நன்றி: அகழ்
ஒரு கலைப்படைப்பு நம் காலத்தில் என்ன செய்யமுடியும் என்பது இதுவரை எனக்கு தெளிவில்லாத கேள்வியாகவே இருந்து வருகிறது. என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும். எனவே இதற்கு இமயத்தின் உப்புவண்டிக்காரன் நாவல் என்ன செய்கிறது என்பதிலிருந்து பதில் கிடைக்குமா என்று தேடுகிறேன்.
உப்புவண்டிக்காரன் நாவல் கவர்னர் என்ற கதாபாத்திரத்தைப் பற்றியது. கவர்னர் அவன் வீட்டிலிருப்பவர்கள் சொல்வதைக் கேட்காமல் கொரோனாவில் செத்த ஒருவரின் சாவு வீட்டுக்கு போய் வருகிறான். அதனால் அவனும் பின் அவன் பெற்றோரும் அரசால் தனி...
Published on July 30, 2025 04:27