சில நூல்கள் – பரிந்துரை
அன்பின் அகரமுதல்வனுக்கு!
சென்னைப் புத்தக திருவிழாவிற்கு ஆறாம் திகதி வரத்திட்டமிட்டு இருக்கிறேன். சில பதிப்பக நூல்களை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். உங்களிடமிருந்தும் சில பரிந்துரைகளை அறிய ஆவலாய் உள்ளேன். ஏற்கனவே நீங்கள் கூறிய புத்தகங்களை வாசித்து இருக்கிறேன். எனக்கு உங்கள் பரிந்துரையில் எந்த ஏமாற்றமும் இல்லை என்பதாலேயே மீண்டும் கேட்கிறேன். பரிந்துரையுங்கள்.
அருணாச்சலம்
வணக்கம்! இந்தப் புத்தகத் திருவிழாவில் வெளியான சில புத்தகங்களை வாங்கி வாசித்து முடித்தேன். பெருமளவில் ஏமாற்றங்களே நிகழ்ந்துள்ளன. ஆனால் அதுகுறித்து எந்த முன் எதிர்பார்ப்பும் இல்லாததால் பெருங்கவலை இல்லை. நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகங்கள் ஏதென்று எனக்குத் தெரியவில்லை. நான் சில நூல்களை குறிப்பிடுகிறேன். வாய்ப்பிருப்பின் வாங்குக!
1 மலைச்சாமியின் வயலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு மேய்கிறது – மண்குதிரை
2 கொடுக்கு – முத்துராசாகுமார்
3 வேறு வேறு சூரியன்கள் – சந்திரா தங்கராஜ்
4 தரூக் – கார்த்திக் பாலசுப்ரமணியன்
5 கலாதீபம் லாட்ஜ் – வாசு முருகவேல்
6 மனித குலம் நமபிக்கையூட்டும் வரலாறு – ருட்கர் பிரெக்மன்
7 இராணுவ நினைவலைகள் – கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ்
8 கிளர்ச்சியாளர் யூசுப்கான் – எஸ்.சி.ஹில்
9 சுவாசம் காற்றில் கரைந்தபோது – பால் கலாநிதி
10 பசி – காதல் – பித்து – முகமது அப்பாஸ்
11 அனாகத நாதம் – செந்தில் ஜெகன்னாதன்
12 மறக்கவே நினைக்கிறேன் – மாரி செல்வராஜ்
13 தமிழகத் தொல்குடிகள் – எட்கர் தர்ஸ்டன்
14 கார்த்திக் புகழேந்தி கதைகள்
15 இரவோடி – என்.ஸ்ரீராம்
16 மருபூமி – அஜிதன்
17 இரண்டாம் ஆட்டம் – லக்ஷ்மி சரவணகுமார்
18 அக்காவின் எலும்புகள் – வெய்யில்
19 ஆ.மாதவன் கதைகள்
20 திருவேட்கை – தெய்வீகன்
The post சில நூல்கள் – பரிந்துரை first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

