காதலா? காமமா? How to Know It?

[image error]In today’s world….., காமம் -ன்னா ஒரு meaning; காதல் -ன்னா ஒரு meaning!

* அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்;

* அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:)


[image error]ஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்;

= கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

= கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்?:)

= கற்றவர்களைக் கற்றவர்களே “விரும்புவர்” என்று தானே பொருள்!


சரி டா மச்சி; அப்படீன்னா… திருக்குறளில், காமத்துப் பால்?

= அது என்ன விருப்பத்துப் பாலா?:)

சும்மானா அடிச்சி வுடாத ரவி:) இதுக்குப் பதில் சொல்லேன் பார்ப்போம்!:)

குறளில், மலரினும் மெல்லிது காமம் -ன்னு வருதே! அது “பலான” காமம் தானே?:)



ஆமாம்!

ஆனா, “அந்தக்” காமத்திலும், அது “விருப்பம்” என்னும் பொருளில் தான் வரும்!


[image error]காதலில் விளையும் உடல் விருப்பம்

= மெய்யுறு புணர்ச்சி = அதுவும் காமமே!



சங்கத் தமிழில், அந்தக் களவு இன்பம்/விருப்பத்தை = “காமம்” என்றே அழைத்தனர்;

So, காமம் நல்லது!:) & கறை நல்லது:)


உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது
– இது காதலில் விளையும் காமம் (விருப்பம்)


தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்
– இது கல்வியில் விளையும் காமம் (விருப்பம்)


Good; அப்படீன்னா “காமம் புடிச்சவன்” -ன்னு, பேச்சு வழக்கில் பொருள் ஏன் மாறிச்சு?

ரவிக்கு இருப்பது காமமா? காதலா?:)

= எப்படிக் கண்டு புடிப்பது? பார்க்கலாமா?:) Letz go குறுந்தொகை – 4 lines!



நூல்: குறுந்தொகை 42

கவிஞர்: கபிலர்

திணை: குறிஞ்சி


காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென, அருவி

விடர் அகத்து இயம்பும் நாட!- எம்

தொடர்பும் தேயுமோ, நின் வயினானே?


சூழல்:

இரவில் வரும் தலைவன்; ஆனா முன்பு போல் வர முடிவதில்லை;

போச்சு; அவ்ளோ தான்! காதல் புட்டுக்கிச்சா?

இங்கிட்டு தான் தோழி சொல்கிறாள்: காதல் – காமம் வேறுபாட்டை!



காபி உறிஞ்சல்:


[image error]காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென


காமம் ஒழிவது = காமம் போயிருச்சோ? விருப்பம் போயிருச்சோ?

நடு யாமத்திலே, மா மழை பெய்வது போலடா, இது!


யாமம் என்பது தூய தமிழ்ச் சொல்;

அதை “ஜா”மம் -ன்னு ஆக்கிட்டாங்க, தமிழிலே கலப்பு செய்வோர்;

“ஜா”மம் என்பதால், தமிழ், வடமொழியிடம் கடன் வாங்கிய சொல்லு போல ஆயிருச்சி-ல்ல?

Thatz the Trick:( Take your own word, prefix & push it back to u; You never know:(


யா, யாமை = கருமை;

அதான் யாமம் (நள்ளிரவு), யாமளை (அன்னை கொற்றவை)

But, யாமம் chg to ஜாமம்; யாமளை chg to ஷ்யாமளா


சரி விடுங்க; உவமையைப் பார்ப்போம்!

நடு யாமத்திலே மழை பெஞ்சா? = காமமும் அப்படித் தானாம்!

யாமத்தில் பெய்த மா மழை! = What does it mean? No Double Meanings:)


அருவி விடர் அகத்து இயம்பும் நாட!- எம்

தொடர்பும் தேயுமோ, நின் வயினானே?


டேய் குறிஞ்சி – அருவி நாடனே,

* ஒரு பெருக்கால பெய்த மழை, பின்னாளில், மலை முழைஞ்சு எல்லாம் சொட்டிக்கிட்டு இருக்கும்;

* ஒரு பெருக்கால பெய்த காமம், பின்னாளில், மன முழைஞ்சு எல்லாம் சொட்டிக்கிட்டு இருக்கும்;


[image error]இவளுக்கு வெறும் காமம் -ன்னு நினைச்சிட்டியா?

காமம் = மெய் உறு புணர்ச்சி = உடல் விருப்பம்!  நல்லது தான்;

ஆனா, அந்தக் காமமே நின்னு போனாலும், இவ தொடர்பும் தேயுமோ, உன் மேலே?


தொடர்பு” -ன்னு அற்புதமான சொல்லைப் போடுறாரு பாருங்க!

* தொடர்பு = Not just association

* தொடர்ந்து வரும் = அதனால் தொடர்பு


[image error]உன் காமமே நின்னு போனாலும், இவ “தொடர்பு” தொடரும்!

=  மனசால் அவனையே தொடர்ந்து வாழ்வது!

= “தொடல்” நின்னுருச்சி; ஆனா “தொடர்பு” நிக்கலைடா; நிக்கவே நிக்காது!


இப்போ புரியுதா?

* காமம் = நம் மேல் உள்ள “விருப்பம்”; நம் இன்பத்துக்கு இருப்பது

* காதல் = அவன் மேல் உள்ள “விருப்பம்”; அவன் இன்பத்துக்கு-ன்னே இருப்பது

காமம் ஒழிவது ஆயினும்,

உன் வயின், தொடர்பும் தேய்மோ? – யாமத்து மழையே!


dosa 102/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2012 02:15
No comments have been added yet.


Kannabiran Ravishankar's Blog

Kannabiran Ravishankar
Kannabiran Ravishankar isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Kannabiran Ravishankar's blog with rss.