(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Devibharathi

“மாமாவை வதைத்துக்கொண்டிருந்த காக்காய் வலிப்பு நோய் அப்போது அடிக்கடி வரத்தொடங்கியிருந்தது. அநேகமாக வாரத்திற்கொருமுறை. பெரியம்மா தந்துவிட்டுப் போயிருந்த இரும்பாலான தொரப்புக்குச்சியொன்றை எப்போதும் தன் தலைமாட்டில் வைத்துக்கொண்டிருந்தார் மாமா, எனினும் வலிப்பு வரும்போது அவரால் அதைத் தேடியெடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதுபோன்ற தருணங்களில் நினைவின் இழைகள் முற்றாக அறுந்துபோய்விடுகின்றன. கை, கால்கள் வெட்டியிழுப்பதையோ, வாயிலிருந்து கோழை வடிவதையோ வீறிட்டுக் கத்துவதையோ பார்ப்பதற்கு அநேகமாக யாரும் இருப்பதில்லை.

பேச்சுவார்த்தையற்றவராக எதிரே இருந்த முத்தையன்வலசுப் பெரியப்பா அப்போது வீட்டிலிருந்தால் அந்தச் சத்தத்தைக் கேட்டு வந்து விடுவார், அந்தச் சாவிக்கொத்தைத் தேடியெடுத்து உள்ளங்கையில் திணித்து மடக்கிப் பிடித்துக்கொள்வார், சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிப்பார், குடிக்கவும் தருவார். சிதறி வழிந்திருந்த கோழையைத் துடைத்து கால்களை நீட்டி மல்லார்ந்து படுக்க வைத்துத் தலையணையொன்றை முட்டுக்கொடுத்து பற்றியிருந்த அந்தத் தொரப்புக்குச்சியை விடுவித்துப் பழையபடி அவரது தலைமாட்டில் பத்திரப்படுத்திவிட்டுப் போய் விடுவார். வெகுநாட்கள் வரை மாமா அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. வலிப்பின் தாக்கம் நீங்கி நினைவு மீளும்போது தனக்கு வலிப்பு வந்ததை நினைவுகூர முற்படுவார் மாமா, உள்ளங்கையை விரித்து சாவிக்கொத்து இருக்கிறதா எனத் தேடுவார், அது வைத்தது வைத்த இடத்தில் அப்படியே கிடக்கும், கன்னங்களில் கோழையின் ஈரம் தென்படாது, மாமா குழம்பிப்போவார், உண்மையிலேயே வலிப்பு வந்ததா இல்லை அப்படிக் கற்பனை செய்துகொண்டோமா என யோசிக்க முற்படுவார்.”

Devibharathi, நீர் வழிப்படூஉம்
Read more quotes from Devibharathi


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

நீர் வழிப்படூஉம் நீர் வழிப்படூஉம் by Devibharathi
123 ratings, average rating, 34 reviews

Browse By Tag