Sarala > Sarala's Quotes

Showing 1-13 of 13
sort by

  • #1
    Jeyamohan
    “உணர்வுகளை வெளிப்படுத்துதல், சூழல்களை காட்சியாகச் சித்தரித்தல், மானுடநடவடிக்கைகளின் நுண்மைகளை கூறுதல், உரையாடல்களை இயல்பான ஒழுக்குடனும் நுட்பத்துடனும் அமைத்தல் ஆகியவையே நடையின் சவால்கள். அவை தன்னைத்தானே நோக்கி மீளமீள முயல்வதனூடாகவே அமையும்.”
    ஜெயமோகன் [Jeyamohan]

  • #2
    “நாவல் வடிவத்தின் அப்பழுக்கற்ற உதாரணம் ஒன்றைத் தனது மொழியில் சாத்தியப்படுத்துவது என்பது ஒருபோதும் கலைஞனின் உத்தேசமாக இருக்க இயலாது. அதன் பூரண விளைவைத் தன் சூழலில் உண்டு பண்ணுவது மட்டுமே அவனுடைய இலக்கு. சூழலில் விசேஷ இயல்புகள், அவனுடைய வடிவ கற்பனையை மாற்றி அமைக்கின்றன. கையில் இருக்கும் வடிவத்துக்கும், வெளிப்பாட்டின் தேவைக்குமான இடைவெளி, ஒரு நாவலாசிரியனை எப்போதும் படுத்தியபடியே தான் இருக்கும். அத்துடன் மரபான வடிவ உருவத்துடன் தன் ஆளுமையின் தனித்தன்மை மோதும் கட்டங்களையும் அவன் அடைவான். இப்போராட்டத்தில் இருந்து தான் வடிவ மீறல்கள் நிகழ்கின்றன.”
    ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

  • #3
    “கவிதை எப்போதும் பிரிவின் ஜாடையைத்தான் கொண்டிருக்கிறது.ஞாபகத்தின் குடுவையைத் திறந்ததும் கவிதையின் விசித்திர வாசனை கசிகிறது. கவிதை சொற்களின் வழியே சொற்களால் அடைய முடியாத ஆழத்தை, நுண்மையை, உவப்பை கைப்பற்ற எத்தனிக்கின்றன."

    "காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
    எஸ்.ராமகிருஷ்ணன்,நம் காலத்து நாவல்கள்

  • #4
    “ஒரு எழுத்தாளன் மீது வைக்கப்படும் விமர்சனம் அவனை ஒன்றும் செய்துவிடாது.நல்ல படைப்பு அவனை என்றும் வாழ வைத்திருக்கும்.”
    எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

  • #5
    “நாவலின் புதிய சாத்தியங்கள் பற்றிய ஆர்வத்தை கலாச்சாரத்தின் பின் இழுப்பு சமன் செய்தபடியே இருக்க வேண்டும். இல்லாத போது தான், முற்றிலும் அன்னியமான குறைபிறவியாக இலக்கிய வடிவங்கள் உருவாகின்றன. தன்னுடைய அனுபவ உலகுக்கும், வெளிப்பாட்டு முறைக்கும் தேவையான வடிவத்தை மட்டுமே படைப்பாளி தேர்வு செய்ய வேண்டும். அதைத் தனக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். அத்துடன் அவன் உத்தேசிக்கும் வாசகர்களின் இயல்பும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். படைப்பு செயல்பாடு என்பது ஓர் உரையாடல். அதை எதிர்முனையிலிருந்து தீர்மானிப்பவன் அதன் உத்தேச வாசகன். இவ்விரு தடைகளுக்கும் படைப்பாளியின் தேடலுக்கும் இடையேயான சமரசப் புள்ளிகளாகவே ‘ புதிய வடிவங்கள் ‘ இருக்க வேண்டும்."

    "நிச்சயமாக எந்த இலக்கிய வடிவத்தை விடவும் வாழ்க்கை மிகவும் பிரமாண்டமானது. முழு வீச்சுடன் அதை எதிர்கொள்ளும் படைப்பாளி, வரையறைகளை சகஜமாக மீறிச் செல்வான். சென்றாக வேண்டும். ஆனால், சாத்தியங்கள் பற்றிய அறியாமை நம்மை முன்னதாகவே நின்று விடச் செய்யலாகாது. நாம் வந்த தூரமே அதிகம் என்ற சுயதிருப்தி இருக்கக் கூடாது.”
    ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

  • #6
    “நகைகளின் ஒவ்வொரு புடைப்பும் வளைவும் ஓர் அழகுணர்ச்சியின் பரு வடிவம். மலைச்சிகரங்களின் வளைவும் புடைப்பும் ஆயிரமாயிரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் பிரபஞ்ச சக்திகள் உருவாக்கியவை. நாவல் என்பது மலை. நகையின் நுட்பமல்ல, மலையின் மாண்பே அதற்கு உரியது.”
    ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

  • #7
    “வன்முறையை ரசிக்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இவர்களை வைத்துக்கொண்டு அடிப்படை மனித அறங்களையும் நேசத்தையும் எப்படி கைக்கொள்வது என்று தஸ்தாயெவ்ஸ்கி ஆதங்கப்படுவது இன்றும் உண்மையாகவே இருக்கிறது."

    "மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.அதை உணரும் தருணங்களில் கூட பெருமிதமே கொள்கிறான். குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.”
    எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

  • #8
    “எளிமையை ஒரு வாழ்வியல் நெறியாகக் கொண்ட மனசு, ‘எதுவுமே வேண்டாம்’ என்ற நிலைக்கு எளிதில் நகர்கிறது.”
    Bharathi Baskar, Siragai Viri, Para

  • #9
    “புதுசுபுதுசுண்ணு தேடிப் போற எல்லாமே பழசாத்தான் போகப்போகுது. இந்த இடத்திலேயே பழசாப் போகத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. மனுஷன் ஒரு தடவைதான் இந்த உலகத்துக்குப் புதுசா வாரான். வந்த பிறகு அவன் பழசுதான். சாகிறவரைக்கும் பழசுதான்.”
    வண்ணதாசன், கலைக்க முடியாத ஒப்பனைகள்

  • #10
    “வெயிலுக்கு ஒரு கெட்டிக்காரத்தனம். மழைக்கு ஒரு கெட்டிக்காரத்தனம். நல்லது தான். இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக இத்தனை வருஷமாக நிற்கிற மரத்தை இடம் பெயர்த்து விட முடியுமா? சில மரத்துக்குப் பூ. சில மரத்துக்குக் காய். சில மரத்துக்குக் கனி. ஆனால் எல்லா மரத்துக்கும் நிழல்.”
    வண்ணதாசன், ஒளியிலே தெரிவது

  • #11
    “கவிதை என்பது நீர்நிலையை நாடி வரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதைப் போன்றது. எந்தப் பறவை எப்போது சிறகடித்து மேலே போகும், எது தரைஇறங்கும் என்று தெரியாது. எவ்வழியே இப்பறவைகள் வந்தன. எதையெல்லாம் தாண்டி வந்திருக்கின்றன என்று புரியாது. எல்லாப் பறவைகளும் ஒரே வானில் பறக்கின்றன என்றாலும் எந்த இரண்டும் ஒன்று போலிருப்பதில்லை. பறவைகள் வானில் பறக்கையில் அதன் நிழல் நீரில் மிதந்து செல்கிறது என்பது போல அறிந்த, அறியாத விந்தைகள் கொண்டவை கவிதை.”
    எஸ்.ராமகிருஷ்ணன் , கூழாங்கற்கள் பாடுகின்றன

  • #12
    “நல்ல எழுத்துங்கிறது படிக்கிறவனை IMPRESS பண்றதுக்காக எழுதப்பட்டது இல்லே,தன்னை EXPRESS பண்றதுக்காக ஒருத்தன் எழுதுறது.”
    யுவன் சந்திரசேகர்.பயணக் கதை

  • #13
    Shivaji Sawant
    “பொறாமை என்பது இரண்டு கூரிய முனைகளைக் கொண்ட ஒரு வாளைப் போன்றது. பொறாமை கொள்ளுகின்றவருக்கும் அது ஆபத்தானது, யார்மீது பொறாமை கொள்ளப்படுகிறதோ அவருக்கும் அது ஆபத்தானது.”
    Shivaji Sawant, கர்ணன்: காலத்தை வென்றவன்



Rss
All Quotes



Tags From Sarala’s Quotes