Sarala

Add friend
Sign in to Goodreads to learn more about Sarala.


சின்ன விஷயங்களின்...
Rate this book
Clear rating

 
Pudhiya Dharsanangal
Rate this book
Clear rating

 
Loading...
“ஒரு எழுத்தாளன் மீது வைக்கப்படும் விமர்சனம் அவனை ஒன்றும் செய்துவிடாது.நல்ல படைப்பு அவனை என்றும் வாழ வைத்திருக்கும்.”
எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

Jeyamohan
“உணர்வுகளை வெளிப்படுத்துதல், சூழல்களை காட்சியாகச் சித்தரித்தல், மானுடநடவடிக்கைகளின் நுண்மைகளை கூறுதல், உரையாடல்களை இயல்பான ஒழுக்குடனும் நுட்பத்துடனும் அமைத்தல் ஆகியவையே நடையின் சவால்கள். அவை தன்னைத்தானே நோக்கி மீளமீள முயல்வதனூடாகவே அமையும்.”
ஜெயமோகன் [Jeyamohan]

“நாவலின் புதிய சாத்தியங்கள் பற்றிய ஆர்வத்தை கலாச்சாரத்தின் பின் இழுப்பு சமன் செய்தபடியே இருக்க வேண்டும். இல்லாத போது தான், முற்றிலும் அன்னியமான குறைபிறவியாக இலக்கிய வடிவங்கள் உருவாகின்றன. தன்னுடைய அனுபவ உலகுக்கும், வெளிப்பாட்டு முறைக்கும் தேவையான வடிவத்தை மட்டுமே படைப்பாளி தேர்வு செய்ய வேண்டும். அதைத் தனக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். அத்துடன் அவன் உத்தேசிக்கும் வாசகர்களின் இயல்பும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். படைப்பு செயல்பாடு என்பது ஓர் உரையாடல். அதை எதிர்முனையிலிருந்து தீர்மானிப்பவன் அதன் உத்தேச வாசகன். இவ்விரு தடைகளுக்கும் படைப்பாளியின் தேடலுக்கும் இடையேயான சமரசப் புள்ளிகளாகவே ‘ புதிய வடிவங்கள் ‘ இருக்க வேண்டும்."

"நிச்சயமாக எந்த இலக்கிய வடிவத்தை விடவும் வாழ்க்கை மிகவும் பிரமாண்டமானது. முழு வீச்சுடன் அதை எதிர்கொள்ளும் படைப்பாளி, வரையறைகளை சகஜமாக மீறிச் செல்வான். சென்றாக வேண்டும். ஆனால், சாத்தியங்கள் பற்றிய அறியாமை நம்மை முன்னதாகவே நின்று விடச் செய்யலாகாது. நாம் வந்த தூரமே அதிகம் என்ற சுயதிருப்தி இருக்கக் கூடாது.”
ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

“வன்முறையை ரசிக்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இவர்களை வைத்துக்கொண்டு அடிப்படை மனித அறங்களையும் நேசத்தையும் எப்படி கைக்கொள்வது என்று தஸ்தாயெவ்ஸ்கி ஆதங்கப்படுவது இன்றும் உண்மையாகவே இருக்கிறது."

"மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.அதை உணரும் தருணங்களில் கூட பெருமிதமே கொள்கிறான். குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.”
எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

“நாவல் வடிவத்தின் அப்பழுக்கற்ற உதாரணம் ஒன்றைத் தனது மொழியில் சாத்தியப்படுத்துவது என்பது ஒருபோதும் கலைஞனின் உத்தேசமாக இருக்க இயலாது. அதன் பூரண விளைவைத் தன் சூழலில் உண்டு பண்ணுவது மட்டுமே அவனுடைய இலக்கு. சூழலில் விசேஷ இயல்புகள், அவனுடைய வடிவ கற்பனையை மாற்றி அமைக்கின்றன. கையில் இருக்கும் வடிவத்துக்கும், வெளிப்பாட்டின் தேவைக்குமான இடைவெளி, ஒரு நாவலாசிரியனை எப்போதும் படுத்தியபடியே தான் இருக்கும். அத்துடன் மரபான வடிவ உருவத்துடன் தன் ஆளுமையின் தனித்தன்மை மோதும் கட்டங்களையும் அவன் அடைவான். இப்போராட்டத்தில் இருந்து தான் வடிவ மீறல்கள் நிகழ்கின்றன.”
ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

year in books
Anitha
636 books | 3 friends

SPG
SPG
274 books | 53 friends

Joseph ...
37 books | 3,383 friends

Marudha...
150 books | 106 friends

Md Sheik
5,887 books | 51 friends

Agitha ...
2 books | 59 friends

Manikan...
5 books | 141 friends

Chandra...
0 books | 270 friends

More friends…



Polls voted on by Sarala

Lists liked by Sarala