Jeyamohan > Quotes > Quote > Chitra liked it
“எண்பதுகளில் உண்மையிலேயே பட்டினி இருந்தது, நானே கண்டிருக்கிறேன். அது தமிழகத்திலும் இருந்தது. இந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் வந்த மாற்றம் என்னவென்றால் உடலுழைப்புக்கான சந்தை மிகமிக விரிவடைந்திருப்பதுதான். எங்கும் உடலுழைப்புக்கான ஆட்களுக்கான தேவை இருப்பதைக் காணலாம். கூலி பலமடங்கு ஏறியிருக்கிறது. மறுபக்கம் தானியத்தின் விலை மிகவும் குறைவாக ஆகியிருக்கிறது. வட இந்தியாவில் கோதுமை மிக மலிவான ஒரு பொருள் இன்று. ஆகவே பட்டினி இல்லை. இன்று பீகாரில்கூட எந்த ஒரு கிராமவாசியிடம் பேசினாலும் நம்மை அவர் சாப்பிட அழைப்பார். இன்றைய வறுமை என்பது வேறு. அடிப்படைத் தங்குமிடம், மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கான தேவைதான் இன்றுள்ளது. அது இல்லாததன் வறுமைதான் இன்று உள்ளது.”
― குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
― குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
No comments have been added yet.
