Kannabiran Ravishankar's Blog

November 7, 2013

சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”

வாசகர்களுக்கு வணக்கம்!


[image error]பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது;

இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு!

ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013)


Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்;

ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று;


பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு!

இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் = இந்தப் புரிதலே போதும்!


உங்களுக்கு இன்னிக்கு பிடிச்சிருக்கு -ன்னு, தமிழ்த் தொன்மத்தில் தேடினா = இருக்காது:)

அதுக்காக, தொன்மத்தை மாற்றி எழுதவும் முடியாது;


“அறிவியல் பூர்வமான/ தரவுகள் சார்ந்த” = மனப் போக்கை நாம தான் வளர்த்துக் கொள்ளணும்:)


Dosa (எ) இந்தத் தளம்..

= நம்ம தமிழ்த் தொன்மத்தில், நம்ம இறை-இயல் வளர்ந்த பரிமாணம் எப்படி? -ன்னு “உண்மையாக” ஆய்வு செய்யும்![image error][image error]

= அன்றைய இயற்கை வழிபாடு vs  இன்றைய புராண/ பரிகாரங்கள்


*மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்,

*தமிழ்த் தென்றல் திரு.வி.க

= இவர்களின் ஆய்வு இதற்கு வழிகாட்டும்!

= இனி பதிவுகள், அவ்வப்போது வரும்:)



வாங்க, சூர சம்ஹாரத்துக்குப் போவோம் | கந்த “சஷ்டி” = சங்கத் தமிழ் விழா-வா?:)

= இல்லை!


முன்னர் வாசித்த பதிவுகளை ஞாபகம் வச்சிக்கோங்க!

*தமிழ்த் தொன்மத்தில், முருகன் = நம் ஆதிகுடித் தலைவன்; அவ்ளோ தான்!

*நடுகல், கந்து, கோட்டம், வேலன் வெறி

= இப்படித் தான் அவன் “இயற்கை வழிபாடு” | குடி காத்த முன்னோர் வணக்கம்


6 முகம், 12 கை, 18 கண் = இயற்கைக்கு மாறான புராணச் சங்கிலிகள், பின்னால் வந்தவை!


ஆதிகுடிகளின் முருகன் மேல் = புராணத்தையும் ஏத்திட்டதால்…

எது இருந்தது? எது வந்தது? -ன்னே கண்டுபுடிக்க முடியாதபடி, வடநெறிக் கலப்பு!


[image error]அப்போ சூரன்? மயில்? வேல்? காவடி?


*வேல் = குறிஞ்சி நில வேடுவர்களின் ஆயுதம்

*மயில் = முல்லை/ குறிஞ்சி நிலப் பறவை

*காவடி = மலை ஏற்றத்தில், எளிதாகப் பொருள் தூக்கிச் செல்லும் காத் தண்டு


அதான்… இது அத்தனையும்… அந்த நிலப் பெரியோனுக்கும் ஆகி வந்தது!(தேனும்/தினைமாவும் கூட)

இதுக்கு மேல, இதுல ஒரு “கதையும்” இல்ல! No Puranic Unbelievables:)


அப்போ சூரன்?????

அதைச் சொல்லுய்யா… சூரன் சூரன்?.. மாட்டிக்கிட்டியா ரவி?:)





சங்கத் தமிழில் “சூர்” உண்டு | ஆனா “சூரன்” இல்லை!

அந்த அக-நானூறு தான் இன்னிக்கி பாக்கப் போறோம்! Ok-vaa?:)


*காம வெறி புடிச்ச இந்திரன் = ரொம்ப நல்லவங்கோ!

*ஆனா அசுராள் மட்டும் = ரொம்ப கெட்டவங்கோ!

*முருகன், தேவாள் -க்கு Help பண்ணறத்துக்குன்னே, “தோன்றியவன்”

= இதெல்லாம் முதல்/இடைச் சங்கத் தமிழில் இல்லை:) | கலப்புக்கு பின்னரே, எழுதி எழுதிப் பரப்பப்பட்டது:))


வீர+பாகு | பாஹூ -ன்னா தோள்! (சம்ஸ்கிருதத்தில்)

“தமிழ்க் கடவுள்”-ன்னு சொல்லிக்கறோம் | ஆனா பேரு மட்டும் எப்படி “பாஹூ”?:)

= மனசாட்சியைத் தொறந்து வச்சீங்க-ன்னா ஒங்களுக்கே பதில் கிடைச்சீரும்;


சூர் = பயம்/துன்பம் | சூர் = கடவுள்

[image error]


Itz a “Native Land” Concept

துன்பத்தை/ பயத்தை உண்டாக்க வல்ல கடவுளே, அதைப் போக்கவும் வல்லது;

அந்த முன்னோர் நடுகல் வழிபாடே = முருக வழிபாடு!


நடுகல் = இறந்து போன முன்னோர் என்பதால், “ஆவியாய்” இறங்குவதாயும் முருகன் கற்பனை செய்து கொள்ளப்பட்டதுண்டு!

அப்போ மலை வாழ் மக்கள் எடுத்த ஆட்டம் தான் = சூர் இறக்குதல்வேலன் வெறி;


முருகனையே = “சூர்” -ன்னு சொல்லும் சில சங்கப் பாடல்கள்!

(சூர் மலை வெற்பன், சூர் மகளிர்-தெய்வப் பெண்கள்)


[image error]

வேலன் வெறியாடல்


“சூரன்” – அவன் தம்பிக்கு ஆட்டுத் தலை, சிங்கத் தலை – இதெல்லாம் புராண கப்சா!

“சூர்” – என்பதே தமிழ் மரபு | அது என்ன “சூர்” இறக்குதல்?


பொண்ணுக்குக் காதல் முத்திப் போச்சி; ஆனா வெளிப்படையா சொல்லப் பயப்படுறா;

அவ ஒடம்புல என்னென்னமோ மாற்றம் | இராத்திரி தனியாச் சந்திச்சிக்குறாங்க-ல்ல?:)


அம்மாவுக்கோ = பொண்ணு போக்கே புரியல!

என்னமோ ஏதோ? நம்ம குடி காத்த முன்னோரைக் கும்புடுவோம் -ன்னு பூசை வைக்குறா;


அப்போ, வேலன் (எ) பூசாரி வெறி ஆடுறான் = “சூர்” இறக்குறான்

ஆனா நம்ம பொண்ணு உள்ளுக்குள்ள சிரிச்சிக்குறா:))) | அட முட்டாப் பசங்களா, I am in Love with that Guy da!


பாக்கலாமா பாட்டை?



பாடல்: ஐங்குறுநூறு 249

கவிஞர்: கபிலர்

திணை: குறிஞ்சித் திணை

துறை: வேலன் வெறி


தோழி, தலைவி கிட்ட சொல்லுறா..


பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு

முருகென மொழியும் வேலன் மற்றவன்

வாழிய இலங்கும் அருவிச்

சூர்மலை நாடனை அறியா தோனே


காபி உறிஞ்சல்: (ரெண்டு ரெண்டு வரியா உறிஞ்சிக் குடிங்க, பார்ப்போம்:)


[image error]பெய்ம் மணல் வரைப்பின்  = மணல் பரப்பி வச்சிருக்காங்க, வெறியாடும் முற்றத்தில்

கழங்கு படுத்து = கழங்கு -ன்னா, மஞ்சக் கழங்கு போல; மரத்தின் கிழங்கு

பூசைப் பொருளா, இதை வைக்குறது வழக்கம்; கூடவே தேன், தினை, கடம்ப மலர், காந்தள் பூ இதெல்லாம்;

கிடா வெட்டலும் உண்டு:)


அன்னைக்கு = அம்மாவுக்கு

முருகென மொழியும் வேலன் = உம் பொண்ணு மேல “சூர் இறங்கியுள்ளது”, நம்ம முன்னோர் தலைவன் முருகனே -ன்னு சொல்லுறான் வேலன் வெறி ஆடும் பூசாரி


மற்றவன் வாழிய = மற்று அவன் வாழி | நல்லா இருடே!


[image error]இலங்கும் அருவிச் சூர்மலை நாடனை = அருவி கொட்டுற, சூர் மலை நாடன் = பயம் தரும் மலைநாட்டுப் பையன்!

அவன் தான்டா எனக்குள்ள “இறங்கி”ட்டான்; ஏதோ சூர் “இறங்கி” இருக்காம்-ல்ல?


அறியா தோனே = அடேய் அறியாத பூசாரியே (-ன்னு தோழியிடம் சொல்லிச் சிரிக்குறா பொண்ணு:)


என்ன நீங்களும் சிரிக்கிறீங்களா? இதான் “சூர்” |  சூர சம்ஹாரம் எல்லாம் ஒன்னுமில்லை:)





ஒவ்வோர் ஆண்டும், வடநாட்டில் தான் இராவணன் பொம்மை செஞ்சிக் கொளுத்துவாங்க;

அதே போல, தமிழ் நாட்டிலும் = “சூர சம்ஹாரம்” | கழுத்து வெட்டு:(


என்ன தான் “கதை”-ன்னாலும்,

Repeatedly beating & burning a Person/His Memory = Not a Human Value!

இது போன்ற “சம்பிரதாயங்கள்”, பின்னாள் தலைமுறையிலாச்சும் நின்று போகட்டும்!


சூரனைக் கொல்லலை = தன் மயில் வாகனமாய் ஆக்கிக்கிட்ட “கருணை”-ன்னு சொல்லுவாய்ங்க; Repeated Propaganda! அப்பறம் ஏன் கழுத்து வெட்டு? ஏன் அசுரர் “குடி கெடுத்த” ஐயா?

ஒரு பாவமும் அறியாத அந்த நாட்டு மக்கள்/ மொத்த இனத்தையே.. கடலில் மூழ்கடிச்சான் -ன்னு கந்த “புராணம்” சொல்லும்!


= இதுவா “கருணை”? | இல்லை, இது = “புராணம்”


[image error]முருகன் = நம்ம தமிழ்த் தொன்ம மூதாதை | கருணை-அழகன்

அவன் முகத்தைப் பாருங்க;

இதுவா “குடி கெடுக்கும்”?:(((


அவன் யார் குடியும் கெடுக்க மாட்டான்;

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக“-ன்னு மட்டும் சொல்லாதீங்க!


*முருகனை = தமிழா வணங்கினா.. “இயற்கை வழிபாடு” மனசுக்குள் இறங்கும்!

*முருகனை = புராணமா வணங்கினா.. பரிகாரம்-தோஷம் ன்னு “சுயநலம்” தான் இறங்கும்!


உங்க மனசாட்சிக்கு எது? -ன்னு நீங்க தான் முடிவு பண்ணிக்கணும்!


தமிழ்த் தொன்ம முருகன் = சூர சம்ஹாரம் செய்ய மாட்டான்!

அவனே ஒரு “சூர்”

நம் “சூர்” (எ) மனத் துன்பத்தை இறக்குவான், இயற்கை வடிவினன்; அம்புடுதேன்!


dosa 109/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2013 19:17

November 23, 2012

Love Failure > கைக்கிளை > Love Success!

[image error]சங்கத் தமிழின் திணைகளுள் = “கைக்கிளை” என்ற ஒன்று உண்டு!


கைக்கிளை = One Sided Love என்று இன்னிக்கி ஆக்கிட்டோம்…

நாம தான் ஒன்றையே பேசிப் பேசி, அதை மட்டுமே உண்மை போல் ஆக்கீருவோமே?:) ஆனா உண்மை அதுவல்ல!


கை = ஒழுக்கம்;

கைந்-நிலை, கைக்-கோள் -ன்னு அற நூல்கள் இருக்கு அல்லவா?


கை = ஒழுக்கம்; காதலொழுக்கம்; அது கிளை விட்டுவிடுவது = கை + கிளை;

அதாச்சும் காதலர்கள், “ஒத்த எண்ணமாய்” வளராது, இரு வேறு எண்ணங்களாய்க் “கிளை விடல்” = கைக் கிளை;


* காதலர்களிடையே தோன்றும் கருத்து வேறுபாடு, புரிந்து கொள்ளாமை…

* அப்படியே புரிந்து கொண்டாலும், வீடு/சமூகம் ஒப்புக் கொள்ளாததால், இடைக்காலப் புரியாமை

* மடல் ஏறுதல்

* முன்பு ஒத்துப் பழகி, பின்பு ஒருவரால் மட்டும் பிரிய முடியாமை

* ஒரு பக்கம் மட்டும் காதல்/ இன்ப உணர்ச்சிகள் அதிகமாய் இருத்தல்

= இவை எல்லாமே கைக்கிளை தான்!


[image error]நாம, Last Pointஐ மட்டுமே, One Sided Love = கைக்கிளை -ன்னு ஆக்கீட்டோம்!

ஆனா, எந்தவொரு காதலும், கைக்கிளையில் தானே துவங்குது? = ஆகா! அது எப்படி?


முதல் விநாடியே, “அந்தக் காதல் எண்ணம்”, instantly simulataneous ஆக உறுதி ஆவதில்லையே; Proposal (எ) காதலைச் சொல்லிடும் வரை, அது கைக்கிளை தானே?:)

அதான், Human Psychology நன்கு உணர்ந்த தொல்காப்பியர், கைக்கிளையே முதல் திணையாச் சொல்லுறாரு, அகத்திணைகளில்; What an intrinsic study of human & humane emotions by Tholkaap:)


கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப


கைக்கிளை, அப்பறம் தான் முல்லை, குறிஞ்சி.. ; கடேசீயா பெருந்திணை;

= இதுவே தொல்காப்பியர் அமைத்துக் குடுக்கும் 7 அகத் திணைகள்

= பின்னாளில் தான் சில பண்டிதாள், அகத்திணையை  5-ன்னு ஆக்கீட்டாங்க, கைக்கிளையைச் சரியாகப் புரிஞ்சிக்காம;


* முருகன் ஏற்றுக் கொள்வானா -ன்னு கூடத் தெரியாது, அவனே அவனே -ன்னு கற்பனையில் தவங் கிடந்தாள் = கைக்கிளை வள்ளி -ன்னு சொல்ல மனசு வருமா?:)

* ஆண்டாள் பாசுரங்கள் அத்தனையும் = கைக்கிளை என்று முத்திரை குத்தலாமா? வாங்க:)



இந்த உளவியல் நுட்பம்;



இதை நன்கு உணர்ந்து இருந்தனர் சங்கத் தமிழர்கள்; மதங்கள் இல்லாமல், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவங்க இல்லீயா! = “மனிதத்தில் எதையும் ஒதுக்குவதில்லை”; வகைப்படுத்தினர்!


[image error] மனித உணர்ச்சிகள் = அதைத் தமிழ், மதிக்குமா? மிதிக்குமா?


* பெரும்பான்மை உணர்வே = மனிதம்;

* சிறுபான்மை உணர்வு = மனிதம் அல்ல -ன்னு சொல்லாது சங்கத்தமிழ்!


இன்றைய One Sided Love, மாற்றுப் பாலினம், ஓரினக் காதல் கூறுகள் கூடச் சங்கத் தமிழில் உண்டு

ஒங்களுக்குத் தெரியுமா?:) இதை எப்படிப் பதிவாப் போடுறது -ன்னு தெரியலையே, முருகா!:)


கைக்கிளைக்கு வருவோம்!

தொல்காப்பியரும் இதைச் சொல்லிச் செல்கிறார்;

அன்பின் ஐந்திணை = முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை; (புணர்தல் முதல் பிரிதல் வரை)

ஆனா அதுக்கும் முன்னாடியே தான் கைக்கிளையும் வைக்கிறாரு;


* காதலுக்குப் பின்னர், “அவனே”-ன்னு காத்திருந்தால் = முல்லை

* காதலுக்கு முன்னர், “அவனே”-ன்னு காத்திருந்தால் = கைக்கிளை


ஆண்பாற் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை -ன்னு இரண்டுமே உண்டு!

வெள்ளிவீதியார் என்னும் துணிவுள்ள Woman Poet;

ஆண்கள் மட்டுமே பாடிய “முலை/அல்குல்” சொல்லாட்சிகளை, பெண்ணும் துணிந்து பாடிக் காட்டியவர்; ஆண்டாளுக்கும் முன்னோடி; அவள் மனசால் கொண்ட காதல் வாழ்வு – கைக்கிளை – பாடல்கள் கொட்டிக் கிடக்கும் சங்கத் தமிழ்!



[image error]பின்னாளில் தான், கைக்கிளை/ பெருந்திணை இரண்டையும் = “புறத் திணை” என்று ஆக்கினார்கள்;

“தொகுத்தவர்கள்”, அகநானூற்றில் வைக்காமல், புறநானூற்றில் தொகுத்து வைச்சிப்புட்டாங்க;


ஆனா அதையும் மீறி, கலித்தொகை என்னும் புரட்சி நூல்/இசை நூல்,

கைக்கிளையை, அகத்திணையில் கொண்டாந்து வைக்கும்!:)


பின்பு வந்த திருக்குறளும், காமத்துப் பாலில் கைக்கிளையை வைத்தது!

தகை அணங்கு உறுத்தல், குறிப்பறிதல் ஆகிய அதிகாரங்களில், கைக்கிளையைக் காணலாம்!


கைக்கிளைக் காமம் = இறுதி வரை, ஒருதலையாகவே இருந்து விடுவது அன்று!

* தலைவனுடைய மாறிலா “வேட்கையை”…

* தலைவி பின்னர்ப் புரிந்து கொள்ளும் போது, அது “அன்பாக” மலரும்.

ஆகவே “கைக்கிளை = காதலின் தொடக்கம்” எனவும் கொள்வார்கள்!


Haiyo, Above Statement நானா அடிச்சி விடல:) சொல்வது நம்பி அகப் பொருள்; “அன்பின் ஐந்திணைக் களவு முந்துற கைக்கிளை நிகழ்வது ஒன்றும் இயல்பே” எனும் நம்பியகப்பொருள் நூற்பா சொல்லும்;


வாங்க, இன்னிக்கி அப்படியொரு காதல் தோல்வி -> காதல் வெற்றியான கதையைப் பார்ப்போம்! My fave murugu poet:)



நூல்: கலித்தொகை 62

கவிஞர்: கபிலர்

(இசை: சுரிதகம் பெற்று வந்த கொச்சகக் கலிப்பா)


தலைவன் (மனசுக்குள்):

“மேவினும், மேவாக் கடையும், அஃது எல்லாம்

நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற

மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்

புல் இனிது ஆகலின், புல்லினென்” எல்லா!





தலைவி (மனசுக்குள்):

“அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,

கூறும் சொல் கேளான், நலி தரும்; பண்டு நாம்

வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு

மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?”



காபி உறிஞ்சல்:


தலைவன் மனசுக்குள் சொல்வது:

[image error][image error]மேவினும், மேவாக் கடையும்,

அஃது எல்லாம் நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்;


தலைவியே, நீ என்னைக் கொண்டாயோ? கொள்ள வில்லையோ?

அதெல்லாம் நீயே அறிவாய்; நான் அறியேன்!


பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்!

நின்னை யான் புல் இனிது ஆகலின், புல்லினென்” எல்லா!


ஆனா, எங்கோ என் உள்ளுக்குள் உள்ளுக்குள் = ஓர் இன்பம்!

(உன்னைக் கூட வேண்டும் என்றில்லை); உன்னை நினைக்கும் போதே = இன்பம் வந்து விடுகிறது;

அதான் உன்னையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன் = புல் இனிது;


“புல் இனிது”; புல் = small;

புல்லுதல் = think/nearness

நினைப்பு = சிறு சிறு பொறியால் உருவாகும் Reflex Action! அதான் தமிழில், புல்லுதல் = நினைத்தல்!


[image error]பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்

= பூங்கொத்திலே, மெல்-அழகா சம்மணம் போட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கு பூக்கள்; (பூ அமன்ற இணர்)

= ஆனா அந்தப் பூங்கொத்துக்குள் செல்ல முடியாத கொடி போன்றவளே!


நடுவுல, சம்மந்தா சம்பந்தமே இல்லாத வருணனை வரும்-ப்பா சங்கத் தமிழ்ல -ன்னு சிலரு சொல்லுவாய்ங்க:) அதென்ன “பூங்கொத்துள் செல்லாக் கொடி”?


= என் மனசுக்குள் பூத்த பூங்கொத்து; அது ரொம்ப மெல்லீசு;

= அதுக்குள்ளாற ஒரு கொடி (நீ), செல்ல முடியாதா என்ன? செல்ல முடியும்;

= மலருக்குள், கொடி, எளிதா ஊடாட முடியும்; அதான் இயற்கை;

= ஆனா, உன் பிடிவாதம்? அடியே, இது என்ன இயற்கையோ?:)


இதான் மறை பொருள் வருணனை:) இதுக்கு இறைச்சிப் பொருள் -ன்னு பேரு சங்கத் தமிழில்!



தலைவி மனசுக்குள் சொல்வது:

அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,

கூறும் சொல் கேளான், நலி தரும்;


கொஞ்சம் கூட தருமமே இல்லாம நடந்துக்கறானே! புரிஞ்சிக்கும் திறமையைத் தொலைச்சிட்டானோ?

கூறும் சொல் கேளான்!

இப்படியே இவன் மொத்த வாழ்க்கையும் பாழ் ஆயிருமோ? ஐயகோ! இது அவனுக்கு நலிவு தருமே!


பண்டு நாம் வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்;

அவனொடு மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?”


[image error]இவன் இப்படி உறுதியாக என்னை மனசால் தாங்குவதைப் பார்த்தால்…

பண்டு நாம் வேறு அல்லம்

= சென்ற பிறவியில், விட்ட குறையோ தொட்ட குறையோ?


முற் பிறவியில் நாங்கள் வேறு வேறு அல்ல! ஒன்றே! ஒன்றானவன் உருவில் ரெண்டானவன்!

அவனொடு மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு? = அவனிடம் ஏன் நெஞ்சமே உனக்கு இந்த மாறுபாடு?


ஏய் மனசே, அவனொடு மாறுபாடு எதுக்கு?

= வேணாம்;

= உன்னோடு மாறுபடு; அவனோடு ஈடுபடு!


dosa 107/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2012 06:09

November 22, 2012

சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

[image error]சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே!

புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை!

= 10 Avtars/ 12 Hands

= இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை!


என்ன ஆதாரம்? என்ன தரவு??


கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது!

அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:)



“விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் சில பெரியவா, தய்யா-தக்கா -ன்னு குதிச்சாங்களாம்:)

Okies; I am Very Sorry! But.. என்ன தான் குதிச்சாலும்.. விநாயகரைச் சங்கத் தமிழில் கண்டுபுடிக்க முடிஞ்சுதா? இல்லை தானே? அதான் உண்மை:)


Matter is Very Simple!

*இன்றைய நிலை வேறு; தொன்மம் வேறு!

*இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

இந்தப் புரிதலே போதும்!


உங்களுக்கு இன்னிக்கி புடிச்சிருக்கு என்பதற்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாது!

*உங்க தனிப்பட்ட விநாயக வழிபாட்டை “இழிவு” செஞ்சா, அது தப்பு.

*ஆனா, “சங்கத் தமிழில் விநாயகர் இல்லை” -ன்னு எழுதினா? தப்பு அல்ல; அது தொன்மவியல்!



தமிழ் நிலத்தின் இறைத் தொன்மம் = “நடுகல்”!


[image error][image error]தமிழ் முன்னோர் தலைவர்கள், தங்கள் ஆதிகுடிகளைக் காத்த நினைவாக = கல் சமைத்துப் போற்றுவது= நடுகல்! நீத்தார் பெருமை! அதுவே இறைமை!


“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்!

கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!


முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)

= இப்படித் தோன்றியவர்கள் தான்!

= ஆதி குடிகளின் இனத் தலைமை!


கந்தன் =  இவன் “ஸ்கந்தன்” அல்ல!

திருமால் =  இவன் “விஷ்ணு” அல்ல!


இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.

சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை)


* முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்[image error]

*
குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்


மால் = தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர்“ – திரு.வி.க ஆய்வுரை!

மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி!


முருகு = பெண்கள் மேல் இறங்கும் ஒரு “ஆவி”த் தெய்வம் என்பதே சங்க மரபு!

“வேலன் வெறியாடல்” என்கிற நாட்டார் பூசை;

வெறியாடிகளின் மேல் ‘முருகு’ இறங்கல்; ஆட்டுப் பலி, “சூர் மடிதல்” -ன்னு பழங்குடி வழக்கம்.



கந்து = யானையைக் கட்டி வைக்கும் குறுந் தூண்; அதையும் அந்த யானையே தான் சுமந்து செல்லும்!

தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமந்து செல்லுதல் போல்..

கட்டுப்படாக் கடவுளும், அன்பால் தானே கட்டுப்படல்;  அதுவே, கந்து + அன் = கந்தன்!


வள்ளி = கந்து  (எ) கல்தூணில் படரும் வள்ளிக் கொடி!


[image error]இது முன்னோர்களின் காதல் வாழ்வுக்கு அடையாளம்;

(மறைந்து விட்ட) தலைவன் – தலைவி = நடுகல்லும், அதில் படரும் கொடியுமாய்!

= கொடிநிலை, கந்தழி, வள்ளி  (தொல்காப்பியம்)

நினைவு போற்றுதல்! அன்பே தெய்வம்! இயற்கை வாழ்வு! புராணங்கள் இல்லை.


நடுகல்லு வச்ச இடத்தில், ஒரு காதல் காட்சி பார்க்கலாமா? வாங்க..


அவளுக்கு அவன் மேல் “மிக்க” அன்பு! ஆனா, அவனோ அவளைக் “கண்டும் காணாதது” போல் இருக்கான்.

தன் காதலை வாழ்விக்க முடியாம, அவ என்ன பண்ணுறா? = தற்கொலை? இல்லையில்லை!


சூர் நசைத் தலையாய் “நடுகல்” கண்டே

பரிந்தனென் அல்லனோ, இறை இறையானே


[image error]முன்னோர்களே,  நீங்க தூக்கி வளர்த்த இவனுக்கு..

நீங்களே என் அன்பையும் புரிய வைக்கக் கூடாதா?”

-என்று, நடுகல்லையே அவ வணங்குறா!


தன் முன்னோர் மரபின்  மேல், அவ கொண்ட மதிப்பு!

அந்த மதிப்பால், அவன் மதிப்பில் அவ உசந்துட்டா;

அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டான்; இதழ் இழுத்து உறிஞ்சிக்கிட்டான்; இதுவே மாமூலனாரின் குறுந்தொகைப் பாடல்!


இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய “லிங்கம்” போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள்:)[image error]

ஆனால், அன்றைய தமிழில் “ல” -ன்னே எழுத்து தொடங்காது; லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்!

லிங்கம் = வடமொழி; தமிழில் எழுதும் போது = இலிங்கம்!

அப்புறம் எப்படி நடுகல் = “லிங்கம்” ஆகும்?

தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்று; “மதம் ஆன பேய்” வந்து ஊடாடினால்? = இதான் கதி:(




தொல்காப்பியர் காட்டும் நடுகல் = “சீர்த்தகு மரபு”

காட்சி, கால்கோள், நீர்ப்படை, “நடுகல்”

சீர்த்தகு “மரபில்“ பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)


இந்த “மரபு” தான் -> தமிழ் மரபு என்று ஓங்கி வளர்ந்தது!

* முன்னை “மரபின்” முதுமொழி முதல்வ = திருமால்

* அரும்பெறல் “மரபின்” பெரும்பெயர் முருக = முருகன்



கலப்பின் காலம்:


வணிகம்-தொடர்பு காரணமாய், வடமொழி (எ) வடநெறி, தமிழ் நிலத்தின் ஓரமா வந்து குந்திக்கிட்டு இருக்கு! இது தொல்காப்பியருக்கும் தெரியும்! அதான் “வட எழுத்து ஒரீஇ” (ஒதுக்கு) -ன்னு எழுதினாரு!


பண்பாடுகள் சற்று கலக்கத் தான் செய்யும்!

யாரும் தனித்து வாழவியலாது; ஆனால்.. ஆனால்…


அப்படிக் கலக்கும் போது,

* ஒரு சமூகம், தன் “வேர்”களை இழந்து விடக் கூடாது!

* மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கல்; அதுவே நல்லது!


[image error]தமிழில், 5% பிற மொழிச் சொல் Okay;

ஆனால் 35% சம்ஸ்கிருதச் சொல் புகுத்தினால்?


Parasite போல்… ஒட்டி ஒட்டியே, உறிஞ்சி இழுத்து விடும்!


“சொல்/பொருள்” என்ற சொற்களே நாளடைவில் மறைஞ்சிப் போய்..

“வார்த்தை/அர்த்தம்”-ன்னே புழக்கம் ஆயீரும்!


ஆங்கிலமாச்சும் பரவாயில்லை, “பிகர்”-ன்னு எழுதினா, உங்க பாட்டி கூட Figure என்பது இங்கிலீஷ்-ன்னு சொல்லீருவாங்க:)

ஆனா சம்ஸ்கிருதச் சொற்கள்: “வார்த்தை/அர்த்தம்”?

அதுவும் தமிழ் தானோ? எ. நம்மையே நம்ப வைத்துவிடும் தலைமுறைத் தீமை, இந்த Parasite தீமை!


நம்மிடம் இல்லாத சொற்களை, பிற மொழிகளில் இருந்து பெற்றுக் கொளல் தவறில்லை.

ஆனால் இருக்கும் சொல்லை/சொத்தை அழித்து, கடன் வாங்குதல் அறிவீனம் அல்லவா?


தொல்காப்பியர், வடசொற்களும் தமிழில் புழங்க flexibility (எ) நெகிழ்வு குடுத்தாரு.

எடுத்துக்காட்டு:

*கமலம்= தற்சமம் (அப்படியே எழுதுவது)

*பங்கயம்= தற்பவம் (பங்கஜம்: தமிழ் விதிகளுக்கு உட்பட்டு, பங்கயம் என்று மாற்றி எழுதுவது)

இந்த Flexibility பெயர்ச் சொற்களுக்குச் சரிவரும்! ஆனா இதையே எல்லாத்துக்குமே நுழைக்கப் பார்த்தால்?



 


[image error]அரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!


“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”


இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?:)



பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்

ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!

* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!

* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!


[image error]அரச/ அதிகாரப் பரவலே முதலில்;

பின்பே இலக்கிய/ சமூகப் பரவல்!


ஆம்!… அது கடைச்சங்க காலம்!

கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது, ஜாதியும் பிடித்தது:(


முல்லை-குறிஞ்சி என்ற ஆதிகுடி காட்டு வாழ்க்கை!

புலம் பெயர்ந்து..

மருதம் என்ற வயல்வெளி/ ஆற்றோர நாகரிகம் கண்ட மக்கள்.

நாகரிகம் செழிக்கச் செழிக்க, “அந்நிய நெறிகள்” நுழைந்து, தமிழ் நிலத்தை மாற்றிப் போட்டது!



பண்பாட்டுக் கலப்புக்குப் பின்…



அரசனைக் ‘கொண்டது’ போல், ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிக் ‘கொள்வது’?

= வாழ்க்கையின் துன்பமெல்லாம் விலகி ஓடணுமா?

= பூஜா-புனஸ்கார-ஜோதிட-பரிகாரம்

ஜோதிட மயக்கம், நம் அப்பாவி மக்களுக்குப் பெரும் மயக்கம் அல்லவா?


(கண்ணகி கிட்டவும் பரிகாரம் செய்யச் சொல்றாங்க, இழந்த புருசனை அடைய; ஆனா அவள் செய்ய மறுக்குறா)


[image error]“Hello தமிழ் மக்களே.. [image error]

உங்க முருகனும், திருமாலும், இங்கேயும் இருக்கா பாருங்கோ! எங்க சம்ஸ்கிருதத்திலும் இருக்கா பாருங்கோ!

வெறுமனே  நடுகல்லா இல்லாம… Magic; ‘ஜாலி’ யான புராணக் கதைகள்”?:)


தங்கள் வேதக் கடவுள்களான.. சோமன், அக்னி, இந்திரன், அஸ்வின், மித்ரன்..

இவர்களையெல்லாம் சற்றே தள்ளிவைத்து, தமிழ்க் கடவுள்களையே -> புதிய புராணக் கடவுள்களாக உருவாக்கம்!

Local பாணியில் பேசிப் பேசியே, Local மக்களைக் கவரும் அன்றைய “பிராமண சுவிசேஷம்”:)


* கந்தன் -> ஸ்கந்தன் ஆனான்!

* திருமால் -> விஷ்ணு ஆனான்!


தமிழ்த் தொன்மங்களின் மேலேயே, பலதும் ஏற்றப்பட்டன.

நம் தொன்மங்களை, நாமே இழக்க வைக்கும் “உத்தி” = புராணம் ஏற்றுதல்!


இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?

பிரபலம் ஆகாத வரை= அவள் எளியோரின் சமயபுரத்தாள்!

ஆனால் கொழிக்கத் துவங்கியவுடன்= அர்ச்சகாள் வந்துட்டா!

“ஆத்தாள்” -> “அம்பாள்” ஆகி, தல “புராணமும்” இப்போ வந்துருச்சு அல்லவா? அதே உத்தி!

நமக்கும்.. ஆத்தாளை விட, அம்பாள் என்று சொல்வதே, Promotion அடைந்த திருப்தி:(


சிறு தெய்வம்= நம் தாழ்வு மனப்பான்மை!

அதையே மந்திரம் சொல்லிக் கொண்டாடினால்? பெருந் தெய்வம்= உயர்வு மனப்பான்மை!


உங்க நடுகல் முருகனும்/திருமாலும், Sanskritலயும் இருக்கா பாருங்கோ!

*முருகன் aka சுப்ரமண்யன்= கம்மி

*திருமால் aka விஷ்ணு= சற்று அதிகம்


[image error]“விஷ்ணு”வை அங்கே அதிகம் பரவிட்டாங்க; மும்மூர்த்தியுள் ஒரு மூர்த்தி.

மோகினி + கிளுகிளு கதைகள்!

“ஸ்கந்தனை”, ஏனோ அங்கு அதிகம் பரவலை; மும்மூர்த்தி ஆக்கலை;

ஆனாலும், சுப்ரமண்ய ஸ்வாமி, தேவ ஸேனாபதி என்ற பட்டம்!


*அங்கு அதிகம் பரவாதவன் மட்டுமே = “தமிழ்க் கடவுள்” முருகன் -என்று இன்றைய கண்ணுக்குத் தெரிகிறான்;

*ஆனால், முருகனும் திருமாலும்= இருவருமே தமிழ்த் தொன்மங்கள் -என்று சங்கத் தமிழ்க் கண்ணுக்கு நல்லாவே தெரியும்!


முருகன்= தமிழ்க் கடவுள் என்று சைவப் பெருமைக்கு, இன்று சொல்லிக் கொண்டாலும்..

அந்தத் தமிழ்க் கடவுள் கதை பூராவும்= சம்ஸ்கிருத/புராணக் கதையாய் இருப்பது ஏன்?


(நெத்திக் கண்ணுல தோன்றினாரு, 6 ஒடம்பு ஒன்னாச்சு, கைலாஸ மலையில் பழம் நீ அப்பா, பிரணவ மந்திர உபதேசம்;

வீரபாஹூ Friend ஆனாரு; பாஹூ= சம்ஸ்கிருதம்; தோள் எ. பொருள்! அப்பறம் எப்படித் தமிழ்க் கடவுள்?:)

அசுரர் குடியையே கெடுத்தாரு, அசுரர் “குடிகெடுத்த” ஐயா வருக;  தூங்கும் குழந்தைகள் உட்பட அசுர பட்டணத்தையே தண்ணிக்குள் மூழ்கடிச்சாரு, தேவஸேனா கல்யாணம்)


“தமிழ்க் கடவுள்” முருகன் மேல், ஏன் பூராவும் சம்ஸ்கிருதக் கதைகள்?

இந்த எளிய உண்மை= நம் மக்களுக்கு உறைப்பதே இல்லை!:)  அதான் மதம் என்கிற மாயை!



மேலும் பேசுவோம்!


தங்கள் நடுகல்லும்/தொன்மமும் = “பெருந்தெய்வமாய்” மாறிப் போச்சு;[image error]

அப்போ ஆதி குடிகளின் கதி?


= கொல்லிப் பாவை, இசக்கி, சுடலை, சாத்தன்-சாத்தி…

இப்படி, முன்னோர்களை, வேறு வேறு பெயரில், வழிபட்டுக் குறுகிப் போயினர்!

(சாத்தன்-சாத்தி என்கிற தமிழ்ப் பெயர்கள்: சீத்தலைச் சாத்தனார், ஒக்கூர் மா-சாத்தியார்)


மக்களும் “மாற”த் துவங்கியாச்சி..

அட, நம்ம முருகன் தானே, அங்கேயும் சுப்ரமண்ய ஸ்வாமியா இருக்கான்?

கூடவே கிளுகிளு கதைகள்!

கல்யாண + வியாபார பரிகாரங்கள் -ல்லாம் சொல்றாங்களே, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு?



 மன்னன் முதற் கட்ட மாற்றம்! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி..
அரசியல் அதிகாரம் பெருக்கி, மக்கள் இரண்டாம் கட்ட மாற்றம்!

அரசியலும், தன்னலமும்.. எதையும் செய்யும்!

முருக-“இயற்கை” வழிபாடு குறுகி -> முருக-“புராண” வழிபாடு பெருகியது!

பொய்யான “கதைகளே” மலிந்து போய்,

இன்று, ஆலயம் தோறும்.. முருகத் தமிழ்க் கடவுள் & திருமால் தமிழ்க் கடவுள் -> சம்ஸ்கிருதக் கடவுள் ஆகி நிற்கும் கோலம்!:(



சமணம் & பெளத்தம்:


[image error]இவை கூட வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்!

ஆனா அவர்கள் தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கலை; “புது நெறி”-என்றே அறிமுகம் செய்தார்கள். கந்தனை -> “ஸ்கந்த தீர்த்தங்கரர்” ஆக்கலை!


சம்ஸ்கிருத நெறி மட்டுமே = தமிழ் மரபியல் சிதைப்பு செய்தது.


தொன்மத்தின் மேலேயே புராணம் ஏற்றினால்?

= எது இருந்தது? எது வந்தது?

= கண்டுபுடிக்கவே முடியாது! Thatz the Trick! Ir-reversible:(



இயற்கையான முருகனுக்கு = 6 தலை, 12 கை, 18 கண்:)

நாமளும், ஆறு-தலை/தரும் ஆறுதலை -ன்னு “வார்த்தை விளையாட்டு” விளையாடி, மகிழ்வு கொண்டு விடுகிறோம்; வெட்கக்கேடு:(


சென்னைக்கு அருகே திருப்போரூர்;

இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்னிக்கும் நடுகல்லைப் பார்க்கலாம்!

உருவமோ/முகமோ இருக்காது;

ஆனா முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைச்சிருக்கும்!


யாரேனும், “ஹிந்து”  மத அபிமானிகள் வாசிக்க நேர்ந்தால் மன்னித்து விடுங்கள்.

உங்களுக்குப் “பிடிக்கலை” -ன்னு தெரியும். அதுக்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாதே?

வசையாடி/இழிவு செய்தால் கோச்சிக்குங்க; ஆனால் சங்க கால உண்மைக்கெல்லாம் கோச்சிக்காதீக, Please!


மனசாட்சி இருப்பின், நீங்களே யோசிங்களேன்.

* சமண-பெளத்தம் = பாளி மொழி -> அதன் கலப்பு தமிழில் இருக்கா?

* வேத/ பிராமணீய மதம் = சமஸ்கிருதம் -> ஏன் இது மட்டும் அதீதக் கலப்பு?

அவரவர் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்:)



சங்கத் தமிழ் வாசிப்புக்கு = “காலம் அறிதல்” இன்றியமையாதது!


[image error]கொஞ்சூண்டு புற400 பாட்டில்… பஞ்ச பாண்டவர், இராமன் + இதர தெய்வங்களின்  குறிப்பு கூட வரும் (மிகச் சொற்பமாக)

ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார் பாருங்கோ; பேஷ் பேஷ்!

தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)


அப்படீ-ன்னா, “Sati” = தமிழாள் பண்பாடா என்ன?:) மாண்ட கணவனோடு, பெண்ணை நெருப்பிலே தள்ளல்! அதுவும் புற400-இல், ஒரு மூலையில் லேசா வரும்:([image error]

இதுக்குத் தான் காலம் அறிதல் முக்கியம் -ன்னு சொன்னேன்!


* முதல்/இடைச் சங்கத் தமிழில்= இது போன்ற “புராணக் குறிப்பு” வராது!

* கடைச் சங்க காலம் = கலப்புக்குப் பின்னரே, புராணம் லேசு மாசாய் வரும்!


இவை = “தொகை” நூல்கள்; தொகுக்கப் பட்டவை! ஒரே காலத்தி்ல் எழுதப் பட்டவை அல்ல!

*முதல்-இடைச் சங்கப் பாட்டும் வரும்

*கடைச் சங்கப் பாட்டும் விரவி வரும்

ஆனா, எதுஎது, எந்தக் காலம்? -ன்னு அகச் சான்று உண்டு!


என் iPod Playlist -இல், பாபநாசம் சிவன், KV Mahadevan, மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா, Rahman -ன்னு “தொகுத்து” இருக்கு! எல்லோரும் ஒரே காலமா என்ன?:)


MSV போட்ட “Melody”-க்கு, இன்னிக்கி  Remix என்கிற “Tragedy” வேற:(

இதே போல், குறுந்தொகைக்கெல்லாம் “கடவுள் வாழ்த்து” -ன்னு Remix சொருகினார்கள்:(

நினைவில் வையுங்கள்:

எட்டுத் தொகையில்= 8 “கடவுள் வாழ்த்துச்” செய்யுள்களும், சைவ சமயப் பிற் சேர்க்கையே! Remix செய்யப்பட்டதே!



மக்கள் வாழ்வியல்:


[image error]*குறிஞ்சி: வெறியாடும் முருகன் கூத்து!

*முல்லை: காதலர்கள், மாயோன் (திருமால்) மேல் சத்தியம் செஞ்சி, காதலை நிரூபிப்பது!

-இப்படி.. “வாழ்வியல்” (Social Life);


ஆனால், (இல்லாத) நெற்றிக் கண்ணால் எரிப்பது? பரியை நரி ஆக்குவது?

இது மக்கள் வாழ்வியல் அல்ல; புராணம்!

“வடவரின் புதுக் கதையில் வருவது போல்” -ன்னே சங்கப் பாட்டும் இருக்கு; It’s just a “Myth”


காலம் செல்லச் செல்ல..

மதம் (எ) சக்தி வாய்ந்த ஆயுதம், “நிறுவனப்படுத்தல்” ஆகி விட்டது.

ஆனா அப்போதும், தமிழ்ச் சமூகம் = தன்னை “முழுசா” ஒப்புக் குடுத்துடலை, சம்ஸ்கிருத நெறிக்கு!

Kannagi is the Proof!


கலப்புக்குப் பின்னால் எழுந்ததே சிலப்பதிகாரம்!

கோவலன் திருமணமே = “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்”  தான் நடக்குது;

அது காதல் திருமணம் அல்ல!

அரசனுக்கு இயைந்த, வணிகச் சமூகப் பெற்றோர் நடத்தும் திருமணம்!

பெற்றோர் சொற்படி, பார்ப்பனன் நடத்தி வைத்த திருமணமே ஆயினும், அதே கண்ணகி.. சடங்கு செய்ய மறுக்கிறாள்!


பிரிஞ்ச தம்பதிகள் பரிகாரம்:

பிரிந்து விட்டவனை மீண்டும் அடைய, சோம குண்டம்/ சூர்ய குண்டம் = பரிகாரம் பண்ணலாம் வாடீ-ன்னு… அவள் பக்கத்து வீட்டுப் பார்ப்பனத் தோழி தேவந்தி கூப்பிட..

கண்ணகி சொல்லும் தமிழ்நெறிச் சொல் = அது எங்களுக்குப் பீடு (பெருமை) அன்று”!



பண்பாட்டின் பரவல் | Expansion of Civilization:


[image error]முல்லையின் மாயோன், குறிஞ்சியின் சேயோன்

= முதலில் வைக்கிறார் தொல்காப்பியர்;

= காடு-மலை; முதலில் தோன்றிய நாகரிகம் அல்லவா?


காடு-மலை கடந்து, மக்கள் புலம் பெயர்ந்த போது.. தங்கள் தொன்மங்களையும் உடன் எடுத்தே சென்றார்கள்! மருதம்= வேளாண்மை; நெய்தல்= கடலாண்மை கண்டனர்.



மருத நிலம் = வேந்தன் (அரசன்); மாறிக் கொண்டே இருப்பவன்
நெய்தல் நிலம் = வருணன்/ வருள்நன் (கடல்காற்று); மாறிக் கொண்டே இருப்பது

முருகன்/திருமால் போல்.. வேந்தனோ/காற்றோ = ஒரு நிலைத்த அடையாளம் அல்ல!

அதனால் மக்கள் வாழ்வியலில், வேந்தன்/வருணன் அதிகம் பேசப்படலை.

துறை/கூத்து -ன்னு வேந்தன்/வருணனுக்கு.. “வாழ்வியலாய்” ஒன்னுமேயில்ல; வெறும் நில அடையாளம் மட்டுமே!


[image error]கொற்றவை (எ) பழையோள் = இவளும் தமிழ்க் கடவுளே!

= நடுகல்லாய் உதித்து, உருப் பெற்றவள்!

= பாலை நில எயினர்கள்/ வழிப்பறிக் கள்வர்களின் தெய்வம்!


“நாகரிகம் குறைந்த” கள்வர் என்பதால்.. இவள் பேரிலே மிகுந்த இலக்கியப் பாடல்கள் இல்லீன்னாலும்..

திணை அளவில் இல்லாது, துறை அளவிலாச்சும் (கொற்றவை நிலை) குறித்து வைக்கிறார் தொல்காப்பியத்தில்! தொல்காப்பியர் பேதம் இல்லாதவர்; எவரையும் ஒதுக்காமல், “உள்ளது உள்ளபடி”.. தமிழாய்க் குறித்து வைக்கின்றார்!


மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்,

தாவா விழுப் புகழ் = “பூவை” நிலையும்

-ன்னு தொல்காப்பியர் சொல்லும் அந்தப் பூ-வை என்பதே => பூ-சை ஆனது;


இப்படி, இயற்கை வழிபாடாய் இருந்த ஒன்று..[image error]

* நாள் செல்லச் செல்ல, “புதிய புராணம்”= இலக்கியத்திலும் பரவத் துவங்கியாச்சு

* வேந்தன்= இந்திர பகவான், வருள்நன்= வருண பகவான் -ன்னு ஆக்கியாச்சு!



நினைவில் வைங்க; வேந்தன் = இந்திரன் அல்ல!

வேந்தன்= மருத நில மன்னவர்கள்; (மாறிக் கொண்டே இருப்பவர்கள்)

அதே போல் வருணன் = (வருள்நன்)

வருள்= சூழ்தல்; நிலத்தை வருளும் (சூழும்) கடல்!


முது “வருண்”, முந்து கிளவாச் செறிவு  -ன்னு திருக்குறளே இருக்கு!

வருள்/வருண்= சூழ்தல்!

தமிழ் “வருணம்” வேற; சம்ஸ்கிருத “வர்ணம்” வேற;

வருள்வதால்= வருணன்; வருளும் கடற்காற்று= நெய்தல் நிலத் தெய்வம்!


ஆனால், வேந்தன் = இந்திரன் -ன்னு உரைகளில் மாற்றி எழுதினார்கள்:(

இந்திர விழா என்று மன்னனும் தோற்றுவித்தான்!

வேதக் கடவுள்கள் சோமன் /இந்திரனை, Local மதப் பரப்பலுக்காக “சற்றே ஒதுக்கி வைத்து”, ஹோமம்/ யக்ஞங்களில் மட்டும் இந்திரனை விட்டுவிடாது பிடித்துக் கொண்டனர்! ஓம் இந்திராயா ஸ்வாஹா.. யாகத்தில், இந்திரனுக்கு அவிர்ப்பாகம்!


உலகெங்கும், ஆஸ்திகம்= கடவுள் உண்டு; நாஸ்திகம்= கடவுள் இல்லை!

ஆனால் சம்ஸ்கிருத/ பிராமணீயக் கொள்கையில் மட்டுமே, ஆஸ்திகம்= வேதம் உண்டு; நாஸ்திகம்= வேதம் இல்லை!(கர்ம மீமாம்சை= இறை மறுத்து, ஆனால் வேதம் மறுக்காதவர்கள்)


வேதம் மறுத்த புத்தரும், மகாவீரரும்.. இவர்களைப் பொருத்த மட்டில்= நாத்திகர்கள்:)

நீ, இறைவனை மறுத்தாலும் பரவாயில்லை; எங்கள் வேதத்துக்கு உடன்பட்டால்= நீயும் ஆத்திகனே!

என்னே இறை அன்பு! கடவுளை விடவும், தங்கள் கட்டமைப்புக்கு உருவாக்கிக் கொண்ட வேதமே பெரிது!:)

அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே! -என்று பாடும் சங்கத் தமிழ் மாண்பு எங்கே? இச் சுயநலம் எங்கே?



Grammar = The Breeding Ground


தமிழ் இலக்கணமே= இவர்கள் முதலில் கை வைப்பது; Cut at the root!

(உங்க இலக்கணத்தைத் திரித்து, உங்களுக்கே வழங்கும் பண்டிதாள்)


* ஒரு புடை உருவகம் = “ஏக தேச” உருவகம் -ன்னு.. இன்னிக்கி  பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்திலெல்லாம் நிலைச்சிருச்சே!

Why should Tamizh Grammar have “ek” & “ekam” inside it?

Does Sanskrit Grammar has, Tamizh words “Or & Eer (ஓர் & ஈர்)” in it? உங்க மனச்சாட்சியைக் கேளுங்கள்!


இது வடமொழி (எ) ஒரு தனிப்பட்ட மொழியின் குற்றமல்ல; அது நல்ல மொழி தான்.

அந்த மொழியில் ஊறிய, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் குற்றமே இது!


[image error]Does Sanskrit have Tamizh sounds ழ & ற?

But Tamizh “MUST” have sanskrit sounds ஸ்ரீ & ஷ!

இது தானே “நியாயம்“?:) புகுத்து, தமிழில் கிரந்த எழுத்தை!


தமிழின் சிறப்பான  ழ-க்குப் பதிலா, ட -போட்டுக்கலாம் ன்னு, தமிழ் இலக்கணத்தையே மாத்தி எழுதப் பார்த்தாங்க;

தமிழ்க் கடவுள் முருகனே வந்து  “ழ”-க்குப் பதில் “ட” போடச் சொன்னான்-னு சைவக் கதையும் புனையப்பட்டது:) கச்சியப்ப சிவாச்சாரியின் கந்த புராணம்!


ஆனால், எத்துணை “சம்ஸ்கிருத/மதம்” மிகுந்தாலும், இன்று வரை… தமிழ் மொழி இயல் = தொல்காப்பிய அடிப்படையே! அதை எவரும் அசைக்க முடியலை!

காலங் காலமாய்ப் பின்னிப் பிணைந்து… இன்று வரை..

தொல்காப்பியமே காத்துக் குடுக்கும்= நம் தமிழ்த் தொன்மம்!



Further Read/Ref:

1) ஞா.தேவநேயப் பாவாணர் – தமிழர் சமயம்

2) தொ. பரமசிவன் – பண்பாட்டு அசைவுகள்

3) மா. இராசமாணிக்கனார் – கால ஆராய்ச்சி (ebook)


சரி, பெரீய்ய்ய முன்னுரை போதும்:) வாங்க, இன்றைய பாட்டுக்குச் சுருக்கமாய்ச் செல்வோம்:)

தமிழர்களுக்கு, நைவேத்யம் செய்யும் கடவுள்கள் இல்லை!  என்ற தெளிவான எதிர்ப்புக் குரல்; சங்கத் தமிழிலேயே!

இது போல் பலப்பல அகச் சான்றுகள்!



நூல்: புறநானூறு (335)

கவிஞர்: மாங்குடிக் கிழார்

திணை: வாகை

துறை: மூதின் முல்லை


அடல் அரும் துப்பின்…..

குரவே தளவே குருந்தே முல்லையென்று

இந்நான்கு அல்லது பூவும் இல்லை;


கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே

சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு

இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;


துடியன் பாணன் பறையன் கடம்பனென்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை;

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி

ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்


கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!



காபி உறிஞ்சல்:


[image error]அடல் அருந் துப்பின்…..

குரவே, தளவே, குருந்தே, முல்லை என்று

இந்நான்கு அல்லது பூவும் இல்லை;


வெல்ல முடியாத வலிமை (துப்பு) கொண்ட இனம்;

* குரவம், தளவம் (பிச்சிப்பூ), குருந்து, முல்லை

= இந்த நான்குமே இவங்க குடிப் பூக்கள்;


கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே

சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு

இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;


வரகு, தினை, கொள்ளு, அவரை = இந்த நான்குமே இவங்க குடி உணவு;


[image error]துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை;


துடியன், பாணன், கடம்பன், பறையன் = இந்த நான்குமே இவங்க குடி முறைகள்;


அரசின் உயர் அலுவலர் = பறையன்; But today itz an offensive word;

எள்ளல் பேர்வழிகள் கும்மி அடித்து அடித்து, “பறையன்” என்னும் செந்தமிழ்ச் சொல், தீச் சொல்லாய் மாறி விட்டது:(


ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,

ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்


பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்;

ஒளி வீசும் தந்தம் உள்ள யானை = அதையே சாய்க்க வல்லவர்;

அப்படிச் சாய்க்கும் போது, தாமும் சாய்ந்து இறந்தார்கள்  = குடி காத்த முன்னோர்;


[image error]கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!


அவங்க நினைவாக இட்ட = நடுகல்!

அந்த நடுகல்லைத் தான் போற்றுவோமே அன்றி…

நெல்-அரிசியைக் கொட்டி (உகுத்து),

“நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை! =நெல் உகுத்துப் பரவும் “கடவுளும் இலவே”!



(Strong Views recorded by maangudi kizhaar, during the “culture change” of his times)


இது போன்ற அகச் சான்று= பல சங்கத் தமிழ்ப் பாடல்கள்!

மன்னன் மாறினாலும்.. தான் மாறாது,

தமிழ்க் கொள்கைக்கு எதிரான.. சம்ஸ்கிருத/ வேத/ பிராமணீயம்; அவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்த்தமைக்குச் “சாட்சி”யாய்.. ஆங்காங்கு நிற்கும் சங்கத் தமிழ் வாழ்க!


dosa 106/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2012 06:00

November 21, 2012

ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?

[image error]“ஊமைச் செந்நாய்” – ஜெமோ நாவல் -ன்னு மட்டும் நினைச்சிக்காதீங்க:)

சங்கத் தமிழில் உள்ள விலங்கு;

பாலை நிலத்து வேட்டையாடி விலங்கு! – காதே அம்புட்டு பெருசா.. பயமா இருக்கும்!


மலையோரக் கிராமத்துக் காடு/புதர்களில் காணலாம்; காட்டு நாய்;

தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, பெரிய மாட்டையே கூட அடிச்சீரும்;  ஆனா ரொம்பத் திங்காது; அதான் வேட்டைக்கு உதவி;

Type Typeஆ சத்தம் போடும் –  அழுகை, கேவல், சீழ்க்கை-ன்னு; வேட்டை விலங்குகளில் Mega Star:)


குறுகலா முகம், கருப்பா மூக்கு, பழுப்பாக் கண்ணு;

பார்த்தாலே சொல்லீறலாம்;  கடிச்சிக் குதறும் அசைவப் பிராணி -ன்னு:)  

= டேய், அது எப்படிறாச் “சைவமா” மாறும்?:)


அட, நான் சைவத்தில் இருந்து அசைவமா மாறலீயா? அது போல Reverse:)

அம்மா வறுக்கும் மீனுக்குத் தனி மவுசு;

ஆனா, நான் சமணப் பள்ளியின் பாதிப்பால் 14 வருசமாச் சைவமாக் கிடந்தேன்;

வந்து மாத்தினான் ஒருத்தன்!  வந்தே -ஏ-மாத்தறம்:)


ஆனா, இந்தச் செந்நாய்…., காதலுக்காகச் சைவமா மாறிடுச்சாம்!

அடா, அடா, அடா – பார்ப்போமா =  சைவக் காதலா? அசைவக் காதலா?:)



நூல்: ஐங் குறு நூறு (397)

குறுந்தொகையை விடச் சிறிது; min just 3 lines


கவிஞர்: ஓதலாந்தையார்

(ஓதல் என்னும் ஊரிலே, ஆதன் தந்தை = ஆந்தை)


திணை: பாலை

துறை: உடன்போக்கு


கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை

குருளைப் பன்றி கொள்ளாது கழியும்;

சுரம் நனி வாரா நின்றனள்’ என்பது,

முன்னுற விரைந்த நீர் மின்

இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே!


சூழல்:

உடன் போக்கு = அதாங்க பொண்ணு, அவனோட ஒடிப் போயிட்டா:)

சங்கத் தமிழில் ஒடிப் போறதுக்கு, என்ன அழகான சொல்லு-ல்ல?:)


என்ன தான் அவன் பக்கத்தில் இருக்கும் போதும், பொறந்த வீட்டுப் பாசமும் கூடவே!

வீட்டில் தேடுவாங்களோ? -ன்னு கிடந்து அடிச்சிக்குது;

வழியில், தன் ஊருக்குப் போறவங்களைப் பார்த்து, “பயப்பட வேணாம்-ன்னு சொல்லுங்க” -ன்னு சொல்லி வுடறா!



காபி உறிஞ்சல்:


[image error]கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை

குருளைப் பன்றி கொள்ளாது கழியும்;


கவிழ்ந்த மயிருள்ள கழுத்து; ஆண் செந்நாய் (ஏறு)

அது, வழியில், பன்றிக் குட்டியைப் பாக்குது; ஆனாலும் கொல்லாமல் விட்டு விடுகிறது; ஏன்?


(குருளை = பன்றியின் சிறுசைக் குருளை-ன்னு தான் சொல்லணும்; தொல்காப்பிய மரபியல்!

யானைக் கன்று, குதிரை மறி, பன்றிக் குருளை, அணில் பறழ்…


ஆண் மயில் = போத்து, பெண் மயில் = அளகு… இதெல்லாம் மரபியல்;

ஆனா நாம இப்பல்லாம் மனுசப் பொண்ணுங்களையே, குட்டி -ன்னு தான் சொல்லுறோம்:)


ஏன், கொல்லவில்லையாம் அந்தச் செந்நாய்?

முந்தைய பாட்டில் விடை இருக்கு = “மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்

பெண் மான் – ஆண் மான் காதல்; கூடவே அந்தக் காதலுக்கு சாட்சியாப் பொறந்த மறி மான்;

இந்த இளங் குடும்பத்தைப் பாத்துட்டுச், செந்நாய்க்கே மனசு வரலையாம்!


[image error]சுரம் நனி வாரா நின்றனள்’ என்பது

முன்னுற விரைந்த நீர் மின்

இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே


காட்டிலே, போய்க்கிட்டு இருக்கா, காதல் வாழ்வு தொடங்க!

பயப்பட வேணாம்; பின்னாடி வருவா -ன்னு சொல்லுங்க!


நீங்கள் என் ஊருக்குத் தானே போறீங்க? சற்று விரைந்து போய்ச் சொல்றீங்களா?

யாரு கிட்ட? = என் ஆயத்தார் / மன்றத்து வீட்டார்; முறுவல் புன் சிரிப்போட சொல்லுங்க!


ஏன் புன் சிரிப்போட சொல்லச் சொல்லுறா?

அங்க தான் பொறந்த வீட்டுப் பாசத்தையும் மீறிப், புகுந்த வீட்டு மோகம்:)


டேய், என் ஆயத்தானுங்களா! என் அத்தான் கூடப் போறேன்!

வழியில், இந்த ஊமைச் செந்நாய் கூடக், குடும்ப அன்பை மதிச்சிக், கொல்லாம நிக்குது;

அதே போலக் காதலை எதிர்க்காது, நீங்களும் அன்பில் நில்லுங்க!


= சொல்லாமச் சொல்லுறா; அதான் புன்சிரிப்பு, பெண் சிரிப்பு:)

= இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே!


dosa 105/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2012 19:00

November 20, 2012

ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்?

[image error]காதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன?

= நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?:)


இந்த உணர்ச்சி = ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகம்!

ஏன் -ன்னு தெரியுமா?

சொல்லுங்களேன் பார்ப்போம்:)


இந்தக் குறுந்தொகைப் பாட்டை எழுதியதும் ஒரு பெண் கவிஞர் தான்!

= என் மனசுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச கவிஞர்

= இவ தனிப்பட்ட வாழ்வு ரொம்ப துயரம் மிக்கது;

= “காதலே” -ன்னு வாழ்ந்து (?) விட்ட பெண்


சங்க காலப் பெண் கவிஞர்களில்…

இவ பாட்டில் மட்டும் = உணர்ச்சி + துணிவு = ரெண்டுமே தெறிக்கும்!

= ஆண் கவிஞன், “முலை-அல்குல்” -ன்னு பாடினா, “கவிச் சுவை”-ன்னு ஏற்கும் சமூகம்;

= பெண், அதே போல், ஆண்களைப் பாடினா???

“சரியான Case-டா” -ன்னு சொல்றவங்க, 21st CE-லயும் உண்டு = Ilakkiya Hypocrisy:)


ஆனா, இவ = 2000 years back “கட்டுடைத்தவ”;

தோழி கோதை (எ) ஆண்டாளை விட இவளே முன்னோடி!


[image error]கன்றும் உணாது, கலத்தினும் படாது…திதலை அல்குல் என் மாமைக் கவினே

= எழுதியவ இவ தான்!

காதலன் புரிதல் கை கூடலை; பெண்ணின் அந்தரங்கத்தில் வீணாகுதே; “வெள்ளைப்” படுதே -ன்னு “பச்சையா” எழுதினவ;


என் மனத்துக்கு இனியாள்; சங்கத் தமிழ் மொழியாள்!

அவ பாட்டு தான் இன்னிக்கி Dosaவில்; பார்ப்போமா?



நூல்: குறுந்தொகை

கவிஞர்: வெள்ளிவீதியார்

திணை: குறிஞ்சி

துறை: தமர் வரைவு மறுத்தல்


அம்ம வாழி, தோழி! – நம் ஊர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-

தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,

‘நன்று நன்று’ என்னும் மாக்களொடு

இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே


சூழல்:



[image error]கனாக் கண்டேன் தோழீ நான் – ன்னு பாடுனவ ஆண்டாள்; ஆனா அவளுக்கும் முன்னாடியே…

தன் தனிப்பட்ட காதல் (எ) துன்பத்தை,

கனவு (எ) இன்பம் ஆக்கி மகிழ்ந்தவள் = வெள்ளிவீதியார்


தாமதமானாலும்… தலைவன் தன்னைத் புரிஞ்சிக்கிட்டான்; இப்போ பொண்ணு கேட்டு வந்திருக்கான்;

ஆனா, அவன் பேசுகின்ற பேச்சு, சற்று வீறுள்ள பேச்சு;

எங்கே அவன் பேசக் கேட்டு, தன் வீட்டில், கல்யாணம் மறுத்து விடுவார்களோ? -ன்னு கவலையாம் பொண்ணுக்கு:)

= தலைமகன், தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, வரைவு மறுப்பவோ? எனக் கவன்ற தலைமகள்;


அவளுக்குத் தோழி ஆறுதல் சொல்வது போல் களம்!

இப்படி, விதம் விதமான கனவுகளை, ஒவ்வொரு பாத்திரத்தின் மேலேற்றி எழுதும் வெள்ளிவீதியார்!


ஆனா, வெள்ளிவீதியின் உண்மைக் காதல் பத்தி நமக்கு எப்படித் தெரியும் -ன்னு பாக்குறீங்களா?

அவள் பட்ட அல்லாடல்களை – சொல்லாடல்களை,

சக நண்பர்கள்-கவிஞர்கள், வேறு வேறு சங்கக் கவிதையில் எழுதிப், பதித்து வச்சிட்டாங்க:(


(Further Read/Ref : முனைவர். தாயம்மாள் அறவாணன் – மகடூஉ முன்னிலை ; பெண்புலவர் களஞ்சியம்)



காபி உறிஞ்சல்:


அம்ம வாழி, தோழி! – நம் ஊர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?


ஏன்டியம்மா தோழீ, நம்மூருல…

பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் நல்லவர்கள்/நண்பர்கள் இருக்காங்கடீ!

= பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?


[image error]தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்


தண்டு கையில் உடையவர்கள்;

வெள்ளைத் தலை; அதில் சிதவல் (தலைப்பாகை) கட்டினவங்க!


= பெருசு -ன்னு இன்னிக்கி சொல்றோமே…

= தலை நரைத்தாலும், அறிவு நரைக்காதவர்கள்

= தூய காதலின் முன்…, குலம்/ கோத்ரம்/ சாதி/ சவரன் பேசாதவர்கள்; பெண்ணை ஏசாதவர்கள்


[image error]சிதவல் = சிதறிய துணி;  நெசவுத் தறியிலே…

* ஓரமாச் சிதறி எடுப்பதால் சிதவல் = தலைப்பாகை/ துண்டு

* வெட்டி எடுப்பதால் = வேட்டி;

எந்தப் புண்ணியவான், தமிழ்ச் சொல் வேட்டியை, வே’ஷ்’டி ஆக்கினானோ?


‘நன்று நன்று’ என்னும் மாக்களொடு

இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே!


நன்று நன்று -ன்னு சொல்கின்றனர் = தலைவனோடு வந்த உற்றார்; (மாக்கள் = மக்கள்)

இன்று, உங்கள் வரவால், பெருமை சேரும் -ன்னு, தலைவனின் உறவுகளை வரவேற்கும் மக்கள்!


[image error]இந்த அவை – இந்த மக்கள் இருக்கும் போது, நீ ஏன்டீ பயப்படுற?

ரெண்டு வீடும் முட்டிக்காமப் பேசுவாங்க;


சும்மாக் கிடந்து கவலைப்படாதே தலைவியே! பிரிந்த நீங்கள், ஒன்னு சேரும் நேரம் நெருங்கிருச்சி = பிரிந்தோர்ப் புணர்ப்பர்; பிரிந்தோர்ப் புணர்ப்பர்!

(முருகனருள் – கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்)


இப்படிக் கனவுகளாய்…

தமிழ் எழுதியே, வாழ்க்கை வாழ்ந்த தையலாள் = வெள்ளிவீதியார்!

நின் அகம் வாழி; புறம் வாழி;

துணிவும் தமிழும் வாழி வாழி!


dosa 104/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2012 04:00

November 19, 2012

துன்பம் இன்பமாகும் குறள்!

[image error]திருக்குறளில், “இன்பம்” எங்கெல்லாம் வருது? = தேடிப் பாருங்க!

kural.muthu.org

துன்பமே, எப்பிடி இன்பம் ஆவுது? -ன்னு தெரிஞ்சிப் போகும்!:)


* அவன் இல்லாமல் இருப்பது = துன்பம்

* ஆனா, அவன் இல்லாத போது, அவனையே எண்ணியெண்ணி ஏங்குதல் = இன்பம்:)


சரியான, லூசுப் பொண்ணா இருப்பாப் போல!

டேய் முருகா, நான் அப்படியெல்லாம் இல்ல; நான் உன்னை நினைக்கவே இல்ல! இல்லவே இல்ல:)



துன்பம் உற வரினும் செய்க – துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை;

(பொருட்பால் – வினைத் திட்பம் – 669)


இன்பம் கடல் மற்றுக் காமம் – அஃது அடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது;

(காமத்துப் பால் – படர் மெலிந்து இரங்கல் – 1166)


அடிக்கோடு இட்டவை – என்ன தொடை? -ன்னு சொல்லுங்க:)



காபி உறிஞ்சல்:


1) துன்ப-இன்பம்


துன்பம் உற வரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை


(முடிவிலே) இன்பம் தரப்போகும் ஒன்றைச் செய்யும் போது

(துவக்கத்திலே) துன்பம் மிக வந்தாலும், துணிவு மேற்கொண்டு, அதைச் செய்து முடிக்க வேண்டும்!


2) இன்ப-துன்பம்


இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது


காமம் = மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது;

காமம் = வருத்தும் போது அதன் துன்பமோ கடலை விடப் பெரியது;


இப்பிடி, ஒரே உவமை (கடல்),

இரண்டுக்கும் ஆகி வருவது என்ன அணி? I dunno, u tell me plz:)


dosa 103/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2012 04:00

November 18, 2012

காதலா? காமமா? How to Know It?

[image error]In today’s world….., காமம் -ன்னா ஒரு meaning; காதல் -ன்னா ஒரு meaning!

* அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்;

* அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:)


[image error]ஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்;

= கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

= கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்?:)

= கற்றவர்களைக் கற்றவர்களே “விரும்புவர்” என்று தானே பொருள்!


சரி டா மச்சி; அப்படீன்னா… திருக்குறளில், காமத்துப் பால்?

= அது என்ன விருப்பத்துப் பாலா?:)

சும்மானா அடிச்சி வுடாத ரவி:) இதுக்குப் பதில் சொல்லேன் பார்ப்போம்!:)

குறளில், மலரினும் மெல்லிது காமம் -ன்னு வருதே! அது “பலான” காமம் தானே?:)



ஆமாம்!

ஆனா, “அந்தக்” காமத்திலும், அது “விருப்பம்” என்னும் பொருளில் தான் வரும்!


[image error]காதலில் விளையும் உடல் விருப்பம்

= மெய்யுறு புணர்ச்சி = அதுவும் காமமே!



சங்கத் தமிழில், அந்தக் களவு இன்பம்/விருப்பத்தை = “காமம்” என்றே அழைத்தனர்;

So, காமம் நல்லது!:) & கறை நல்லது:)


உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது
– இது காதலில் விளையும் காமம் (விருப்பம்)


தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்
– இது கல்வியில் விளையும் காமம் (விருப்பம்)


Good; அப்படீன்னா “காமம் புடிச்சவன்” -ன்னு, பேச்சு வழக்கில் பொருள் ஏன் மாறிச்சு?

ரவிக்கு இருப்பது காமமா? காதலா?:)

= எப்படிக் கண்டு புடிப்பது? பார்க்கலாமா?:) Letz go குறுந்தொகை – 4 lines!



நூல்: குறுந்தொகை 42

கவிஞர்: கபிலர்

திணை: குறிஞ்சி


காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென, அருவி

விடர் அகத்து இயம்பும் நாட!- எம்

தொடர்பும் தேயுமோ, நின் வயினானே?


சூழல்:

இரவில் வரும் தலைவன்; ஆனா முன்பு போல் வர முடிவதில்லை;

போச்சு; அவ்ளோ தான்! காதல் புட்டுக்கிச்சா?

இங்கிட்டு தான் தோழி சொல்கிறாள்: காதல் – காமம் வேறுபாட்டை!



காபி உறிஞ்சல்:


[image error]காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென


காமம் ஒழிவது = காமம் போயிருச்சோ? விருப்பம் போயிருச்சோ?

நடு யாமத்திலே, மா மழை பெய்வது போலடா, இது!


யாமம் என்பது தூய தமிழ்ச் சொல்;

அதை “ஜா”மம் -ன்னு ஆக்கிட்டாங்க, தமிழிலே கலப்பு செய்வோர்;

“ஜா”மம் என்பதால், தமிழ், வடமொழியிடம் கடன் வாங்கிய சொல்லு போல ஆயிருச்சி-ல்ல?

Thatz the Trick:( Take your own word, prefix & push it back to u; You never know:(


யா, யாமை = கருமை;

அதான் யாமம் (நள்ளிரவு), யாமளை (அன்னை கொற்றவை)

But, யாமம் chg to ஜாமம்; யாமளை chg to ஷ்யாமளா


சரி விடுங்க; உவமையைப் பார்ப்போம்!

நடு யாமத்திலே மழை பெஞ்சா? = காமமும் அப்படித் தானாம்!

யாமத்தில் பெய்த மா மழை! = What does it mean? No Double Meanings:)


அருவி விடர் அகத்து இயம்பும் நாட!- எம்

தொடர்பும் தேயுமோ, நின் வயினானே?


டேய் குறிஞ்சி – அருவி நாடனே,

* ஒரு பெருக்கால பெய்த மழை, பின்னாளில், மலை முழைஞ்சு எல்லாம் சொட்டிக்கிட்டு இருக்கும்;

* ஒரு பெருக்கால பெய்த காமம், பின்னாளில், மன முழைஞ்சு எல்லாம் சொட்டிக்கிட்டு இருக்கும்;


[image error]இவளுக்கு வெறும் காமம் -ன்னு நினைச்சிட்டியா?

காமம் = மெய் உறு புணர்ச்சி = உடல் விருப்பம்!  நல்லது தான்;

ஆனா, அந்தக் காமமே நின்னு போனாலும், இவ தொடர்பும் தேயுமோ, உன் மேலே?


தொடர்பு” -ன்னு அற்புதமான சொல்லைப் போடுறாரு பாருங்க!

* தொடர்பு = Not just association

* தொடர்ந்து வரும் = அதனால் தொடர்பு


[image error]உன் காமமே நின்னு போனாலும், இவ “தொடர்பு” தொடரும்!

=  மனசால் அவனையே தொடர்ந்து வாழ்வது!

= “தொடல்” நின்னுருச்சி; ஆனா “தொடர்பு” நிக்கலைடா; நிக்கவே நிக்காது!


இப்போ புரியுதா?

* காமம் = நம் மேல் உள்ள “விருப்பம்”; நம் இன்பத்துக்கு இருப்பது

* காதல் = அவன் மேல் உள்ள “விருப்பம்”; அவன் இன்பத்துக்கு-ன்னே இருப்பது

காமம் ஒழிவது ஆயினும்,

உன் வயின், தொடர்பும் தேய்மோ? – யாமத்து மழையே!


dosa 102/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2012 02:15

November 17, 2012

கை உள்ள Guy = செந்தில்! (செந்து+இல்)

#dosa365 வாசக அன்பர்கள், என்னை மன்னிக்க!

என்ன தான் “தினம்” ஒரு சங்கத் தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும்…

கடந்த இரு வாரங்களாக, இங்கு பதிவுகள் வரவில்லை;


இந்தியப் பயணம்; முக்கியமான கால் சிகிச்சை இருந்தாலும் கூட என்னால் எழுதியிருக்க முடியும்;

முன்னொரு முறை அப்படி எழுதி/scheduled செய்தும் உள்ளேன்;

உண்மையான காரணம் அதுவல்ல! அவன்! = எவன்?


[image error]அலைகள் வாய்க்கும் செந்தூர் முருகவன்;

மூச்சே விட முடியாமல், நிறைந்து கொண்டான் பாவி:)

அவனைச் சுற்றிச் சுற்றி ஏதோவொரு ஞாபகம்;

சென்று வந்த பின்பும்…செந்தூரைச் சுற்றியே நினைவுகள்; கனவுகள்!


எந்த வேலையும் உருப்படியாப் பண்ண முடியல; கிளம்பும் போது Flight Return Journey பயணச் சீட்டு எடுத்துக்கிடாம, Onward Journey சீட்டு எடுத்துக்கிட்டு கிளம்புறேன்;

Egmore கிட்டக்க வந்த போது தான் உறைக்குது; வண்டியை மறுபடியும் வீட்டுக்கு விடு; அப்பா கிட்ட செம திட்டு:) தங்கச்சிக்கோ அந்தத் திட்டே லட்டு:)


ஒரு வழியா, அந்தச் செந்தூரை வச்சே, மீண்டும் Dosa-வில் துவங்குறேன்! நாளிடைப் பட்டமைக்கு மன்னிக்க!



ஒங்களுக்குத் தெரியுமா? செந்தூர் முருகன், கடலுக்கு அடியில் தான் இருக்கான்; How many hands he has?

மேலே வாசிங்க!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் -ன்னு பேச்சு; அப்பறம் எப்படிய்யா கடலோரம்?:)


பத்துப் பாட்டுள் = முதல் பாட்டாய்த் திருமுருகாற்றுப்படை-யை வைத்துள்ளார்கள்;

நக்கீரர் எழுதியது; அந்தக் கால வழக்கத்துக்கு வித்தியாசமாய் எழுதியது;

நாடாளும் மன்னனிடம் ஆற்றுப்படுத்தாமல், மனசாளும் மன்னனிடம் ஆற்றுப்படுத்தும் நூல்!


அது கடைச் சங்க காலத்தின், கடைக் காலம்;

வடமொழிக் கலப்பு, அரசியல் ரீதியாக நன்கு நிகழ்ந்து விட்ட காலம்;

கந்து-நடுகல்-பெருந்தெய்வமான தமிழ் முருகன்…

இயற்கைக்கு மாறாய், 6face/12hands என்றெல்லாம் புராணம் கலந்து விட்ட காலம்!


[image error]ஆனால், நக்கீரர், இரண்டையும் ஒளிக்காது மறைக்காது காட்டுகிறார்;

* மறைக் காதுள்ள அந்தணர் உள்ள சுவாமிமலையும் காட்டுவாரு

* மறைக்காது, ஆடு பலி குடுத்துப் பூசிக்கும் பழமுதிர்சோலையும் காட்டுவாரு


முன்பே ஒரு முறை, முருகாற்றுப்படையை #dosa வில் பார்த்துள்ளோம்..

வெள்ளை அலைகள் வந்து தாலாட்டும் காட்சி!

இன்று தாலாட்டும் காட்சி அல்ல, கருவறைக் காட்சி; This song is all about hands = கை உள்ள Guy!



நூல்: திருமுருகாற்றுப்படை (Lines 104-118)

கவிஞர்: நக்கீரர்

திணை: பாடாண்

துறை: ஆற்றுப்படை


(திருச் சீர் அலை வாய்)


ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்

செம் பொறி வாங்கிய, மொய்ம்பின் சுடர் விடுபு

வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு நிமிர் தோள்:


விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

ஒரு கை; உக்கம் சேர்த்தியது ஒரு கை;

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை;

அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை


மார்பொடு விளங்க, ஒரு கை

தாரொடு பொலிய; ஒரு கை

கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒரு கை

பாடு இன் படு மணி இரட்ட; ஒரு கை

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய; ஒரு கை


வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;

ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி



உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே. அதாஅன்று



செந்தூர் – ஆலயக் குறிப்பு:


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்; அப்பறம் எப்படிக் கடலோரம்?:)

குறிஞ்சி = மலை; முல்லை = காடு

இந்த ஆதி மக்கள், இடம் பெயர்ந்து விளைநிலமும் (மருதமும்), கடல்செல்வமும் (நெய்தல்) கண்டார்கள்; அப்படி இடம் பெயர்ந்த போது, தங்கள் தொன்மங்களையும், உடன் எடுத்தே சென்றார்கள் – முருகன் (எ) தொன்மத்தையும்; Thus he came, from mountains to sea…


இன்று நாம் காணும் திருச்செந்தூர் = மாட மாளிகை கூட கோபுரம்;

ஆனா, சங்க கால/ சிலப்பதிகாரக் காலத்துச் செந்தூர் = எளிமையான கோட்டம்!


[image error]கோபுரமெல்லாம் 19th CE-இல், மூவர் சாமிகள் முயற்சியெடுத்துப் பெருசாக் கட்டியது; அதுவும் இன்னிக்கி பூட்டியே தான் வச்சிருக்காங்க;

அதுக்கு முன்னாடியெல்லாம் செந்தூர் = ஒரு வீடு போலத் தான்;

கோட்டம்! = பனை மரங்கள் சூழ், அலை வாய்ச் செந்தூர்க் கோட்டம்;


[image error]கடலில் இருந்து 100 மீட்டர் கூட இருக்காது, அவன் இருக்கும் இடம்!

கடல் பொங்கினா முங்கிற வேண்டியது தான்!


செந்தூர்க் கருவறை = கடல் மட்டத்தை விடக் கீழே, பள்ளத்தில்!

ஞாபகம் வச்சிக்கோங்க; நீங்களும் கடலுக்கு அடியில் தான்:)  Over head Water Tank – Sea Tank:)


அவனை இறங்கித் தான் பாக்கணும்;

பார்த்த பின், நம்மை, மேலே ஏற்றி விடுவான்:)


செம்பாறைச் சந்தன மலையைக் குடைந்து கட்டிய அறை; குளு குளு -ன்னு அலை வாய்;

இன்னிக்கி மலை இருக்கும் இடமே தெரியாது பொடி ஆக்கியாச்சு; சேயோனை ஒட்டி இருக்கும் மாயோன்/திருமால் ஆலயத்தில்… மலையின் கொஞ்சமே கொஞ்சம் மிச்சப் பகுதியைப் பார்க்கலாம்;


[image error]ஒரு வீடு போல எளிமையான கோட்டத்தில்…

புராணங்களும்/ போத்தி (எ) பூஜா பரம்பரைக்காராளும் புகுந்து கொண்டு,

தமிழ் முருகனைச், “சுப்ரமணிய ஸ்வாமி” ஆக்கி விட்டனர்;


(உண்மை கசப்பினும் உண்மையே; எவரேனும் வருந்தினால் மன்னிக்க; இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்)

எனினும், அவன் பண்டைத் தமிழ் அடையாளங்கள் தேய்ந்து விடாமல்…

இலக்கியத்திலும்/பதிவிலும்… தமிழோடு ஒன்றியே நின்று வருகின்றான்!


கையில் மலர் ஏந்திய ஒரே முருகன் ஆலயம் = செந்தூர்;


அவன் மேனி, கரும் பாறையாய் இல்லாது…

வெண்மை-கருமை கலந்த, மாக்கல் போல் வரி வரியாய்… திருமுழுக்கிலே காணலாம்;

* ஒரு கையில் தாமரை மலர், இன்னொரு கை ஒய்யாரம்!

* பின் கையில் குறு வேற் படையும், மணி மாலையும்!


அவன் முகமும் முறுவலும், அவன் மார்பும் மறைப்பும்..

பிறந்த மேனியாய் நிற்கும் காதலனைக் கண்ட பின்..

என் அமுதினைக் கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!



காபி உறிஞ்சல்:



(மேலே சொன்ன கருவறைக் காட்சி, இந்தப் பாடல் வரிகளில் தெறிக்கும்;

All about hands – கை உள்ள Guy)


[image error] ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்

செம் பொறி வாங்கிய, மொய்ம்பின் சுடர் விடுபு


ஆரம் என்னும் கழுத்து மாலை தாழ்வாத் தொங்கும் பகட்டு மார்பு;

அது என்ன பகட்டு? = “ஷோக்கு”ப் பேர்வழியா அவன்?:)

பகடு = எருது; மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் -ன்னு குறள்; அப்படி ஏறு போல் மார்பு!

ஒரு பொண்ணு, காதலன் முகத்தைக் கண்ட பின், மார்பையே காண்பாள் – அதிலே தலை சாய்க்க!


செம் பொறிகள் திட்டுத் திட்டா அவன் ஒடம்பு முழுக்க! அதனால் என்ன? அதில் தான் அவன் வலிமை சுடர் விடுது;


வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு, நிமிர் தோள்:

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை


[image error]வண் புகழ் = வள்ளல் புகழ்!

செல்வத்தைக் கூட குடுத்துருவான் மனுசன்;  ஆனா, தன் புகழை இன்னொருத்தருக்குக் குடுத்துற மனசு வரவே வராது;

ஆனா இவன் குடுப்பான் = வண் புகழ்/ புகழ் வண்


அப்படிக் குடுப்பதால், வசிந்து = வளைந்து, வாங்கி = நிமிர்ந்து…

ஒரே சமயத்தில் வளைந்தும் + நிமிர்ந்தும் உள்ள தோள்கள்;

திருமுழுக்கில், கிட்டக்க அவன் மேனியைப் பார்த்தா அந்த Bend தெரியும்!


விண் செல்லும் மரபு = மேல் உலகம் செல்லும் நன்னெறி

ஐயர் = ஐயன்/ ஐயா என்பதின் பன்மை; (சாதி அல்ல)

அப்படி, விண்ணுலகம் செல்லும் நெறியில் உள்ளவர்க்காக ஏந்திய மணிமாலைக் கரம்!


[image error]உக்கம் சேர்த்தியது ஒரு கை;

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை,


குறங்கு = தொடை!

ஒரு கை = தொடையில் அசையுதாம்:)

ஒரு கை = உக்கத்தில் (பக்கத்தில்) வைத்து,

கலிங்கம் = ஆடை/வேட்டி; தொடையில் உள்ள வேட்டியை adjust பண்ணிக்கறானோ மாப்பிள்ளை?:)


அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; 


[image error]யானை, மயில், ஆடு = மூன்றும் முருகனுக்கு ஊர்திகள்;

யானை = குறிஞ்சி; மயில்/ஆடு = முல்லை

குறிஞ்சித் தலைவன், கையில் அங்குசம் ஏந்தியுள்ளான், யானை அடக்க!


ஐ இரு வட்டம் = வியப்பு + கருமை + வட்ட நுனி = வேல்

எஃகு வலம் திரிப்ப = அந்த வேலை வலமாய் ஏந்தி இருக்கான்

கருப்பான எஃகு வேலே முருகன் வேல்;

தங்க வேல்/வைர வேல் எல்லாம் சும்மா ஆடம்பரம்-அலங்காரம்;


ஒரு கை மார்பொடு விளங்க,

ஒரு கை தாரொடு பொலிய; 


[image error]ஒரு கை = மார்பில்

ஒரு கை = மாலையில்!


ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப,

ஒரு கை பாடு இன் படு மணி இரட்ட; 


ஒரு கை = கீழே விழுவது போல் இருக்கும் தொடி (வளையல்-Bracelet);  கல கல சத்தம் எழுப்புறான்

ஒரு கை = வளையில் உள்ள மணிகள்; அதை இரட்டிக், கல கலக்குறான்!


[image error] ஒரு கை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய,

ஒரு கை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;

ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி


ஒரு கை = நீல வான மேகத்தை உலுக்குறான், மரத்தில் பழம் உலுக்குவது போல்; மழைத் துளி கொட்ட..

ஒரு கை = வான் அர மகள், அவளுக்கு மாலை சூட்டுறான்!


வானர மகள் = குரங்குப் பொண்ணு -ன்னு எடுத்துக்கக் கூடாது; அதான் பதம் பிரிச்சிக் குடுத்துள்ளேன்;

வான் அர மகள் = யாரு?

வான்-ன்னா மேகம்; அர-ன்னா அரவம் (பாம்பு);

பாம்பிலே படுத்துள்ள கருமேகம்; பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்!

அந்த கருப்பன் = மாயோன்; அவன் மகள், அதே கரிய வள்ளி; Family Color:)


இப்படி, பன்னிரு கையும் (அ) பல் இரு கையும்;

இந்தப் பாட்டில் சொன்ன இத்தனை கையும் ஏதோ type type-ஆ ஆயுதம் ஏந்திக் காட்டலை நக்கீரரு; வேட்டி சரி செய்து கொள்ளல் போன்ற இயற்கையான செயலாவே காட்டுறாரு;


அதான் பல+இரு+கை

பல இரு கை = கைகளால், பலப்பல செய்து காட்டும் செந்தூர் முதல்வன் – செந்தில்!


செந்து + இல் = செம்மை + அகம் = Good Heart!

* இயேசு நாதப் பெருமானை Good Shepherd என்பது போல்,

* முருகப் பெருமானை Good Heart = செந்து+இல் = செந்தில்!


…..

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே. அதாஅன்று


சீர் = புகழ்!

ஓங்கு + உயர் + விழு = மூனும் ஒரே பொருள் தான்; ஒரு பொருள் மும் மொழி:)

ஒவ்வொன்னாப் போட்டுப் பாக்குறாரு நக்கீரர்; ஆனா எவ்வளவு அடைமொழி போட்டாலும் அடைக்க முடியலை; அடையா அழகன்; நெஞ்சுக்குள் அடைவான்!


[image error]அலைகள் வந்து வந்து வாய்க்கும் = அலைவாய்;

தி்ரு+சீர்+அலை+வாய் = திருச்செந்தூர்

நிலைஇய பண்பே = அலைவாயில் நிலையா நிக்குறான்;


[image error]கடைசி வரியை…

அலைவாய்ச் சேறல் நிலைஇய பண்பே -ன்னு படிக்காம, ஒன்னாக் கூட்டிப் படிங்க…

ஓங்கு+உயர்+விழு…

“சீர்+அலைவாய்”ச் சேறலும்… நிலைஇய பண்பே!


முன்பு… சொன்ன சொல்லு மாற மாட்டான்;

முன்பு… பழகின பண்பு மாற மாட்டான்;

= நிலைஇய பண்பே!

= என், அவன் அவன் அவன்!

= செந்தூர் முருகவா சேர்த்துக் கொள்!


dosa 101/365


(குறிப்பு: செந்தூர்க் கருவறையில், ஓதுவாரோடு அதிக நேரம் கண்ட காட்சி ஆதலால்,

காணாதவர்க்கும் அக் காட்சி இன்பம் கிட்ட, இந்த வருணனை என்றேனும் பயன்படக் கடவது…)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2012 01:45

November 16, 2012

100th Dosa: மான் கலவி – பார்த்த தலைவி!

[image error]dosa365 = இஃது ஆய்வுத் தளமோ (அ) சிறப்புத் தளமோ அன்று!

அத்தகு பெருமையோ/ வல்லமையோ இதற்கு இல்லை!

இது ஒரு தமிழ்ப் பூங்கா மட்டுமே; பூங்காவுக்கென்று பெருமை ஒன்னுமில்லை; செடி கொடிப் பூக்களுக்கே மணமும் பெருமையும்!


தமிழ் வாசிக்கும் வண்டுகள் = நீங்கள்;

இந்த 100 ஆம் பதிவிலே, உங்களுக்கு என் பல்லாண்டு வாழ்த்தும் நன்றியும்!

என்னவன் முருகவனின் கைப்பிடித்து…

இந்தத் தமிழ்ப் பயணத்தை மேலும் தொடர்கின்றேன்… பயணங்கள் முடிவதில்லை!



முன் கதை:


உங்களில் எத்தனை பேரு = அடுத்தவர் காமத்தை விரும்புவீங்க?:)

என்னடா வெவகாரமாக் கேக்குறேன் -ன்னு பார்க்காதீங்க; வாழைப்பந்தல் To வேலூர் & To திருப்பதி; பேருந்தில் ஒரு இளம் தம்பதி; கொஞ்சம் public display of affection:) பேருந்தில் பலரும் முகம் சுளிப்பு:)


எல்லாம் அடங்கி, இப்போ, ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூக்கம்!

அப்பப்போ முழிச்சி, திடீர்-ன்னு ஒருத்தர் கண்ணை இன்னொருத்தர் பாத்துக்குறாங்க;



பாக்கவேணாம் -ன்னு என் மனசு சொன்னாலும், அவர்கள் “பார்த்துக் கொள்வதைப் பார்த்துக் கொள்வதும்” ஒரு சுகம் தான்:) – அவர்கட்கு இடையூறு இல்லாமல்;

Parallel Seat அல்லவா; எனக்கும் ஏதேதோ யோசனைகள் – டேய் முருகவா, you spoiled me:)


[image error]அந்தப் பொண்ணு சன்னல் பக்கம்; அவன் அணைப்பில் அவள் = இன்பத் தூக்கம்!

திடீர்-ன்னு மாம்பாக்கம் தாண்டி…

ரோடு நெடுக்க வேல முள்ளு; சன்னல் வழியாவும் உரசுது;

இவர்களோ = ஏகாந்தத் தூக்கம்!


படேர்-ன்னு எழுந்து, அவங்க பக்கம் போயிட்டேன்;

குளிரில் நான் போட்டிருந்த Fleece Jacket ஐ அவங்க மேல் போட்டுட்டு, பேருந்துச் சன்னல் கதவை மூட, அவன் விழித்துக் கொண்டான்; புரிந்தும் கொண்டான்!


நான், இந்தப் புறம், என் இருக்கைக்குத் திரும்பி விட…

அவன் கை நீட்டி, என் கையைப் பற்றிக் கொண்டான்; விடவும் மாட்டேங்குறான்;

கண்ணில் அந்தக் காதல்-நன்றி உணர்ச்சி;


அதிகாலைக் குளிரில் நான் லேசா நடுங்குவதைப் பார்த்து…

அவள் மேல் சிக்கிக் கொண்ட என் Fleece Jacket ஐ எடுக்கணும்-ன்னு, அவளை எழுப்பியும் விட்டான்;

வேணாம்-ன்னாலும் கேட்கலை; அவள் காதில், இவன் ஏதோ சொல்ல…

அவள் புன்னகையிலேயே நன்றி சொன்னாள்; Jacket என் கைக்கு வந்துவிட்டது..


இப்போ இருவரும் சோடியா, என்னைப் பாத்துக்கிட்டு வராங்க:) எனக்கு வெட்கம்:)

அப்போ, மனசுக்குள் ஓடிய ஒரு சங்கத் தமிழ்ப் பாட்டு = அதுவே இது!



பாடல்: புறநானூறு

கவிஞர்: வீரை வெளியனார்

திணை: வாகை

துறை: வல்லாண் முல்லை


[image error]சூழல்:


வேடன்-வேடிச்சி குடும்ப வாழ்க்கை;

முன் மண்டபத்தில் இருவரும் தூங்க, பக்கத்திலே… மான்-மான் இன்பம்!

பசிக்குது;  பழம் உண்ண எழுந்த அவ, இந்த மான்-மான் கலவியைப் பாத்துட்டா;


* உதறி எழுந்தா, கணவன் விழிச்சிக்குவான்; வேடனால் மான்களுக்கு ஆபத்து!

* இருந்த இடத்தில் எக்கியே எடுத்தா, அரவம் கேட்டு, மான்கள் விலகி விடும்; புணர்ச்சிக்கு ஆபத்து!


என்ன பண்ணுவா?

= பசியோடு, அந்த மூலையில்… குறுகியே கிடந்தாளாம் தலைவி!

= மான் கலவி – பார்த்த தலைவி!


முன்றில், முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,

பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,

கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,

பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்


தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்

கணவன் எழுதலும் அஞ்சி, கலையே

பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,

இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,


மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி

கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,

ஆர நெருப்பின், ஆரல் நாற,

தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்

இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,


தங்கினை சென்மோ, பாண! தங்காது,

வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்

அருகாது ஈயும் வண்மை

உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே!



காபி உறிஞ்சல்:


[image error]முன்றில், முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,

பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்


முன்னைக் கொடி & முசுண்டைக் கொடி;

முன்றிலில், பலா மரங்களின் மேல், கொடிகள் படர்ந்துள்ளன;

பந்தலே போட வேணாம்; அப்படி ஒரு நிழல்! பலாப்பழங்கள் தொங்கும்/தூங்கும் நீழல்!


கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,

பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்


கையாள் மாளும்/ கொல்லும் வேடன்; அவன் ஒய்யாரமாத் தூக்கம் தூங்குறான்;


பார்வையாலே தழுவ முடியுமா?

= தழுவியும் தழுவாமலும்…

அப்படியான மடப் பிணை மான்கள், இணை மான்கள்!


[image error]தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்


கலை = ஆண் மான்; பிணை = பெண் மான்

மேய்ச்சல் என்னும் தொழிலை விட்டுருச்சி அந்த ஆண்! = தீர் தொழில்;

ஆனா, இன்னொரு தொழிலைப் புடிச்சிக்கிச்சி = திளைத்து விளையாடும் “இன்புறு புணர்ச்சி


புணர்ச்சியே இன்பம் தான்! அப்பறம் என்ன “இன்புறு” புணர்ச்சி?

சில சமயம், லேசா வலிக்கலாம்; துன்பம்;

அது கூட இல்லாமப் பாத்துக்குதாம் அந்த ஆண்மான்! அதனால் இன்பு உறு புணர்ச்சி;


புணர்ச்சிக்கே, புணர்ச்சி விதி சொல்லுவோமா?:)

உறு புணர்ச்சி = உற்ற புணர்ச்சி, உறுகின்ற புணர்ச்சி, உறும் புணர்ச்சி = முக்காலமும் புணர்ச்சி:)

வினைத் தொகை இன்பம்… உடல் தொகை இன்பம்!


[image error]கணவன் எழுதலும் அஞ்சி, கலையே

பிணை வயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், இல் வழங்காமையின்


அந்த இன்புறு புணர் நிலையைக் கண்ட வேடனின் வேடிச்சி…

எங்கே தன் கணவன் எழுந்து விடுவானோ? அந்த மான்களுக்கு என்ன ஆகுமோ? -ன்னு அஞ்சி


தான் எழுந்தால், அந்தச் சத்தத்தால், கலை (ஆண்), பிணை (பெண்ணை) விட்டு நீங்கிருமோ? -ன்னு அஞ்சி…

அந்தப் புணர்ச்சி இன்பம் தடைபடலாமா? = அந்த இல்லிலே (மண்டபத்திலே), நகராமல், ஒடுங்கியே கிடந்தாள்!


கல்லென ஒலித்து, மான் அதள் பெய்த, உணங்கு தினை வல்சி

கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென


இதனால், கானக் கோழி, முன்றிலில் காயப் போட்டிருக்கும் தினையைத், தைரியமாக் கொத்திக் கொத்திச் சாப்புடுது; கூடவே இதல் என்னும் புறாவும் கூட்டுத் கொத்தல்:)

ஐயோ -ன்னு பொம்பளைங்க பதறி அடிச்சிக், கோழியை வெரட்டுவாங்களே? ஆனா, இந்தப் பொண்ணு அப்படி விரட்டலை;


மான்-கலவிக்கு மதிப்பு குடுக்குறா;

அந்த இன்புறு புணர்ச்சியைப், பார்த்தும் பாராமலும்… தன்னகத்தே இன்பம் கொள்ளுறா;


[image error]ஆர நெருப்பின், ஆரல் நாற,

தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்

இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,

தங்கினை சென்மோ, பாண!


சந்தனக் கட்டையின் அருமை தெரியாமல், நெருப்புக்கு எரிக்கும் வேடர்களின் காடு;

அதில் ஆரல் மீன் நாற்றம்;

துண்டுத் துண்டா அரிஞ்ச கறி – இறைச்சி; சுற்றத்தோடு அதைக் கூடி உண்டு..

எலே பாணனே; அந்தக் காட்டு ஊரிலே தங்கி விட்டுச் செல்!


தங்காது, வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு, என்றும்

அருகாது ஈயும் வண்மை

உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே!


தனக்கு-ன்னு வச்சிக்காது, பல வேந்தர்கள் தரும் பரிசில்/திறை எல்லாத்தையும், பரிசில் வேண்டிச் சொல்வோர்க்குக் குடுக்கும் அரசன்; அங்கே போ; பரிசில் வாங்கிக்கோ; ஆனா…

அந்த அரசனைக் காட்டிலும், பெருமை உள்ளவ இந்தப் பொண்ணு; வேடிச்சிப் பொண்ணு;


[image error]


* அரசன் குடுப்பானே தவிர, தன் செல்வத்தில் யாரேனும் கை வச்சி விளையாடினாப், பாத்துக்கிட்டு இருக்க மாட்டான்!

* ஆனா, இவ பாத்துக் கிட்டு இருந்தா… கோழியும் புறாவும் கொத்தக் கொத்தப் பாத்துக்கிட்டு இருந்தா;


அவள் ஊரிலே தங்கி விட்டு, அப்பறம் அரசன் ஊருக்குச் செல்!


அப்படியான மனப் பான்மை; அப்படியான தலைவி;

மான் கலவி – பார்த்த தலைவி!

(முருகா, இவ உள்ளத்தையே எனக்கும் கொடு; சங்கத் தமிழையே எனக்கும் கொடு)



dosa (எ) தினம் ஒரு சங்கத் தமிழின் முக்கிய நோக்கம்:


[image error]


1) சங்கத் தமிழை இன்றைய கோணத்தில் படம் பிடிப்பது

= உதட்டுப் பேச்சாய் இல்லாது, உள்ளத்து உறவாய்!


2) திணை – துறை – இலக்கணம் என்று = அசை பிரிக்காமல்,

காதல் – உள்ளம் – உணர்ச்சி என்று = அசை போடுவது!


3) இன்றைய கால கட்டம் வேறு; ஆனா, தமிழ்த் தொன்மம் எப்படி?

இதைத் தொல் பூங்காவில் எட்டிப் பார்த்து மகிழ்வது;


4) எட்டிப் பாக்கணும்-ன்னா = மதம்-சமயம்/ அரசியல்/ சுயப் பிடித்தங்கள் என்னும் சுவரைத் தாண்டினால் தான் உண்டு!

தமிழைத் தமிழாய் அணுகும் மனப் போக்கு = இதை விதைப்பதும் ஒரு நோக்கம்!


5) இப்படித் தொல்தமிழை எட்டிப் பார்ப்பதால் வரும் பயன் என்ன?

இதுக்குப் பதில், இன்னொரு கேள்வியே = காதலால் வரும் பயன் என்ன? அது ஒரு மனத்தை மேம்படுத்தும் “உணர்வு”;


2000+ ஆண்டுகளாய் காதல் அதே தான்; மாறவே இல்லை;

வெளியே உடுப்பு தான் மாறுகிறது; உள்ளே உணர்ச்சி அல்ல! அதுவே = தினமொரு சங்கத்தமிழ்!


dosa 100/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2012 05:00

November 15, 2012

கம்பன்: ஆன்மீகப்-பகுத்தறிவுக் குரங்குப் பெண்!

[image error]* கூர் அறிவுள்ள பெண், ஆனால் அரசியல் செய்யாப் பெண்;

* ஆன்மிகம் தோய்ந்த பெண், ஆனால் பகுத்தறிவு மிக்க பெண்

* சாத்திரங்களைக் கண்மூடித்தனமாய் ஏற்காத பெண்


வாலி மாண்டாலும் தான் மாளாது,

அவனையே பற்றி வாழ்ந்த காதல் மனைவி = தாரை!


தாரை -ன்னா விண்மீன்!

நட்சத்திரம் போல் ஒளிர்பவள் = தாரை! ஏதோ வெறும் குரங்குப் பொண்ணு அல்ல!



வால்மீகி என்னும் ஆச்சாரம் மிக்க வடமொழிச் சாத்திரத்தோடு, 14 இடங்களில் துணிந்து முரண்படும் கம்பன்;

கொண்ட தமிழ்க் கொள்கை அன்றி, வேறு எந்தச் சாராருக்கும் அஞ்சாத கம்பன்! = நான் இது தமிழ்ப் பாவினால் உணர்த்திய பண்பு அரோ!


தாரை புலம்புறு படலம்


‘வரை சேர் தோள் இடை நாளும் வைகுவேன்

கரை சேரா இடர் வேலை காண்கலேன்;

உரை சேர் ஆர் உயிரே! என் உள்ளமே!

அரைசே! யான் இது காண அஞ்சினேன் (4202)


‘நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின்

பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம்

அறியாரோ நமனார்? அது அன்று எனின்

சிறியாரோ உபகாரம் சிந்தியார்?


‘அணங்கு ஆர் பாகனை ஆசை தோறும் உற்று

உணங்கா ஒண் மலர் கொண்டு உள் அன்பொடும்

இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும்

வணங்காது இத்துணை வைக வல்லையோ?


[image error]ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்

ஏயா வந்த இராமன் என்று உளான்

வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம்

ஈயாயோ? அமிழ்தேயும் ஈகுவாய்!


‘சொற்றேன் முந்து உற; அன்ன சொல் கொளாய்

“அற்றான் அன்னது செய்கலான் ” எனா

உற்றாய் உம்பியை; ஊழி காணும் நீ

இற்றாய்; யான் உனை என்று காண்பெனோ?


‘அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்

ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;

தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்

கருமம் கட்டளை என்றல் கட்டதோ?



வால்மீகி காட்டுவது:


தாரையைப் பின்னர் சுக்கிரீவனே மணந்து கொண்டான் என்பதே!

பிறன் மனை நயத்தல் என்பதைத் தானே குற்றமாச் சொல்லி, இராமன் வாலியை வதைக்கிறான்?

அப்பறம் இது எப்படி? = இந்தக் கேள்விக்கு வால்மீகியிடம் விடையில்லை!

வடமொழியில் பதில் இல்லை! கம்பன் தமிழே பதில் சொல்கிறது!


சூரியன் மகனும், மானத்

துணைவரும், கிளையும் சுற்ற,

தாரையை வணங்கி, அன்னாள்

தாய் என, தந்தை முந்தைச்

சீரியன் சொல்லே என்ன,

செவ்விதின் அரசு செய்தான்


அயில் விழி, குமுதச் செவ்வாய்,

சிலைநுதல், அன்னப் போக்கின்,

மயில் இயல், கொடித்தேர் அல்குல்,

மணி நகை, திணிவேய் மென்தோள்,

குயில் மொழி, கலசக் கொங்கை

மின் இடை, குமிழ் ஏர் மூக்கின்,

புயல் இயல் கூந்தல், மாதர்

குழாத்தொடும் தாரை போனாள்


* கூர் அறிவுள்ள பெண், ஆனால் அரசியல் செய்யாப் பெண்;

* ஆன்மிகம் தோய்ந்த பெண், ஆனால் பகுத்தறிவு மிக்க பெண்

* சாத்திரங்களைக் கண்மூடித்தனமாய் ஏற்காத பெண்


வாலி மாண்டாலும் தான் மாளாது, அவனையே பற்றி வாழ்ந்த காதல் மனைவி = தாரையை வணங்குவோம்!


dosa 99/365

kamban 15/52

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2012 05:00

Kannabiran Ravishankar's Blog

Kannabiran Ravishankar
Kannabiran Ravishankar isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Kannabiran Ravishankar's blog with rss.