“ஆடி மாதத்துப் பூர நட்சத்திரத்தினை எல்லா வைணவக் கோயில்களிலும் ஆண்டாளின் திருநட்சத்திரமாகக் கொண்டாடுவர். இத்தலத்திறைவனான அழகரை ஆண்டாள் மணாளனாகக் கருதி மனமுருகிப் பாடியிருப்பதால் இங்கு இத்திருவிழா வைணவ அடியார்களால் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. சித்திரைத் திருவிழாவில், திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்து வரவிட்டமாலையினை அழகர் அணிவதும் அழகர் கோயிலுக்கும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குமுள்ள உணர்வுப் பிணைப்பினைக் காட்டும்.
தமிழ்நாட்டு வைணவத்தில் ஒவ்வொரு தலத்திறைவனுக்கும் ஆண்டுக்கு ஒரு நாள் அத்தலத்திறைவனின் திருநட்சத்திரமாகக் கருதப்பெறும். அழகர் கோயிலில் இறைவன் திருநட்சத்திரமாக ஆடி மாதத்து உத்திராட நாளைக் கருதுவர். இந்நாள் அழகர் கோயிலில் கொண்டாடப் பெறுவதுபோலவே திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் கொண்டாடப்பெறுவதே இதன் சிறப்பாகும். திருவில்லிபுத்தூர் கோயிலில், ஆண்டாள் சப்பரத்தில் எழுந்தருளிக் கோயிலுக்குள்ளே ஒரு மண்டபத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து இத்திருவிழாவினைக் கொண்டாடுவது வழக்கமாகும். அழகர் கோயிலில் இந்நாளில் இறைவனுக்குப் புத்தாடை அணிவிப்பர்.”
―
அழகர் கோயில்
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101814)
- life (79859)
- inspirational (76276)
- humor (44496)
- philosophy (31184)
- inspirational-quotes (29039)
- god (26985)
- truth (24835)
- wisdom (24784)
- romance (24470)
- poetry (23449)
- life-lessons (22750)
- quotes (21220)
- death (20631)
- happiness (19106)
- hope (18659)
- faith (18514)
- inspiration (17512)
- spirituality (15812)
- relationships (15745)
- life-quotes (15658)
- motivational (15498)
- religion (15439)
- love-quotes (15422)
- travel (15352)
- writing (14985)
- success (14231)
- motivation (13411)
- time (12908)
- motivational-quotes (12668)

