மதிய நேரம்
ஆளரவம் இல்லை
ஒரு சிறு காற்றுகூட
வீசவில்லை
நான் இந்தக் கல்லின் மறைவில்
பதுங்கி இருக்கிறேன்
நான் திருடன் இல்லை
குற்றச் செயல் செய்ததில்லை
குழந்தைகளுக்காக ஒளிந்து
விளையாடவில்லை
மந்தமான தனிமையில் விருப்பமுமில்லை
என் இந்த இருப்பு
எத்தனை காலமாக என்றோ
எப்போது முடியுமென்றோ
எனக்குத் தெரியவில்லை
என்னைத் தேடி
யாராவது புறப்பட்டிருப்பார்களா
இன்னும்
புறப்படாமலே இருக்கிறார்களா
எனக்குத் தெரியவில்லை
ஒரு சிறு காற்று வீசினால்
நான் வீட்டிற்குப்
போய்விடலாம் என்று தெரியும்
உறைந்துபோன
இந்த மதியம்
அசையத் தொடங்கினால்
தப்பிவிடலாம்.
The post புள்ளிச் சேம்புகளின் வயல் – அம்முதீபா first appeared on சுஜா.
Published on September 24, 2024 03:42