(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Sujatha

“அப்பா, எல்டொராடோவைப் பத்தி சொல்வியே, ஞாபகம் இருக்கா? அதைத் தேடிண்டுதான் நான் போனேம்பா. கற்பனைத் தங்கம்னு தெரியாம தூரத்திலேயே பளிச்சுக் காட்டிட்டிருந்ததை நோக்கி ஓடினேன்ப்பா!”
“நானும்தான் அதையே தேடினேன்” என்றார்.
“அப்பா! உன்னை முதல்ல சரசுவோட பார்த்தப்ப எனக்கு அப்படியே சகலமும் ஸ்தம்பிச்சுப்போச்சு. ரொம்பநாள் கழிச்சுத்தான் எனக்கு ஏன்னு புரிஞ்சுது. ஆனா அதைப்பத்தி நான் ஒருத்தர்கிட்ட ஒரு வார்த்தை பேசலியே. இன்னிவரைக்கும் சொன்னதில்லையே. அந்த சம்பவத்துக்கப்புறம் உனக்கும் எனக்கும் ஒரு பிளவு வந்துடுத்து. அன்னியோன்யம் வெட்டுப்பட்டுடுத்து. நீ என்னைப் பார்த்து, நான் உன்னைப் பார்த்து பயப்பட ஆரம்பிச்சோம். என் மனசுல உன்னைப்பத்தி இருந்த இமேஜ் கலைஞ்சுபோயி நாம இரண்டுபேரும் அப்பவே பிரிய ஆரம்பிச்சிட்டோம். அதுக்கப்புறம் எத்தனையோ நடந்துபோயி நான் விலகிப்போயி, ஊர் ஊரா அலைஞ்சு உறவு விட்டுப்போயி, கல்யாணம் பண்ணிண்டு, பெண்டாட்டியைப் பிரிஞ்சு.. வேண்டாம்ப்பா.. அதையெல்லாம் அழிச்சுடலாம்பா.. சரசு வரைக்கும் விரசமில்லாம இருக்கு… அதோட போதும். அதுக்கப்புறம் எல்லாத்தையும்..”
அப்பா தலையை ஆட்டினார். “அதுவும் இருக்கட்டும்” என்றார்.”

Sujatha, தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி) [Therntheduththa Sirukathaigal Part 1]
Read more quotes from Sujatha


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag