எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)
அதில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன.

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள புத்தகம் தபால் பெட்டி எழுதிய கடிதம்.
இக்கதை தபால்பெட்டிக்கும் ஒரு பள்ளிச் சிறுவனுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பினைப் பேசுகிறது
ஆயிரமாயிரம் தபால்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தபால்பெட்டி தன் வாழ்நாளில் ஒரேயொரு கடிதம் எழுதுகிறது
அந்தக் கடிதம் வழியாக அதன் கடந்தகால நினைவுகள் விவரிக்கபடுகின்றன.
Published on November 12, 2024 03:01