நகரம்
சி. பி. கவாஃபி
நீ சொல்கிறாய், “நான் வேறோர் நாட்டுக்குப் போவேன், வேறோர் கரைக்கு
இதைவிட நல்ல நகரமொன்றைக் கண்டுபிடிப்பேன்.
இங்கே நான் செய்யும் எல்லாம் தவறாய்ப் போக விதிக்கப்பட்டிருக்கிறது
என் இதயம் செத்து புதைக்கப்பட்டதுபோலக் கிடக்கிறது.
இப்படி ஒரு இடத்தில், இன்னும் எவ்வளவு நாள் என் மனதைப் பூஞ்சை பிடிக்கவிடுவது?
எங்கு திரும்பினாலும், எங்கு பார்த்தாலும்,
என் வாழ்வின் பாழடைந்த சிதைவுகள், இங்கே
நான் பல ஆண்டுகளைக் கழித்தேன், வீணடித்தேன், முழுக்க நாசமாக்கினேன்.”
நீ ஒரு புதிய நாட்டைக் கண்டடையப் ப...
Published on July 27, 2025 07:42