(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“நாவலின் புதிய சாத்தியங்கள் பற்றிய ஆர்வத்தை கலாச்சாரத்தின் பின் இழுப்பு சமன் செய்தபடியே இருக்க வேண்டும். இல்லாத போது தான், முற்றிலும் அன்னியமான குறைபிறவியாக இலக்கிய வடிவங்கள் உருவாகின்றன. தன்னுடைய அனுபவ உலகுக்கும், வெளிப்பாட்டு முறைக்கும் தேவையான வடிவத்தை மட்டுமே படைப்பாளி தேர்வு செய்ய வேண்டும். அதைத் தனக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். அத்துடன் அவன் உத்தேசிக்கும் வாசகர்களின் இயல்பும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். படைப்பு செயல்பாடு என்பது ஓர் உரையாடல். அதை எதிர்முனையிலிருந்து தீர்மானிப்பவன் அதன் உத்தேச வாசகன். இவ்விரு தடைகளுக்கும் படைப்பாளியின் தேடலுக்கும் இடையேயான சமரசப் புள்ளிகளாகவே ‘ புதிய வடிவங்கள் ‘ இருக்க வேண்டும்."

"நிச்சயமாக எந்த இலக்கிய வடிவத்தை விடவும் வாழ்க்கை மிகவும் பிரமாண்டமானது. முழு வீச்சுடன் அதை எதிர்கொள்ளும் படைப்பாளி, வரையறைகளை சகஜமாக மீறிச் செல்வான். சென்றாக வேண்டும். ஆனால், சாத்தியங்கள் பற்றிய அறியாமை நம்மை முன்னதாகவே நின்று விடச் செய்யலாகாது. நாம் வந்த தூரமே அதிகம் என்ற சுயதிருப்தி இருக்கக் கூடாது.”

ஜெயமோகன்,நாவல் கோட்பாடு
tags: literature
Read more quotes from ஜெயமோகன்,நாவல் கோட்பாடு


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!



Browse By Tag