பிரகாஷ் வைத்திலிங்கம் > பிரகாஷ்'s Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    “Just as it is a good practice to make all fields private unless they need greater visibility, it is a good practice to make all fields final unless they need to be mutable.”
    Brian Goetz, Java Concurrency in Practice

  • #2
    Subramaniya Bharathiyar
    “தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
    செண்பகத் தோட்டத்திலே,
    பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
    பாங்கியோ டென்று சொன்னாய்
    வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
    மார்பு துடிக்கு தடீ!
    பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
    பாவை தெரியு தடி!

    மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
    வேதனை செய்கு தடீ!
    வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
    வந்து தழுவுது பார்!
    மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
    மூழ்கித் துயிலினிலே,
    நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
    நரகத் துழலுவதோ?

    கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்
    காவலுன் மாளிகையில்;
    அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்
    அங்கு வருதற் கில்லை;
    கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்
    கூடிக் கிடக்கு தங்கே;
    நடுமை யரசி யவள்-எதற் காகவோ
    நாணிக் குலைந்திடுவாள்.

    கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
    கொஞ்சிக் குலவி யங்கே
    ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
    ஆயிரங் கோடி முறை
    நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
    நல்ல களி யெய்தியே
    பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
    பண்ணிய தில்லை யடி!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss