கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்

 “கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்”. செஞ்சி வாசியான நாராயணன் என்பவர் 1800களின் தொடக்கத்தில் எழுதிய நூல் இது.

அன்றைய கர்நாடகப் (சென்னை மாகாணம்) பகுதியில் ஆட்சி செய்தவர்கள் குறித்து, இந்நூல் பேசுகிறது. செஞ்சியின் பல வரலாற்று ஆதாரங்களுக்கு இந்நூல் எடுத்தாளப்படுகிறது. 

அதே நேரம், “கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திர”த்தை எச்சரிக்கையுடனே அணுகுகிறார், “செஞ்சியின் வரலாறு” நூலாசிரியர் சி.எஸ்.சீனுவாசாச்சாரி. காரணம், இதில் வரலாற்றுத் தகவல்களை விட புனைவுகளே அதிகளவில் இருப்பது தான்!

1700களில் எழுதுவதற்கு தாள் வந்துவிட்டது. ஆனாலும், கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது.

பின்னாளில் இதைக் கண்டறிந்த கர்னல் மெக்கன்சி, தனது சுவடிகள் சேகரிப்பில் சேர்த்தார். பின்னர் இது, 1952இல் சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் நூலாக்கம் பெற்றது. 

இந்நூல் தொடர்பான, பெரிதுமான ஆய்வை நான் மேற்கொண்டு வருகிறேன்.

அண்மையில், 22.08.24 அன்று சென்னை, உ.வே.சா. நூல் நிலையம் சென்றிருந்த போது, அதன் காப்பாட்சியர் திரு. உத்திராடம் அவர்கள், நூலகத்தின் சேகரிப்பில் இருந்த இந்நூலின் படியினைக் காண்பித்தார். அவருக்கு எனது நன்றிகள்!

நூலினைக் கைகளில் ஏந்தினேன், மகிழ்ந்தேன்..!


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2024 07:56
No comments have been added yet.