சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்!


[image error]பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது;

இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு!

ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013)


Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்;

ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று;


பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு!

இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் = இந்தப் புரிதலே போதும்!


உங்களுக்கு இன்னிக்கு பிடிச்சிருக்கு -ன்னு, தமிழ்த் தொன்மத்தில் தேடினா = இருக்காது:)

அதுக்காக, தொன்மத்தை மாற்றி எழுதவும் முடியாது;


“அறிவியல் பூர்வமான/ தரவுகள் சார்ந்த” = மனப் போக்கை நாம தான் வளர்த்துக் கொள்ளணும்:)


Dosa (எ) இந்தத் தளம்..

= நம்ம தமிழ்த் தொன்மத்தில், நம்ம இறை-இயல் வளர்ந்த பரிமாணம் எப்படி? -ன்னு “உண்மையாக” ஆய்வு செய்யும்![image error][image error]

= அன்றைய இயற்கை வழிபாடு vs  இன்றைய புராண/ பரிகாரங்கள்


*மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்,

*தமிழ்த் தென்றல் திரு.வி.க

= இவர்களின் ஆய்வு இதற்கு வழிகாட்டும்!

= இனி பதிவுகள், அவ்வப்போது வரும்:)



வாங்க, சூர சம்ஹாரத்துக்குப் போவோம் | கந்த “சஷ்டி” = சங்கத் தமிழ் விழா-வா?:)

= இல்லை!


முன்னர் வாசித்த பதிவுகளை ஞாபகம் வச்சிக்கோங்க!

*தமிழ்த் தொன்மத்தில், முருகன் = நம் ஆதிகுடித் தலைவன்; அவ்ளோ தான்!

*நடுகல், கந்து, கோட்டம், வேலன் வெறி

= இப்படித் தான் அவன் “இயற்கை வழிபாடு” | குடி காத்த முன்னோர் வணக்கம்


6 முகம், 12 கை, 18 கண் = இயற்கைக்கு மாறான புராணச் சங்கிலிகள், பின்னால் வந்தவை!


ஆதிகுடிகளின் முருகன் மேல் = புராணத்தையும் ஏத்திட்டதால்…

எது இருந்தது? எது வந்தது? -ன்னே கண்டுபுடிக்க முடியாதபடி, வடநெறிக் கலப்பு!


[image error]அப்போ சூரன்? மயில்? வேல்? காவடி?


*வேல் = குறிஞ்சி நில வேடுவர்களின் ஆயுதம்

*மயில் = முல்லை/ குறிஞ்சி நிலப் பறவை

*காவடி = மலை ஏற்றத்தில், எளிதாகப் பொருள் தூக்கிச் செல்லும் காத் தண்டு


அதான்… இது அத்தனையும்… அந்த நிலப் பெரியோனுக்கும் ஆகி வந்தது!(தேனும்/தினைமாவும் கூட)

இதுக்கு மேல, இதுல ஒரு “கதையும்” இல்ல! No Puranic Unbelievables:)


அப்போ சூரன்?????

அதைச் சொல்லுய்யா… சூரன் சூரன்?.. மாட்டிக்கிட்டியா ரவி?:)





சங்கத் தமிழில் “சூர்” உண்டு | ஆனா “சூரன்” இல்லை!

அந்த அக-நானூறு தான் இன்னிக்கி பாக்கப் போறோம்! Ok-vaa?:)


*காம வெறி புடிச்ச இந்திரன் = ரொம்ப நல்லவங்கோ!

*ஆனா அசுராள் மட்டும் = ரொம்ப கெட்டவங்கோ!

*முருகன், தேவாள் -க்கு Help பண்ணறத்துக்குன்னே, “தோன்றியவன்”

= இதெல்லாம் முதல்/இடைச் சங்கத் தமிழில் இல்லை:) | கலப்புக்கு பின்னரே, எழுதி எழுதிப் பரப்பப்பட்டது:))


வீர+பாகு | பாஹூ -ன்னா தோள்! (சம்ஸ்கிருதத்தில்)

“தமிழ்க் கடவுள்”-ன்னு சொல்லிக்கறோம் | ஆனா பேரு மட்டும் எப்படி “பாஹூ”?:)

= மனசாட்சியைத் தொறந்து வச்சீங்க-ன்னா ஒங்களுக்கே பதில் கிடைச்சீரும்;


சூர் = பயம்/துன்பம் | சூர் = கடவுள்

[image error]


Itz a “Native Land” Concept

துன்பத்தை/ பயத்தை உண்டாக்க வல்ல கடவுளே, அதைப் போக்கவும் வல்லது;

அந்த முன்னோர் நடுகல் வழிபாடே = முருக வழிபாடு!


நடுகல் = இறந்து போன முன்னோர் என்பதால், “ஆவியாய்” இறங்குவதாயும் முருகன் கற்பனை செய்து கொள்ளப்பட்டதுண்டு!

அப்போ மலை வாழ் மக்கள் எடுத்த ஆட்டம் தான் = சூர் இறக்குதல்வேலன் வெறி;


முருகனையே = “சூர்” -ன்னு சொல்லும் சில சங்கப் பாடல்கள்!

(சூர் மலை வெற்பன், சூர் மகளிர்-தெய்வப் பெண்கள்)


[image error]

வேலன் வெறியாடல்


“சூரன்” – அவன் தம்பிக்கு ஆட்டுத் தலை, சிங்கத் தலை – இதெல்லாம் புராண கப்சா!

“சூர்” – என்பதே தமிழ் மரபு | அது என்ன “சூர்” இறக்குதல்?


பொண்ணுக்குக் காதல் முத்திப் போச்சி; ஆனா வெளிப்படையா சொல்லப் பயப்படுறா;

அவ ஒடம்புல என்னென்னமோ மாற்றம் | இராத்திரி தனியாச் சந்திச்சிக்குறாங்க-ல்ல?:)


அம்மாவுக்கோ = பொண்ணு போக்கே புரியல!

என்னமோ ஏதோ? நம்ம குடி காத்த முன்னோரைக் கும்புடுவோம் -ன்னு பூசை வைக்குறா;


அப்போ, வேலன் (எ) பூசாரி வெறி ஆடுறான் = “சூர்” இறக்குறான்

ஆனா நம்ம பொண்ணு உள்ளுக்குள்ள சிரிச்சிக்குறா:))) | அட முட்டாப் பசங்களா, I am in Love with that Guy da!


பாக்கலாமா பாட்டை?



பாடல்: ஐங்குறுநூறு 249

கவிஞர்: கபிலர்

திணை: குறிஞ்சித் திணை

துறை: வேலன் வெறி


தோழி, தலைவி கிட்ட சொல்லுறா..


பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு

முருகென மொழியும் வேலன் மற்றவன்

வாழிய இலங்கும் அருவிச்

சூர்மலை நாடனை அறியா தோனே


காபி உறிஞ்சல்: (ரெண்டு ரெண்டு வரியா உறிஞ்சிக் குடிங்க, பார்ப்போம்:)


[image error]பெய்ம் மணல் வரைப்பின்  = மணல் பரப்பி வச்சிருக்காங்க, வெறியாடும் முற்றத்தில்

கழங்கு படுத்து = கழங்கு -ன்னா, மஞ்சக் கழங்கு போல; மரத்தின் கிழங்கு

பூசைப் பொருளா, இதை வைக்குறது வழக்கம்; கூடவே தேன், தினை, கடம்ப மலர், காந்தள் பூ இதெல்லாம்;

கிடா வெட்டலும் உண்டு:)


அன்னைக்கு = அம்மாவுக்கு

முருகென மொழியும் வேலன் = உம் பொண்ணு மேல “சூர் இறங்கியுள்ளது”, நம்ம முன்னோர் தலைவன் முருகனே -ன்னு சொல்லுறான் வேலன் வெறி ஆடும் பூசாரி


மற்றவன் வாழிய = மற்று அவன் வாழி | நல்லா இருடே!


[image error]இலங்கும் அருவிச் சூர்மலை நாடனை = அருவி கொட்டுற, சூர் மலை நாடன் = பயம் தரும் மலைநாட்டுப் பையன்!

அவன் தான்டா எனக்குள்ள “இறங்கி”ட்டான்; ஏதோ சூர் “இறங்கி” இருக்காம்-ல்ல?


அறியா தோனே = அடேய் அறியாத பூசாரியே (-ன்னு தோழியிடம் சொல்லிச் சிரிக்குறா பொண்ணு:)


என்ன நீங்களும் சிரிக்கிறீங்களா? இதான் “சூர்” |  சூர சம்ஹாரம் எல்லாம் ஒன்னுமில்லை:)





ஒவ்வோர் ஆண்டும், வடநாட்டில் தான் இராவணன் பொம்மை செஞ்சிக் கொளுத்துவாங்க;

அதே போல, தமிழ் நாட்டிலும் = “சூர சம்ஹாரம்” | கழுத்து வெட்டு:(


என்ன தான் “கதை”-ன்னாலும்,

Repeatedly beating & burning a Person/His Memory = Not a Human Value!

இது போன்ற “சம்பிரதாயங்கள்”, பின்னாள் தலைமுறையிலாச்சும் நின்று போகட்டும்!


சூரனைக் கொல்லலை = தன் மயில் வாகனமாய் ஆக்கிக்கிட்ட “கருணை”-ன்னு சொல்லுவாய்ங்க; Repeated Propaganda! அப்பறம் ஏன் கழுத்து வெட்டு? ஏன் அசுரர் “குடி கெடுத்த” ஐயா?

ஒரு பாவமும் அறியாத அந்த நாட்டு மக்கள்/ மொத்த இனத்தையே.. கடலில் மூழ்கடிச்சான் -ன்னு கந்த “புராணம்” சொல்லும்!


= இதுவா “கருணை”? | இல்லை, இது = “புராணம்”


[image error]முருகன் = நம்ம தமிழ்த் தொன்ம மூதாதை | கருணை-அழகன்

அவன் முகத்தைப் பாருங்க;

இதுவா “குடி கெடுக்கும்”?:(((


அவன் யார் குடியும் கெடுக்க மாட்டான்;

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக“-ன்னு மட்டும் சொல்லாதீங்க!


*முருகனை = தமிழா வணங்கினா.. “இயற்கை வழிபாடு” மனசுக்குள் இறங்கும்!

*முருகனை = புராணமா வணங்கினா.. பரிகாரம்-தோஷம் ன்னு “சுயநலம்” தான் இறங்கும்!


உங்க மனசாட்சிக்கு எது? -ன்னு நீங்க தான் முடிவு பண்ணிக்கணும்!


தமிழ்த் தொன்ம முருகன் = சூர சம்ஹாரம் செய்ய மாட்டான்!

அவனே ஒரு “சூர்”

நம் “சூர்” (எ) மனத் துன்பத்தை இறக்குவான், இயற்கை வடிவினன்; அம்புடுதேன்!


dosa 109/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2013 19:17
No comments have been added yet.


Kannabiran Ravishankar's Blog

Kannabiran Ravishankar
Kannabiran Ravishankar isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Kannabiran Ravishankar's blog with rss.