ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை

பிரிட்டிஷ் கவிஞர் வெர்னான் ஸ்கேன்னல் (Vernon Scannell ) ரொட்டியில் கவிதை எழுதும் கவிஞரைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

காகிதத்திற்குப் பதிலாக ரொட்டியில் ஒருவர் கவிதை எழுத விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதில் கவிதை உண்ணப்படும் பொருளாக மாறுகிறது. 

ரொட்டியில் எழுதுவதற்கான மையாக ஜாமை மாற்றுகிறார் கவிஞர். அதுவும் விரலால் ஜாமைத் தொட்டு ரொட்டி மீது சிறிய கவிதை எழுதுவதாகச் சொல்கிறார். கவிதை எழுதுவது குழந்தை விளையாட்டு போல மாறுகிறது. 

ரொட்டி மீது எழுதப்பட்ட கவிதையை தனக்கு விருப்பமானவர் எவராவது படிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார். ஒரு வேளை படிக்க விரும்பாவிட்டால் அந்த ரொட்டியைச் சாப்பிட்டுவிடுங்கள் என்றும் ஆலோசனை சொல்கிறார்.

கவிதையின் கடைசி வரி சிறப்பானது. கவிதையோ, ரொட்டியோ தேவைப்படாதவனை என்ன செய்வது என்று கேட்கும் கவிஞன் அவன் வாழ்வில் மோசமான வழியில் செல்கிறான் என்பதைத் தவிர என்று முடிக்கிறார்.

கவிதையும் ரொட்டியும் இரு எதிர்நிலைகள் இல்லை. இரண்டு வாழ்வின் ஆதாரங்கள் என்கிறது இக்கவிதை.

கவிதைகளை உண்பது போல வேறு எதுவும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்யாது என்று மார்க் ஸ்ட்ராண்ட் ஒரு கவிதையில் சொல்கிறார். கவிதையை உண்ணுபவனின் வாயில் மை வழிவதாக அக்கவிதை துவங்குவதாக நினைவு.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 25, 2024 04:35
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.