“கிருஷ்ணனோடு மாதவையா பற்றி தான் செய்துவந்த ஆராய்ச்சி பற்றிச் சிலுவை அவ்வப்போது விவாதிப்பதுண்டு. அப்பிடி ஒரு தடவை விவாதித்தபோது ரெண்டு பேருக்கும் சண்டை வந்தது. விசயம் இதுதான். மாதவையா நாவல்களிலும் வாழ்க்கை நோக்கிலும் ஆங்கிலேய விக்டோரிய நாவலாசான் தாக்கரேயின் பாதிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. இதன் முதன்முதலா கண்டுபிடிச்சவர், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரிதான். மாதவையாவின் முதல் நாவல் 'பத்மாவதி சரித்திரம்' வெளிவந்தவுடனேயே (1898) 'தி மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேகஸின்'ல இங்கிலீஷ்ல இதுவிசயமா ரெண்டொரு வரி எழுதினார். இவரை மாதிரியே ஹாரிஸன்னு ஒரு ஆங்கிலேய விமர்சகரும் தாக்கரே தாக்கம் பற்றிப் போகிறபோக்கில் குறிப்பிட்டார். பின்னால க.கைலாசபதிதான் 'வேனிடிஃபேர்'ங்கிற தாக்கரேயின் புகழ்பெற்ற நாவல வச்சு இதை நிரூபிச்சார். சிலுவைராஜ், 'தி ஹிஸ்டரி ஆஃப் பென்டென்னிஸ்', 'தி ஹிஸ்டரி ஆஃப் ஹென்றி எஸ்மாண்ட்', 'தி நியூ கோம்ஸ்'ங்கிற தாக்கரேயோட மத்த நாவல்கள வச்சு ரொம்ப விரிவாக ஆராய்ச்சி பண்ணி நிரூபிச்சிருந்தான். இந்த நாவல்கள்ள தமக்குப் பிடித்தமான வாசகங்கள், பாத்திர விமர்சனங்கள், கருத்துக்கள், பாத்திரங்கள், நாவல் உத்திகள் எல்லாத்தையும் மாதவையா மூல ஆசிரியர் பேரக் குறிப்பிடாம 'பத்மாவதி சரித்திரத்'தில் எடுத்தாண்டிருந்தார். சில பக்கங்களைக் கொஞ்சங் கொஞ்சம் மாத்தி அப்பிடியே மொழிபெயர்த்தும் இருந்தார். என்ன இருந்தாலும் மூல ஆசானின் பேரக் குறிப்பிடாமச் சொந்தச் சரக்கு மாதிரி எழுதியது சரியில்லைங்கிறது சிலுவையின் வாதம். கிருஷ்ணனுக்கு கோபம். மொகமெல்லாம் சிவந்து போச்சு. ரெண்டு மகான்களோட சிந்தனை ஏன் ஒன்றாயிருக்கக்கூடாது. கிரேட்மென் திங்க் அலைக்... தாக்கரே மாதிரியே மாதவையாவும் சுய சிந்தனையாளர்தான்...
"அது சரிதான்... அத மறுக்கல... மாதவையா முதல் நாவல் எழுதின போது அவருக்கு வயது இருபத்தாறுதான். அவர் காலத்தில சமூகப் பிரச்சினைகள வச்சு வெளிவந்த நாவல்கள் தமிழில் இல்ல. இங்கிலீஸ்லதாம் இருந்தது. மாதவையாவுக்கு நெருக்கமா இருந்தது தாக்கரேதான். ரெண்டு பேர் சிந்தனைகளும் ஒத்துப்போச்சு. தமிழ்ல நாவல் எழுதுவது அப்ப ரொம்ப புதுசு. தம்மோட முதல் நாவல்ல தாக்கரே பாணிய எடுத்துக்கிட்டாரு... ஆனா அவரோட பேரை விட்டதுதான் சரியில்லை...'" என்று சிலுவை ஆதாரப்பூர்வமாகச் சொல்லியும் கிருஷ்ணன் ஒத்துக்கிடல. இந்த விசயத்துல ரெண்டு பேரும் கொஞ்ச நாள் டூ விட்டிருந்தாங்க. பெறகு சரியாப்போச்சு. அடுத்தடுத்து நடந்த விவாதங்கள்ள இந்த விசயத்த மட்டும் விட்டிருவாங்க.”
―
காலச்சுமை [Kaala Sumai]
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101831)
- life (80482)
- inspirational (76973)
- humor (44647)
- philosophy (31480)
- inspirational-quotes (29058)
- god (27021)
- wisdom (24926)
- truth (24920)
- romance (24575)
- poetry (23608)
- life-lessons (22768)
- quotes (21225)
- death (20711)
- happiness (19010)
- hope (18758)
- faith (18586)
- inspiration (17893)
- spirituality (15935)
- motivational (15852)
- relationships (15830)
- religion (15496)
- life-quotes (15389)
- writing (15037)
- love-quotes (14952)
- success (14208)
- motivation (13840)
- time (12956)
- motivational-quotes (12223)
- science (12210)

![காலச்சுமை [Kaala Sumai]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1730120394l/220940376._SY75_.jpg)