(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
தொ. பரமசிவன்

“திருமலைநாயக்கரே விசயநகரப் பேரரசிலிருந்து முதலில் பிரிந்த மதுரை நாயக்க மன்னராவார். எனவே பாண்டிய நாட்டின் பழைய அரசியல் சுதந்திரத்தை அவர் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியிருந்தது. எனவே தன் நாட்டில் ‘தர்மம்’ தழைக்க மன்னர் இது போன்ற திருவிழாக்களை நடத்தியிருக்கலாம் என்கிறார் அட்சன்.

இதனை விளக்குகையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டதனால் பிற என்னதான் இருப்பினும் ஓரளவு மதுரைக்குத் தாம் அன்னியர் என்பதனால், பழந்தமிழ்நாட்டின் மன்னர் எனத் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் (to legitimize himself) இத்திருவிழா திருமலைநாயக்கருக்கு வழி வகுத்திருக்கலாம் என்கிறார்.

அட்சன் தரும் இந்த செய்தி ஏற்றுக்கொள்ளக்கூடியதே. திருமலை நாயக்கருக்குப் பின்னரும், ‘மொழியால் நாம் மதுரைக்கு அன்னியர்’ என்ற உள்ளுணர்வு மதுரை நாயக்க மன்னர்களை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த அழகர் கிள்ளைவிடு தூது நூலின் தலைவி, “கிளியே, நீ செல்லும்போது திருமாலாகிய அழகர் தன் தேவியரோடு இருப்பின், அவர்கள் கோபம் கொள்ளாதவாறு என் நிலைமையினை வடுகிலே (தெலுங்கிலே) சொல்” என்கிறாள். ‘திருமாலின் தேவியர்க்குத் தெலுங்கு மொழி தெரியாது. திருமாலாகிய அழகர் தெலுங்கு மொழி தெரிந்தவர்’ என்னுங் கருத்து ‘தெலுங்கர்க்கும் தமிழர்க்கும் அழகர் பொதுவானவர்’ என விரிந்து, தமிழர்களுக்குத் தெலுங்கர்களிடம் நேச உணர்வினை வளர்க்கப் பயன்பட்டிருக்கிறது. எனவே அட்சன் தரும் செய்தி ஏற்புடையதே என்று கொள்ளலாம்.”

தொ. பரமசிவன், அழகர் கோயில்
Read more quotes from தொ. பரமசிவன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

அழகர் கோயில் அழகர் கோயில் by தொ. பரமசிவன்
73 ratings, average rating, 7 reviews

Browse By Tag