லுங்கள். சரியாகாது. மீண்டும் வருவான்.
200, 300 வருடங்களாக உங்கள் பரம்பரையில் இறந்து போனவர்களுக்கு சரியான முறையில் அஞ்சலி செலுத்தவில்லை அதனால்தான் இந்த பிரச்சனை. இது முன்னோர் சாபம் அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என காசி ராமேஸ்வரம் என வெகுதூர பரிகாரம் ஒன்றை சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் தலைமையில்தான் அந்த பரிகாரத்தை செய்ய முடியும் என்றும் சொல்லிவிடுங்கள். ஒரு இன்ப சுற்றுலா கிடைத்துவிடும். ஆனால் அவனுக்கு பலன் கிடைக்குமா? கிடைக்காது. மீண்டும் வருவான்.
இப்படி ஒவ்வொன்றிற்கும் பரிகாரம் ஸ்தல யாத்திரை என அவன் செலவு செய்யும் பணத்தை சேமித்து வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என்பது அவனுக்கு எப்பொழுதும் புரியாது.
சுலபமாக, என்னுடைய இரண்டு நண்பர்கள் ஒருமுறை பேசிக் கொண்டிருந்ததை உங்களுடன் பகிர்கிறேன். எளிமையாக இருக்கும்.
ஒரு நண்பன் பெரிய ஊரோடி. அவனுக்கு ஊரை சுற்றுவது மட்டும்தான் வாழ்க்கை. வாழ்க்கையை கொண்டாடுவான். இன்னொருவன் வாழ்க்கையையே வெறுத்து வாழ்ந்து கொண்டிருந்தான். விடிந்தால் வேலைக்கு செல்வான் இருட்டினால் வீட்டில் தஞ்சமடைந்து விடுவான்.
"இப்படி வெறுத்து போய் சுற்றுவதற்கு ஒருமுறை என்னுடன் பயணத்திற்கு வா" முதல் நண்பன் (1)
"எங்க போறது? எப்ப போறது?" நண்பன் இரண்டு (2)
"நான் அடுத்த வாரம் லடாக் போறேன். வா போய்ட்டு வருவோம். திரும்ப வரும்போது இந்தமாதிரி இருக்க மாட்ட" 1
"சரி அங்க போக என்ன வேணும்?" 2
"என்ன பெருசா தேவப்படும்? ஒரு புல்லட், போக வர பெட்ரோல் செலவு, சாப்பாடு செலவு. தங்கறதுக்கு அங்க லோக்கல்ல யாராவது இருந்தாங்கன்னா கேட்டு தங்கிக்கலாம் அவ்ளோதான்." 1
"சரி மொத்தமா எவ்ளோ செலவாகும்?" 2
"என்ன பெருசா செலவு? ஒரு 40,000 ஆகும்." 1
"என்கிட்ட புல்லட் இல்ல. அது வாங்கனும்ல?" 2
"ஆமா வாங்கித்தான் ஆகனும். இல்லன்னா ட்ரெய்ன்ல போகனும். அப்டி போனா செலவு கம்மியாகும்" 1
"ஆனா ஒரு வாரம் லீவாகுமே? எதுக்கு நான் லீவு போடனும். லீவு போட்டு வேலை போச்சுன்னா என்ன பண்றது? இல்ல புல்லட் வாங்கனும்னா 3 லட்சம் செலவாகும் எனக்கு கடனே 2 லட்சம்தான் இருக்கும். புல்லட் வாங்கற காசுக்கு கடன அடைச்சுட்டு நிம்மதியா இருப்பேன்" 2
இந்த தெளிவு இருந்தாலே போதுமானது. ஆனால் இருக்காது. அதுதான் இவர்களின் பிரச்சனை. சாகும்வரை பரிகாரமும் பலன்களும் செய்தே சாவார்கள். அவர்களின் மூடநம்பிக்கைதான் உங்கள் மூலதனம். யூட்யூபில் இருக்கும் அத்தனை வீடியோக்களையும் பார்த்து ஒரு லட்சம் கோவில்களுக்கும் சென்று அத்தனையையும் செய்தாலும் அவனுக்கு சரியாகாது. அவன் உழைத்தால் மட்டுமே சரியாகும். நீங்கள் இந்த பலன்களை சொல்லி அவன் செய்து கொண்டிருக்கும்பொழுதே எதாவது ஒரு கட்டத்தில் அவனது வாழ்க்கை அதுவாக மாறிவிடும் அதற்கு காரணம் நீங்கள்தான் என அவன் நம்ப ஆரம்பித்துவிடுவான். அதுவே போதும்.
இப்படி பலன்களை நம்பும் கூட்டம்தான் திருச்செந்தூருக்கு சென்று வியாழக்கிழமை இரவு தங்கினால் அத்தனையும் நன்மையாக நடக்கும் என கடலோரத்தில் படுத்து கிடக்கிறது. என்றைக்கு சுனாமி வந்து மொத்தமாக தூக்கும் என்பது தெரியாமலே இருக்கட்டும். ஆனால் அதை செய்ய இவர்கள் தயாராக இருப்பார்கள். ஆகவே உங்களுக்கு பண வரவு தடைபடாது.
ஒரு ஜாதகத்திற்கு இன்றைய தேதியில் 200 ரூபாய். நீங்கள் சொல்வது தப்பித்தவறி நடக்க ஆரம்பித்துவிட்டால் 500 ரூபாய். நீங்கள் சொல்வது பிசுறே அடிக்காமல் நடக்க துவங்கிவிட்டால் ஒரு ஜாதகத்திற்கு 2000 ரூபாய். ஒரு நாளைக்கு 10 ஜாதகம் பார்க்க முடியும் என்பதை கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதேதான் சாமியார் மடங்களுக்கும். அந்த கோவிலுக்கு செல் இந்த பரிகாரம் செய் என சொல்வதற்கு பதிலாக நான்தான் கடவுள் என் காலில் விழு என சொன்னால் போதுமானது. மற்றபடி செய்முறையும் வழிமுறையும் ஒன்றுதான்.
உங்கள் புதிய தொழில் வெற்றியடைந்தே தீரும். எனக்கு ஒரு பங்கு கொடுக்க மறக்காதீர்கள்.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (20/09/2025)
இன்றைய தேதியில் உலகில் குறிப்பாக இந்தியாவில் இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழகத்தில் வெற்றிகரமான தொழில் என்றால் அது மதம் மட்டும்தான். சாமியாராகி விடுதல்தான் எளிய வழியும்கூட. அல்லது ஜோதிடராகி விடுதல்.
மதத்தை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் எளிய வழியாக தெரிந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், சதுரங்கமும் எல்லோருக்கும் கை கொடுக்காது என்பதே நிதர்சனம். ஜக்கியைபோல ஆயிரத்தில் பத்து பேருக்கு அமைந்தால் ஆச்சர்யம்தான். போலவே தாக்குபிடிப்பதும் சற்றே கடினமான ஒன்று.
இங்கே நாம் எளிய வழியின் குறுக்கு வழியை சற்றே பார்ப்போம். எதிர்காலம். மனிதனின் ஒட்டுமொத்த ஆர்வமும் கையில் இருந்து இந்த நொடியை எப்படி பயன்படுத்தலாம் என்பதில் இருக்காது. அடுத்த நொடி எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் இருக்கும். இந்த நாளை சரியாக பயன்படுத்தினால் அடுத்த நாள் சிறப்பாக அமையும் என சிந்திப்பாரில்லை. அல்லது அவர் குறைவு. எனவே மனிதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கிறான். அந்த ஆர்வம் பணத்தை கொட்டித் தீர்த்துவிடும்.
ஜோதிடத்தை படிக்க வகுப்புகள் இருக்கின்றன. கூடவே சில வாழ்க்கைக்கு தேவையான தத்துவ புத்தகங்களையும் படித்துக் கொள்ளுங்கள். காலம் நேரம் கோள்கள் அண்டம் கட்டம் என இவைகளை மனப்பாடம் செய்ய ஜோதிட வகுப்புகள். மனிதர்கள் பிரச்சனைகள் தீர்வுகள் பணம் பொருளாதாரம் நடப்பு நிலமை இவைகளுக்கு ஏற்றார்போல பேசிவிட தத்துவ புத்தகங்கள். சரியாக ஆறு மாதங்களில் நீங்கள் இந்த தொழிலுக்கு தகுதியாகிவிடுவீர்கள்.
பிரச்சனை என வருபவனின் பிரச்சனைகளை கேட்டு பொதுவாக எதாவது தீர்வு சொன்னால் போதுமானது.
அந்த தீர்வில் அவனுக்கு திருப்தி இல்லை என்றால் நேரம் சரியில்லை இந்த பரிகாரம் செய்யுங்கள் என சொல்லுங்கள். சரியாகாது. மீண்டும் வருவான்.
கண் பார்வை இந்த பரிகாரம் செய்யுங்கள் என சொல்லுங்கள். சரியாகாது. மீண்டும் வருவான்.
குல தெய்வத்தை கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள் உங்கள் எதிரிகள் எனவே இந்த கோவிலுக்கு இந்த தேதிக்குள் சென்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள் என சொல்லுங்கள். அவனால் செல்ல முடியாது. அப்படி சென்றாலும் சரியாகாது. மீண்டும் வருவான்.
எல்லோர் வீட்டிலும் 1980 க்கு முன் ஒரு பெண்ணை காதலின் காரணமாக கொலை செய்திருப்பார்கள். அந்தப் பெண்ணை கன்னி தெய்வம் என்றும் அந்த உயிர் அவீர் பவீர் என போய்விட்டது என்றும் அந்த கன்னி தெய்வத்தின் கோபத்தினால்தான் நீ சீழ்படுகிறாய் என்றும் சொல்லி மற்றுமொரு பரிகாரத்தை சொல்லுங்கள். சரியாகாது. மீண்டும் வருவான்.
200, 300 வருடங்களாக உங்கள் பரம்பரையில் இறந்து போனவர்களுக்கு சரியான முறையில் அஞ்சலி செலுத்தவில்லை அதனால்தான் இந்த பிரச்சனை. இது முன்னோர் சாபம் அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என காசி ராமேஸ்வரம் என வெகுதூர பரிகாரம் ஒன்றை சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் தலைமையில்தான் அந்த பரிகாரத்தை செய்ய முடியும் என்றும் சொல்லிவிடுங்கள். ஒரு இன்ப சுற்றுலா கிடைத்துவிடும். ஆனால் அவனுக்கு பலன் கிடைக்குமா? கிடைக்காது. மீண்டும் வருவான்.
இப்படி ஒவ்வொன்றிற்கும் பரிகாரம் ஸ்தல யாத்திரை என அவன் செலவு செய்யும் பணத்தை சேமித்து வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என்பது அவனுக்கு எப்பொழுதும் புரியாது.
சுலபமாக, என்னுடைய இரண்டு நண்பர்கள் ஒருமுறை பேசிக் கொண்டிருந்ததை உங்களுடன் பகிர்கிறேன். எளிமையாக இருக்கும்.
ஒரு நண்பன் பெரிய ஊரோடி. அவனுக்கு ஊரை சுற்றுவது மட்டும்தான் வாழ்க்கை. வாழ்க்கையை கொண்டாடுவான். இன்னொருவன் வாழ்க்கையையே வெறுத்து வாழ்ந்து கொண்டிருந்தான். விடிந்தால் வேலைக்கு செல்வான் இருட்டினால் வீட்டில் தஞ்சமடைந்து விடுவான்.
"இப்படி வெறுத்து போய் சுற்றுவதற்கு ஒருமுறை என்னுடன் பயணத்திற்கு வா" முதல் நண்பன் (1)
"எங்க போறது? எப்ப போறது?" நண்பன் இரண்டு (2)
"நான் அடுத்த வாரம் லடாக் போறேன். வா போய்ட்டு வருவோம். திரும்ப வரும்போது இந்தமாதிரி இருக்க மாட்ட" 1
"சரி அங்க போக என்ன வேணும்?" 2
"என்ன பெருசா தேவப்படும்? ஒரு புல்லட், போக வர பெட்ரோல் செலவு, சாப்பாடு செலவு. தங்கறதுக்கு அங்க லோக்கல்ல யாராவது இருந்தாங்கன்னா கேட்டு தங்கிக்கலாம் அவ்ளோதான்." 1
"சரி மொத்தமா எவ்ளோ செலவாகும்?" 2
"என்ன பெருசா செலவு? ஒரு 40,000 ஆகும்." 1
"என்கிட்ட புல்லட் இல்ல. அது வாங்கனும்ல?" 2
"ஆமா வாங்கித்தான் ஆகனும். இல்லன்னா ட்ரெய்ன்ல போகனும். அப்டி போனா செலவு கம்மியாகும்" 1
"ஆனா ஒரு வாரம் லீவாகுமே? எதுக்கு நான் லீவு போடனும். லீவு போட்டு வேலை போச்சுன்னா என்ன பண்றது? இல்ல புல்லட் வாங்கனும்னா 3 லட்சம் செலவாகும் எனக்கு கடனே 2 லட்சம்தான் இருக்கும். புல்லட் வாங்கற காசுக்கு கடன அடைச்சுட்டு நிம்மதியா இருப்பேன்" 2
இந்த தெளிவு இருந்தாலே போதுமானது. ஆனால் இருக்காது. அதுதான் இவர்களின் பிரச்சனை. சாகும்வரை பரிகாரமும் பலன்களும் செய்தே சாவார்கள். அவர்களின் மூடநம்பிக்கைதான் உங்கள் மூலதனம். யூட்யூபில் இருக்கும் அத்தனை வீடியோக்களையும் பார்த்து ஒரு லட்சம் கோவில்களுக்கும் சென்று அத்தனையையும் செய்தாலும் அவனுக்கு சரியாகாது. அவன் உழைத்தால் மட்டுமே சரியாகும். நீங்கள் இந்த பலன்களை சொல்லி அவன் செய்து கொண்டிருக்கும்பொழுதே எதாவது ஒரு கட்டத்தில் அவனது வாழ்க்கை அதுவாக மாறிவிடும் அதற்கு காரணம் நீங்கள்தான் என அவன் நம்ப ஆரம்பித்துவிடுவான். அதுவே போதும்.
இப்படி பலன்களை நம்பும் கூட்டம்தான் திருச்செந்தூருக்கு சென்று வியாழக்கிழமை இரவு தங்கினால் அத்தனையும் நன்மையாக நடக்கும் என கடலோரத்தில் படுத்து கிடக்கிறது. என்றைக்கு சுனாமி வந்து மொத்தமாக தூக்கும் என்பது தெரியாமலே இருக்கட்டும். ஆனால் அதை செய்ய இவர்கள் தயாராக இருப்பார்கள். ஆகவே உங்களுக்கு பண வரவு தடைபடாது.
ஒரு ஜாதகத்திற்கு இன்றைய தேதியில் 200 ரூபாய். நீங்கள் சொல்வது தப்பித்தவறி நடக்க ஆரம்பித்துவிட்டால் 500 ரூபாய். நீங்கள் சொல்வது பிசுறே அடிக்காமல் நடக்க துவங்கிவிட்டால் ஒரு ஜாதகத்திற்கு 2000 ரூபாய். ஒரு நாளைக்கு 10 ஜாதகம் பார்க்க முடியும் என்பதை கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதேதான் சாமியார் மடங்களுக்கும். அந்த கோவிலுக்கு செல் இந்த பரிகாரம் செய் என சொல்வதற்கு பதிலாக நான்தான் கடவுள் என் காலில் விழு என சொன்னால் போதுமானது. மற்றபடி செய்முறையும் வழிமுறையும் ஒன்றுதான்.
உங்கள் புதிய தொழில் வெற்றியடைந்தே தீரும். எனக்கு ஒரு பங்கு கொடுக்க மறக்காதீர்கள்.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (20/09/2025)
Published on September 20, 2025 08:03
No comments have been added yet.


