(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Devibharathi

“அப்போதுதான் படிக்கட்டுகளின் வழியே வேகமாக அடியெடுத்து வைத்து நடந்து தன்னைக் கடந்து போய்க்கொண்டிருந்த மகள் ஈஸ்வரியைப் பார்த்தார். 'ஈசு' எனப் பெருங்குரலெடுத்து அவர் அழைத்ததைக் கேட்டவள் கண்கள் விரிய அவரைப் பார்த்துச் சிரித்திருக்கிறாள், ஒரே வீச்சில் அவளை நெருங்கினார் மாமா, கைகளைப் பற்றிக்கொண்டார், 'ஈசு ஈசு கடசீல அந்த முருகன் உன்ன எம்பட கண்ணுக்குக் காட்டீட்டே, அவெ கண்கண்ட தெய்வம்ங்கறது. செரியாப் போச்சு பாத்தயா?' என அவளை வாரியணைக்க முற்பட்டார். அவள் கூச்சலிட்டாள், மிகப் பதற்றமடைந்தவளாக அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவளது கூச்சலைக் கேட்டு ஓடிவந்த பக்தர்களில் சிலர் மாமாவிடமிருந்து அவளை விடுவிக்க முயன்றிருக்கிறார்கள், யாரோ ஒரு முதியவர், "தாயோலி, கோயல்ல வந்து என்ன காரியம்டா பண்ணிக்கிட்டிருக்கறே நீ?" எனக் கேட்டுக்கொண்டே மாமாவை அடித்திருக்கிறார், பார்த்த மற்ற சிலர் ஆத்திரத்துடன் மாமாவை நெருங்கியிருக்கிறார்கள்.

நல்வாய்ப்பாக அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது, சரிந்து கீழே விழுந்து கை,கால்கள் வெட்டியிழுத்ததைப் பார்த்தவர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள், மாமா கத்தியிருக்கிறார், வாயிலிருந்து கோழை வழிந்திருக்கிறது, முற்றிலும் கைவிடப் பட்டவராக அங்கே கிடந்து துடித்துக்கொண்டிருந்த மாமாவை அவரால் ஈஸ்வரி என அழைக்கப்பட்ட பெண் பார்த்தாளாம், ஓடிப்போய் அருகிலிருந்த பெட்டிக்கடை ஒன்றிலிருந்து சாவிக்கொத்து ஒன்றை எடுத்து வந்து மாமாவின் உள்ளங்கைகளுக்குள் திணித்து அழுத்திப் பிடித்துக்கொண்டாளாம், யாரோ கொண்டு வந்து நீட்டிய தண்ணீரை முகத்தில் விசிறியடித்து, இரண்டு மடக்குக் குடிக்கக் கொடுத்தாளாம், துடிப்படங்கியதும் அவரை அதே உபய மண்டபத்தில் கால்களை நீட்டி மலர்த்திப் படுக்க வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து போய் விட்டாளாம். அப்போது நடந்தவற்றையும் தன் சாயல்கொண்ட அந்த முகத்தையும் நினைவின் கயிறு அறுந்து விழுந்திருந்த அந்தநேரத்திலும் அவரால் துல்லியமாகக் காண முடிந்திருந்ததாம்.

சாகும்வரை அது ஈஸ்வரிதான் எனச் சொல்லிக்கொண்டிருந்தார் காருமாமா.”

Devibharathi, நீர் வழிப்படூஉம்
Read more quotes from Devibharathi


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

நீர் வழிப்படூஉம் நீர் வழிப்படூஉம் by Devibharathi
123 ratings, average rating, 34 reviews

Browse By Tag