ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?
[image error]“ஊமைச் செந்நாய்” – ஜெமோ நாவல் -ன்னு மட்டும் நினைச்சிக்காதீங்க:)
சங்கத் தமிழில் உள்ள விலங்கு;
பாலை நிலத்து வேட்டையாடி விலங்கு! – காதே அம்புட்டு பெருசா.. பயமா இருக்கும்!
மலையோரக் கிராமத்துக் காடு/புதர்களில் காணலாம்; காட்டு நாய்;
தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, பெரிய மாட்டையே கூட அடிச்சீரும்; ஆனா ரொம்பத் திங்காது; அதான் வேட்டைக்கு உதவி;
Type Typeஆ சத்தம் போடும் – அழுகை, கேவல், சீழ்க்கை-ன்னு; வேட்டை விலங்குகளில் Mega Star:)
குறுகலா முகம், கருப்பா மூக்கு, பழுப்பாக் கண்ணு;
பார்த்தாலே சொல்லீறலாம்; கடிச்சிக் குதறும் அசைவப் பிராணி -ன்னு:)
= டேய், அது எப்படிறாச் “சைவமா” மாறும்?:)
அட, நான் சைவத்தில் இருந்து அசைவமா மாறலீயா? அது போல Reverse:)
அம்மா வறுக்கும் மீனுக்குத் தனி மவுசு;
ஆனா, நான் சமணப் பள்ளியின் பாதிப்பால் 14 வருசமாச் சைவமாக் கிடந்தேன்;
வந்து மாத்தினான் ஒருத்தன்! வந்தே -ஏ-மாத்தறம்:)
ஆனா, இந்தச் செந்நாய்…., காதலுக்காகச் சைவமா மாறிடுச்சாம்!
அடா, அடா, அடா – பார்ப்போமா = சைவக் காதலா? அசைவக் காதலா?:)
நூல்: ஐங் குறு நூறு (397)
குறுந்தொகையை விடச் சிறிது; min just 3 lines
கவிஞர்: ஓதலாந்தையார்
(ஓதல் என்னும் ஊரிலே, ஆதன் தந்தை = ஆந்தை)
திணை: பாலை
துறை: உடன்போக்கு
கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்;
சுரம் நனி வாரா நின்றனள்’ என்பது,
முன்னுற விரைந்த நீர் மின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே!
சூழல்:
உடன் போக்கு = அதாங்க பொண்ணு, அவனோட ஒடிப் போயிட்டா:)
சங்கத் தமிழில் ஒடிப் போறதுக்கு, என்ன அழகான சொல்லு-ல்ல?:)
என்ன தான் அவன் பக்கத்தில் இருக்கும் போதும், பொறந்த வீட்டுப் பாசமும் கூடவே!
வீட்டில் தேடுவாங்களோ? -ன்னு கிடந்து அடிச்சிக்குது;
வழியில், தன் ஊருக்குப் போறவங்களைப் பார்த்து, “பயப்பட வேணாம்-ன்னு சொல்லுங்க” -ன்னு சொல்லி வுடறா!
காபி உறிஞ்சல்:
[image error]கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்;
கவிழ்ந்த மயிருள்ள கழுத்து; ஆண் செந்நாய் (ஏறு)
அது, வழியில், பன்றிக் குட்டியைப் பாக்குது; ஆனாலும் கொல்லாமல் விட்டு விடுகிறது; ஏன்?
(குருளை = பன்றியின் சிறுசைக் குருளை-ன்னு தான் சொல்லணும்; தொல்காப்பிய மரபியல்!
யானைக் கன்று, குதிரை மறி, பன்றிக் குருளை, அணில் பறழ்…
ஆண் மயில் = போத்து, பெண் மயில் = அளகு… இதெல்லாம் மரபியல்;
ஆனா நாம இப்பல்லாம் மனுசப் பொண்ணுங்களையே, குட்டி -ன்னு தான் சொல்லுறோம்:)
ஏன், கொல்லவில்லையாம் அந்தச் செந்நாய்?
முந்தைய பாட்டில் விடை இருக்கு = “மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்”
பெண் மான் – ஆண் மான் காதல்; கூடவே அந்தக் காதலுக்கு சாட்சியாப் பொறந்த மறி மான்;
இந்த இளங் குடும்பத்தைப் பாத்துட்டுச், செந்நாய்க்கே மனசு வரலையாம்!
[image error]சுரம் நனி வாரா நின்றனள்’ என்பது
முன்னுற விரைந்த நீர் மின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே
காட்டிலே, போய்க்கிட்டு இருக்கா, காதல் வாழ்வு தொடங்க!
பயப்பட வேணாம்; பின்னாடி வருவா -ன்னு சொல்லுங்க!
நீங்கள் என் ஊருக்குத் தானே போறீங்க? சற்று விரைந்து போய்ச் சொல்றீங்களா?
யாரு கிட்ட? = என் ஆயத்தார் / மன்றத்து வீட்டார்; முறுவல் புன் சிரிப்போட சொல்லுங்க!
ஏன் புன் சிரிப்போட சொல்லச் சொல்லுறா?
அங்க தான் பொறந்த வீட்டுப் பாசத்தையும் மீறிப், புகுந்த வீட்டு மோகம்:)
டேய், என் ஆயத்தானுங்களா! என் அத்தான் கூடப் போறேன்!
வழியில், இந்த ஊமைச் செந்நாய் கூடக், குடும்ப அன்பை மதிச்சிக், கொல்லாம நிக்குது;
அதே போலக் காதலை எதிர்க்காது, நீங்களும் அன்பில் நில்லுங்க!
= சொல்லாமச் சொல்லுறா; அதான் புன்சிரிப்பு, பெண் சிரிப்பு:)
= இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே!
dosa 105/365
Kannabiran Ravishankar's Blog
- Kannabiran Ravishankar's profile
- 16 followers
