(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“பொ.ஆ.மு. 259 டிசம்பர் வாக்கில்தான், அறிவுரைக்காகவும் வழிகாட்டுதலுக்காவும் சில பௌத்தப் பிக்குகளை அல்லது நன்கு கற்றறிந்த மிக முக்கியமான ஒரு பௌத்தப் பிக்குவை அசோகர் சந்திக்கச்சென்றார். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு ஒரு மனிதராகவும் அரசராகவும் அவரை முழுமையாக உருமாற்றியது. ஒரு வருடத்துக்கு மேலாக அவர் உபாசகராக இருந்திருக்கிறார் என்றாலும், அந்தக் காலத்தில் அவர் பெயரளவுக்கே பௌத்தராக இருந்தார். அசோகர் சந்திக்கச்சென்ற பிக்கு அல்லது பிக்குகள் அவரிடம் என்ன சொன்னார்கள் என்றோ அல்லது அவர்களுடைய வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எப்படியான ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார் என்றோ நமக்குத் தெரியாது. ஆனாலும், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பௌத்தப் பாதையில் தீவிரமாக 'அரும்பாடுபடும்' ஒருவராக மாறியிருப்பதாக அசோகர் நம்மிடம் சொல்கிறார்.

ஒன்றரை வருடங்கள் கழித்து, அதாவது பொ.ஆ.மு. 256 ஜூன் அல்லது அதற்கு அருகில், மிகப் பிரகாசமான சிந்தனை ஒன்று அவருக்குத் தோன்றுகிறது: 'சில மாதங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அற்புதமான அனுபவம் குறித்து என்னுடைய பிரஜைகளுக்கு நான் ஏன் கடிதம் எழுதக் கூடாது? அவர்களும் இதே பாதையில் பயணிப்பதை நான் ஏன் ஊக்குவிக்கக் கூடாது?' இந்த கடிதத்தைதான் நாம் சிறுபாறை I என்று அழைக்கிறோம். அவரது ராஜ்ஜியம் முழுக்க உள்ள பல்வேறு பாறைகளின் மேல் இந்தச் செய்தியைத் தன்னுடைய பெரும் நிர்வாக அமைப்பை இணைத்துக்கொண்டு பொறித்தது என்பது அவர்களுக்கு விநோதமான முயற்சியாக — டான் கிஹொத்தே காற்றாலைகளைச் சாய்த்ததுபோல் — இருந்திருக்க வேண்டும் என்றாலும், புது வகையான வெற்றியை நோக்கி அவர் படையெடுப்பதாக, அதாவது நிலப்பரப்பு சார்ந்து வெற்றிகொள்வது என்பதாக இல்லாமல் ஆன்மிகரீதியான ஒன்றைத் தொடங்கியிருப்பதாக நினைத்தார். அவரது நிலம் முழுக்க புத்தரது 'சிங்க கர்ஜனை' எதிரொலிக்க வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.

அவரது பிரஜைகளுக்காகப் பொறிக்கப்பட்ட முதல் செய்தியைத் தொடர்ந்து, ஒரு வருடம் அல்லது அதுபோல் கடந்த பின், அதாவது பொ.ஆ.மு. 257 ஜூன் மாதத்துக்கும் பொ.ஆ.மு. 256-இன் வசந்த காலத்துக்கும் இடையே — அவர் அரியணை ஏறிய பன்னிரண்டாவது வருடம், அசோகரது அறிவார்த்தரீதியான, மதரீதியான போக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது போக்கில் தீர்மானமான மாற்றம் ஏற்படுகிறது. அசோகர் மேற்கொண்ட பொதுச் செயல்திட்டமானது பௌத்தத்தைப் பிரச்சாரம் செய்வதிலிருந்து, ஒரு பழைய கருத்தை, அதாவது தர்மம் என்ற கருத்துக்கு அவர் தானாகக் கொடுத்த அர்த்தப்பாட்டில் வேர்கொண்டிருந்த தார்மிகத் தத்துவத்தை வெகுமக்களிடையே கொண்டுசெல்லும் பரப்புரையாக மாறுகிறது.

நான் இதைச் 'சுழலச்சாக தர்மம்' என்றழைக்கிறேன். ஆனால், அவர் பௌத்தத்தின் மீதான பற்றுறுதியையோ அதன் மீதான பிடிமானத்தையோ உதறித்தள்ளினார் என்று முன்வைப்பதற்காக நான் இப்படி அழைக்கவில்லை. மாறாக, மக்களுக்குத் தார்மிகத்தைக் கற்பித்தல் என்ற அவரது பொதுக் கொள்கை, பௌத்தத்துக்கு அவர் கொடுத்த முந்தைய அழுத்தத்திலிருந்து — நாம் இதைச் சிறு பாறை அரசாணை I -இல் பார்க்க முடியும் — தீர்மானமாக விலகி, குறுங்குழுவாத வேறுபாடுகளுக்கு அப்பால் தர்மம் ஒரு தார்மிகத் தத்துவமாக மையம் கொண்டிருக்கும் கொள்கையை நோக்கி நகர்கிறார். சுழலச்சான இந்த நகர்வை, பெரும் பாறை அரசாணை வரிசையில் உள்ள அவரது செய்திகளின் தொகுப்பு மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. பெரும் பாறை அரசாணை வரிசை மிகப் பொருத்தமாக 'தர்மலிபி' என்ற வெளிப்பாட்டிலிருந்து தொடங்குகிறது. தர்மம் குறித்த எழுத்துக்கள், பொறிக்கப்பட்டவை ஆகிய இரண்டையும் இச்சொல் ஒரே சமயத்தில் குறிக்கிறது. அவர் பௌத்தர் அல்லாத ஒருவராக ஆகவில்லை என்றாலும்கூட, இப்போதிலிருந்து அவரது எழுத்துக்கள் தர்மத்தின் மீது அக்கறை கொண்டிருந்தனவே தவிர வெளிப்படையாக பௌத்தத்தின் மீதாக இல்லை. இந்தப் பதினான்கு அரசாணை வரிசையில், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பௌத்தம் குறிப்பிடப்படுகிறது.”

Patrick Olivelle, Ashoka: Portrait of a Philosopher King
Read more quotes from Patrick Olivelle


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

Ashoka: Portrait of a Philosopher King Ashoka: Portrait of a Philosopher King by Patrick Olivelle
111 ratings, average rating, 27 reviews
Open Preview

Browse By Tag