Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Devibharathi.
Showing 1-22 of 22
“சொல்லி அழுவதற்கு யாராவது இல்லாவிட்டால் செத்தும் புண்ணியமில்லை எனத் தோன்றியது அவனுக்கு.”
― நொய்யல்
― நொய்யல்
“உயிரும் உணர்வுமற்ற வெற்றுடம்பு, வாழ்க்கையென்பது இனி இந்த வெற்றுடம்புக்குத்தான். தாகமெடுக்கும்போது தண்ணீரும், பசியெடுக்கும்போது சோறும் கொடுத்து, இந்த இதைக் காப்பாற்றிக் கொண்டுபோய் மண்ணுக்குக் கொடுத்துவிட வேண்டும். காமத்தைத் தணித்துக் கொள்ள ஒரு உடல், பாரு. கொண்ட காமத்துக்குக் கூலியாய்க் குழந்தை. நிறைவேறாத கனவுகளை அதன்மேல் திணித்துவிடலாம், ஏதாவது கற்பிதத்தைப் பற்றிக்கொண்டு அதுவும் கொஞ்ச காலம் பிதற்றித் திரியும்.”
― நொய்யல்
― நொய்யல்
“நான் வெள்ளி கதாபாத்திரத்தைத் தஸ்தாயெவ்ஸ்கியின் மிஸ்கின் போல உருவாக்க விரும்பினேன். நீங்கள் இந்த நாவலைப் படிக்கும் போது அதை உணர முடியும். அதற்காக என் அன்பு தஸ்தாயெவ்ஸ்கிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.”
― நொய்யல்
― நொய்யல்
“இனி நாலு பொட்டப்புள்ளைய வெச்சுக்கிட்டு அந்த முண்டப் புள்ளெ என்ன பண்ணுவாளோ காணா.”
“பகவானிருக்கறே.”
"பகவே ஆருக்கிருக்கறே? பணம் பெருத்தவனுக்குத்தே பகவே, நம்பலாட்ட ஏழபாழைக்கு எந்தப் பகவேனிருக்கறே?”
― நொய்யல்
“பகவானிருக்கறே.”
"பகவே ஆருக்கிருக்கறே? பணம் பெருத்தவனுக்குத்தே பகவே, நம்பலாட்ட ஏழபாழைக்கு எந்தப் பகவேனிருக்கறே?”
― நொய்யல்
“என் படைப்பு முயற்சிகளுக்கு ஆதாரமாகவும் தடையாகவும் இருப்பவை என் வாழ்வனுபவங்கள்தாம் என நிச்சயமாகச் சொல்ல முடியும்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“வின்சென்ட் பெரியாரின் மேற்கோள்களடங்கிய புத்தகமொன்றின் பக்கமொன்றை விரித்து என்னிடம் காட்டிக்கொண்டிருந்தான். நான் அவன் காட்டிய பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த மேற்கோளை வாய்விட்டு அதே சமயம் மிகத் தணிந்த குரலில் படித்துக்கொண்டிருந்தேன். தடிமனான எழுத்துகளால் அடர்ந்த கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த மேற்கோள் இதுதான். "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை, கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் முட்டாள்" அந்த மேற்கோள் எனக்குப் பிடித்திருக்கிறதா எனத் தணிந்த குரலில் அவன் என்னிடம் கேட்டான். நான் தலையசைத்தேன். பிறகு அதை நாம் நம்முடைய பள்ளிக்கூடச் சுவரில் எழுதலாமா எனக் கேட்டான். நான் சரி என்றேன்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“தகப்பன்மார்களுக்கென, தாய்மார்களுக்கென, பொறந்தவன்மார்களுக்கென, மாமன்மார்களுக்கென, அப்பாரய்யன்களுக்கென, அப்பிச்சிமார்களுக்கென இழவுவீட்டில் கட்டியழுவதற்கு ஒவ்வொருவருக்கும் நான்கைந்து பாட்டுகளைக் கற்று வைத்திருப்பார்கள் நொய்யல்கரைப் பெண்கள். முறை வைத்து அழுது முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். சொல்லவும் முடியாது, “ஏ? என்ன அவுசரொ? இத்தன வருஷம் பொளச்சு, பெத்துப்பெறப்பு, பங்கும்பங்காளி, மக்கமருமக்க, ஈத்துப்பேத்துன்னு அத்தன பேருக்கு அப்பிடிப் பொளச்சவுங்கள அத்தன அவுசரமா கொண்டுபோயி ஆத்துக்கால்ல வெக்காட்டி யென்னொ?" என இழவு வீடெனப் பார்க்காமல் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.
பக்குவமாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். “நேரமாவிக்கிச்சாயா, பொழுதெறங்கப் போவுது. காடுகொண்டுபோயிச் சேத்த வேண்டாமா? சனமெல்லா பச்சத்தண்ணி பல்லுல படாமக் கெடக்குது” என யாரையாவது வெளியே கூப்பிட்டுத் தணிந்த குரலில் கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படியும் ஒரு பாட்டைச் சொல்லி மூக்கைச் சிந்திவிட்டுத்தான் வெளியே வருவார்கள். சிலரது பாட்டுச் சொக்க வைக்கும். இழவு பாட்டுத் தெரியாதவளுக்கு ஊரில் மதிப்பே இருக்காது. தாலி கழுத்தில் ஏறுமுன்பே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடுவார்கள். “நாஞ்செத்துப் போனா என்ன பாட்டுச் சொல்லி அழுவுவியாயா? எங்க ஒரு பாட்டுப் பாடிக்காட்டு பாக்கலா" என அப்பாரய்யனோ அப்பிச்சியோ கேட்கும்போது கட்டில் குத்துக்காலில் உட்கார்ந்து தயக்கமில்லாமல் பாடத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், “என்ன புள்ள பெத்து என்ன வளத்தியென்ன, ரண்டு பாட்டுச் சொல்லத் தெரீல" எனக் கேலி பேசுவார்கள்.”
― நொய்யல்
பக்குவமாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். “நேரமாவிக்கிச்சாயா, பொழுதெறங்கப் போவுது. காடுகொண்டுபோயிச் சேத்த வேண்டாமா? சனமெல்லா பச்சத்தண்ணி பல்லுல படாமக் கெடக்குது” என யாரையாவது வெளியே கூப்பிட்டுத் தணிந்த குரலில் கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படியும் ஒரு பாட்டைச் சொல்லி மூக்கைச் சிந்திவிட்டுத்தான் வெளியே வருவார்கள். சிலரது பாட்டுச் சொக்க வைக்கும். இழவு பாட்டுத் தெரியாதவளுக்கு ஊரில் மதிப்பே இருக்காது. தாலி கழுத்தில் ஏறுமுன்பே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடுவார்கள். “நாஞ்செத்துப் போனா என்ன பாட்டுச் சொல்லி அழுவுவியாயா? எங்க ஒரு பாட்டுப் பாடிக்காட்டு பாக்கலா" என அப்பாரய்யனோ அப்பிச்சியோ கேட்கும்போது கட்டில் குத்துக்காலில் உட்கார்ந்து தயக்கமில்லாமல் பாடத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், “என்ன புள்ள பெத்து என்ன வளத்தியென்ன, ரண்டு பாட்டுச் சொல்லத் தெரீல" எனக் கேலி பேசுவார்கள்.”
― நொய்யல்
“சில மாதங்களுக்கு முன்புதான் சவுந்திரா பெரியம்மா வயிற்றிலிருந்த பூசணிக்காய் அளவுள்ளகட்டியை அகற்றிக்கொண்டு வந்து புண்ஆறாத நிலையில் முடங்கிக் கிடந்தாள். அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கக் கூடும் என அவளுக்குச் சிகிச்சையளித்த அம்பளிக்கை மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியிருந்ததால் சாவை எதிர்நோக்கிக்காத்திருப்பவளாகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டிருந்தாள். முத்தையன்வலசுப் பெரியப்பாவும் பதின் வயதுகளிலிருந்த அவளது இரண்டு மகன்களும் அவர்களது பண்ணையக்காரர்களும் எங்கள் பெரியம்மாவும் காருமாமாவும் ராசம்மா அத்தையும் மற்ற உறவினர்களும் உடையாம்பாளையத்துவாசிகளும் அவ்வாறே கற்பனை செய்து கொண்டிருந்தனர். அம்பளிக்கை மருத்துவர்கள் அவளது வயிற்றைக் கிழித்த அந்தக் கணத்திலேயே சிதறிப்போனார் முத்தையன்வலசுப் பெரியப்பா. மருத்துவமனை வளாகத்தில் அங்கிருந்த செங்கொன்றை மரங்களின் மருந்துக்கழிவுகள் இறைந்துகிடந்த நிழல்களில் சித்தப்பிரமை கொண்டவரைப் போல் நடமாடிக் கொண்டிருந்தார் முத்தையன்வலசுப் பெரியப்பா. ஏறத்தாழ ஒருமாதம்வரை மருத்துவமனைப் படுக்கையிலிருந்த சவுந்திரம் பெரியம்மாவை எங்கள் பெரியம்மாவும் ராசம்மா அத்தையும் சுந்தராடிவலசுப் பெரியம்மாவும்தான் அவ்வப்போது வந்து ஒருவர்மாற்றி ஒருவராகத் துணையிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். காயம் கொஞ்சம் ஆறியபிறகு அம்பிளிகையிலிருந்து தாராபுரத்துக்கும் தாராபுரத்திலிருந்து மூலனூருக்கும் பேருந்துகளின் வழியாக அழைத்து வந்ததும் அங்கிருந்து தன் பண்ணையக்காரரொருவரின் இரட்டை மாட்டு வண்டியில் ராசம்மா அத்தையின் துணையுடன் அவளை உடையாம்பாளையம் அழைத்து வந்திருந்தார் காருமாமா.
அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே வயிற்று வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சவுந்திரம் பெரியம்மா அதைப் பொருட்படுத்தாமல் குடிவேலைகளை மேற்கொண்டு வந்தாள். நான்கைந்து மாதங்களில் வயிறு திரண்டு பெரிதாகத் தொடங்கியதும் அவள் தான் மூன்றாவதாக ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதாக நினைத்தாள். அதுபற்றிச் சொன்னதும் முத்தையன்வலசுப் பெரியப்பா சந்தோஷத்தில் மூழ்கினார். உற்றார் உறவினர்களை அழைத்து விருந்து விஷேசம் எனக் கொண்டாட்டங்களில் திளைத்தார். வயிறு இயல்பைவிடப் பெரிதாகத் தென்பட்டதைப் பார்த்த எங்கள் பெரியம்மா அவளைப் பரிசோதித்து அவள் கருவுற்றிருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லையெனச் சொன்ன பிறகு பெரியப்பா கொண்டாட்டங்களைக் கைவிட்டார்.”
― நீர் வழிப்படூஉம்
அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே வயிற்று வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சவுந்திரம் பெரியம்மா அதைப் பொருட்படுத்தாமல் குடிவேலைகளை மேற்கொண்டு வந்தாள். நான்கைந்து மாதங்களில் வயிறு திரண்டு பெரிதாகத் தொடங்கியதும் அவள் தான் மூன்றாவதாக ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதாக நினைத்தாள். அதுபற்றிச் சொன்னதும் முத்தையன்வலசுப் பெரியப்பா சந்தோஷத்தில் மூழ்கினார். உற்றார் உறவினர்களை அழைத்து விருந்து விஷேசம் எனக் கொண்டாட்டங்களில் திளைத்தார். வயிறு இயல்பைவிடப் பெரிதாகத் தென்பட்டதைப் பார்த்த எங்கள் பெரியம்மா அவளைப் பரிசோதித்து அவள் கருவுற்றிருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லையெனச் சொன்ன பிறகு பெரியப்பா கொண்டாட்டங்களைக் கைவிட்டார்.”
― நீர் வழிப்படூஉம்
“அவள் என் தொடைமீது உட்கார்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவளுடைய உதடுகளிலிருந்து வீசிய கொத்தமல்லி வாடையைச் சுவாசிக்கப் பிடிக்காமல் தலையைச் சாய்த்து அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“மாமாவை வதைத்துக்கொண்டிருந்த காக்காய் வலிப்பு நோய் அப்போது அடிக்கடி வரத்தொடங்கியிருந்தது. அநேகமாக வாரத்திற்கொருமுறை. பெரியம்மா தந்துவிட்டுப் போயிருந்த இரும்பாலான தொரப்புக்குச்சியொன்றை எப்போதும் தன் தலைமாட்டில் வைத்துக்கொண்டிருந்தார் மாமா, எனினும் வலிப்பு வரும்போது அவரால் அதைத் தேடியெடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதுபோன்ற தருணங்களில் நினைவின் இழைகள் முற்றாக அறுந்துபோய்விடுகின்றன. கை, கால்கள் வெட்டியிழுப்பதையோ, வாயிலிருந்து கோழை வடிவதையோ வீறிட்டுக் கத்துவதையோ பார்ப்பதற்கு அநேகமாக யாரும் இருப்பதில்லை.
பேச்சுவார்த்தையற்றவராக எதிரே இருந்த முத்தையன்வலசுப் பெரியப்பா அப்போது வீட்டிலிருந்தால் அந்தச் சத்தத்தைக் கேட்டு வந்து விடுவார், அந்தச் சாவிக்கொத்தைத் தேடியெடுத்து உள்ளங்கையில் திணித்து மடக்கிப் பிடித்துக்கொள்வார், சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிப்பார், குடிக்கவும் தருவார். சிதறி வழிந்திருந்த கோழையைத் துடைத்து கால்களை நீட்டி மல்லார்ந்து படுக்க வைத்துத் தலையணையொன்றை முட்டுக்கொடுத்து பற்றியிருந்த அந்தத் தொரப்புக்குச்சியை விடுவித்துப் பழையபடி அவரது தலைமாட்டில் பத்திரப்படுத்திவிட்டுப் போய் விடுவார். வெகுநாட்கள் வரை மாமா அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. வலிப்பின் தாக்கம் நீங்கி நினைவு மீளும்போது தனக்கு வலிப்பு வந்ததை நினைவுகூர முற்படுவார் மாமா, உள்ளங்கையை விரித்து சாவிக்கொத்து இருக்கிறதா எனத் தேடுவார், அது வைத்தது வைத்த இடத்தில் அப்படியே கிடக்கும், கன்னங்களில் கோழையின் ஈரம் தென்படாது, மாமா குழம்பிப்போவார், உண்மையிலேயே வலிப்பு வந்ததா இல்லை அப்படிக் கற்பனை செய்துகொண்டோமா என யோசிக்க முற்படுவார்.”
― நீர் வழிப்படூஉம்
பேச்சுவார்த்தையற்றவராக எதிரே இருந்த முத்தையன்வலசுப் பெரியப்பா அப்போது வீட்டிலிருந்தால் அந்தச் சத்தத்தைக் கேட்டு வந்து விடுவார், அந்தச் சாவிக்கொத்தைத் தேடியெடுத்து உள்ளங்கையில் திணித்து மடக்கிப் பிடித்துக்கொள்வார், சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிப்பார், குடிக்கவும் தருவார். சிதறி வழிந்திருந்த கோழையைத் துடைத்து கால்களை நீட்டி மல்லார்ந்து படுக்க வைத்துத் தலையணையொன்றை முட்டுக்கொடுத்து பற்றியிருந்த அந்தத் தொரப்புக்குச்சியை விடுவித்துப் பழையபடி அவரது தலைமாட்டில் பத்திரப்படுத்திவிட்டுப் போய் விடுவார். வெகுநாட்கள் வரை மாமா அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. வலிப்பின் தாக்கம் நீங்கி நினைவு மீளும்போது தனக்கு வலிப்பு வந்ததை நினைவுகூர முற்படுவார் மாமா, உள்ளங்கையை விரித்து சாவிக்கொத்து இருக்கிறதா எனத் தேடுவார், அது வைத்தது வைத்த இடத்தில் அப்படியே கிடக்கும், கன்னங்களில் கோழையின் ஈரம் தென்படாது, மாமா குழம்பிப்போவார், உண்மையிலேயே வலிப்பு வந்ததா இல்லை அப்படிக் கற்பனை செய்துகொண்டோமா என யோசிக்க முற்படுவார்.”
― நீர் வழிப்படூஉம்
“ஓரளவு சுயநினைவை எட்டத் தொடங்கியிருந்த கருணாகரன் அனிமேஷன் படத்தில் வரும் ஒரு பாத்திரம்போல மிக மெதுவாகக் கண்களைத் திறந்து தனக்கெதிரில் ஒரு கேலிச்சித்திரம்போல் அசைந்துகொண்டிருந்த என்னை அடையாளம் தெரிந்துகொண்டான். "கிளார்க் சார் நீங்களா?" எனத் தன் நடுங்கும் கரங்களை மிகச் சிரமப்பட்டு உயர்த்திக் குவிக்க முயன்றவன். "ஆயுசுக்கும் நீங்க நல்லாருப்பீங்க சார்" என ஆசிர்வதித்தான். தளும்பி வழியத் தொடங்கியிருந்த அவனது கண்களை ஒரு கைத்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். "இத்தன நாளா வீட்டுப் பக்கமே வராம இருந்துட்டீங்களே..." என்றவன், "ஆராச்சு எதாச்சு சொன்னாங்களா?" என மிகப் பலவீனமான குரலில் கேட்டான்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“கிளார்க் சார், எதாவது சாப்பிடக் கெடைக்குமா? பசிக்குது”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“நாரையின் கூடுகளைப்போலத் தன் துக்கங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் அமைத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டிருந்தாள் அவள்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“சாவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. செத்துப்போய்விட்டால் அழுவதற்காவது யாராவது இருக்கிறார்களா என யோசிக்க முயன்றான்.”
― நொய்யல்
― நொய்யல்
“நீங்க நல்லாருக்கணும் சார். சார். சாரென்ன சார், நீங்க எனக்குப் பிள்ளையாட்ட. பெத்த பிள்ளைக்கு மேல”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“சில தருணங்களில் தாளமுடியாத குற்ற உணர்வுக்கும் சுய அருவருப்புக்கும் உள்ளாகிவிடுவேன். எந்தக் கருணாகரனை நான் தீமையின் உருவகமாக நினைத்திருந்தேனோ யாரைப் பழிதீர்ப்பதற்காக முப்பது வருடங்களாக ஒரு கெட்ட ஆவியைப் போல அலைந்து திரிந்தேனோ அந்தக் கருணாகரனைப்போல் ஆகிவிட்டதாக, பார்க்கப்போனால் தார்மீகரீதியில் அவனை விட மோசமாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக நினைப்பேன்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“முதிர்ச்சி கூடிக்கொண்டிருந்த அம்மனிதன் பழி வாங்கப்படுவதற்குத் தகுதியற்றவனாக மாறிக்கொண்டிருக்கிறானோ என்றுகூட நினைத்தேன்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சத்தத்துக்குப் பயந்து புளிய மரத்திற்குக் கீழே கயிற்றுக்கட்டிலைப் போட்டுப் படுத்துக்கொண்டேன்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“அப்போதுதான் படிக்கட்டுகளின் வழியே வேகமாக அடியெடுத்து வைத்து நடந்து தன்னைக் கடந்து போய்க்கொண்டிருந்த மகள் ஈஸ்வரியைப் பார்த்தார். 'ஈசு' எனப் பெருங்குரலெடுத்து அவர் அழைத்ததைக் கேட்டவள் கண்கள் விரிய அவரைப் பார்த்துச் சிரித்திருக்கிறாள், ஒரே வீச்சில் அவளை நெருங்கினார் மாமா, கைகளைப் பற்றிக்கொண்டார், 'ஈசு ஈசு கடசீல அந்த முருகன் உன்ன எம்பட கண்ணுக்குக் காட்டீட்டே, அவெ கண்கண்ட தெய்வம்ங்கறது. செரியாப் போச்சு பாத்தயா?' என அவளை வாரியணைக்க முற்பட்டார். அவள் கூச்சலிட்டாள், மிகப் பதற்றமடைந்தவளாக அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவளது கூச்சலைக் கேட்டு ஓடிவந்த பக்தர்களில் சிலர் மாமாவிடமிருந்து அவளை விடுவிக்க முயன்றிருக்கிறார்கள், யாரோ ஒரு முதியவர், "தாயோலி, கோயல்ல வந்து என்ன காரியம்டா பண்ணிக்கிட்டிருக்கறே நீ?" எனக் கேட்டுக்கொண்டே மாமாவை அடித்திருக்கிறார், பார்த்த மற்ற சிலர் ஆத்திரத்துடன் மாமாவை நெருங்கியிருக்கிறார்கள்.
நல்வாய்ப்பாக அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது, சரிந்து கீழே விழுந்து கை,கால்கள் வெட்டியிழுத்ததைப் பார்த்தவர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள், மாமா கத்தியிருக்கிறார், வாயிலிருந்து கோழை வழிந்திருக்கிறது, முற்றிலும் கைவிடப் பட்டவராக அங்கே கிடந்து துடித்துக்கொண்டிருந்த மாமாவை அவரால் ஈஸ்வரி என அழைக்கப்பட்ட பெண் பார்த்தாளாம், ஓடிப்போய் அருகிலிருந்த பெட்டிக்கடை ஒன்றிலிருந்து சாவிக்கொத்து ஒன்றை எடுத்து வந்து மாமாவின் உள்ளங்கைகளுக்குள் திணித்து அழுத்திப் பிடித்துக்கொண்டாளாம், யாரோ கொண்டு வந்து நீட்டிய தண்ணீரை முகத்தில் விசிறியடித்து, இரண்டு மடக்குக் குடிக்கக் கொடுத்தாளாம், துடிப்படங்கியதும் அவரை அதே உபய மண்டபத்தில் கால்களை நீட்டி மலர்த்திப் படுக்க வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து போய் விட்டாளாம். அப்போது நடந்தவற்றையும் தன் சாயல்கொண்ட அந்த முகத்தையும் நினைவின் கயிறு அறுந்து விழுந்திருந்த அந்தநேரத்திலும் அவரால் துல்லியமாகக் காண முடிந்திருந்ததாம்.
சாகும்வரை அது ஈஸ்வரிதான் எனச் சொல்லிக்கொண்டிருந்தார் காருமாமா.”
― நீர் வழிப்படூஉம்
நல்வாய்ப்பாக அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது, சரிந்து கீழே விழுந்து கை,கால்கள் வெட்டியிழுத்ததைப் பார்த்தவர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள், மாமா கத்தியிருக்கிறார், வாயிலிருந்து கோழை வழிந்திருக்கிறது, முற்றிலும் கைவிடப் பட்டவராக அங்கே கிடந்து துடித்துக்கொண்டிருந்த மாமாவை அவரால் ஈஸ்வரி என அழைக்கப்பட்ட பெண் பார்த்தாளாம், ஓடிப்போய் அருகிலிருந்த பெட்டிக்கடை ஒன்றிலிருந்து சாவிக்கொத்து ஒன்றை எடுத்து வந்து மாமாவின் உள்ளங்கைகளுக்குள் திணித்து அழுத்திப் பிடித்துக்கொண்டாளாம், யாரோ கொண்டு வந்து நீட்டிய தண்ணீரை முகத்தில் விசிறியடித்து, இரண்டு மடக்குக் குடிக்கக் கொடுத்தாளாம், துடிப்படங்கியதும் அவரை அதே உபய மண்டபத்தில் கால்களை நீட்டி மலர்த்திப் படுக்க வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து போய் விட்டாளாம். அப்போது நடந்தவற்றையும் தன் சாயல்கொண்ட அந்த முகத்தையும் நினைவின் கயிறு அறுந்து விழுந்திருந்த அந்தநேரத்திலும் அவரால் துல்லியமாகக் காண முடிந்திருந்ததாம்.
சாகும்வரை அது ஈஸ்வரிதான் எனச் சொல்லிக்கொண்டிருந்தார் காருமாமா.”
― நீர் வழிப்படூஉம்
“என்னை ஆசீர்வதிப்பதற்காக நீண்ட அவனது கருணையின் கொடுங் கரங்கள் என்னை நிம்மதியற்றவனாக மாற்றிக்கொண்டிருந்தன.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை
“எதையோ கேட்கத் தயங்குபவனின் பாவனையோடு அவன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அருகில் வந்தவன் மிக மிகத் தணிந்த குரலில் கேட்டான்.
"உங்க பேர் கருணாகரனா?”
― நிழலின் தனிமை
"உங்க பேர் கருணாகரனா?”
― நிழலின் தனிமை
“இது என் முதல் நாவலாக அமைந்தது தற்செயலான நிகழ்வு. பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்திருந்த 'நொய்யல்'தான் என் முதல் நாவலாக இருக்க வேண்டுமென விரும்பியிருந்தேன். நான்கு பாகங்களையுடைய அந்நாவலின் இரண்டு பாகங்களை முழுமையாகச் செப்பனிட்டு முடித்திருந்த நிலையில் ஏதோவொரு மனத்தடை காரணமாகக் கிடப்பில் போட்டுவிட்டேன்.”
― நிழலின் தனிமை
― நிழலின் தனிமை




