Mohammed Ibrahimali’s Reviews > புறப்பாடு > Status Update
Mohammed Ibrahimali
is on page 260 of 456
நேற்று வாசித்த நீர்கங்கை, மதுரம், சண்டாளிகை ஆகிய மூன்று கட்டுரைகளும் அருமையிலும் அருமையாக இருந்தது வெவ்வேறு வகையான வாழ்வியலை இந்த மூன்று கட்டுரையில் காணலாம். நாம் நினைக்கும் அசிங்கங்களும் அருவெறுப்பாக நினைக்கும் செயல்கள் நிறைந்திருந்தாலும் அதன் மூலமாக நாம் உணரும் உணர்வும் பாடமும் அலாதியானது.
— Jan 17, 2024 06:09PM
Like flag
Mohammed’s Previous Updates
Mohammed Ibrahimali
is on page 310 of 456
இரயில் பயணமும் அதில் உள்ள மக்கள் பிரிவினைகளும், மக்களின் மனமும் உணர்வும் பாடல்களும் உணவுகளும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டே பயணித்துக் கொண்டிருக்கையில் நானும் அந்த இரயிலில் பயணித்தது போன்ற உணர்வில் பயணித்துக் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு அச்சகத்தில் எழுத்து திருத்தம் பணியாளன் வேலைக்கு சேர்ந்து அப்படியே எழுத்தாளன் என்ற பயணத்தை நோக்கி செல்லும் போது ஏற்படும் குற்ற உணர்வும் அதற்க்கு மருந்தாக உமாக்காவின் வரியும் அருமை
— Jan 19, 2024 06:25PM
Mohammed Ibrahimali
is on page 190 of 456
இரண்டு புறப்படாக வகுக்கபட்ட இந்நூலில் முதல் புறப்பாடில் தந்தையுடன் வாய் வாக்குவாதமோ ஏதோ நிகழ்ந்ததின் வெளிபடாக வீட்டை துறந்து விடுதியில் தங்கி தன்னுடைய சொந்த காலால் நிற்க வேண்டும் என்ற வைராகியத்தோடு வந்து வாழ்ந்த நான்கு மாத வாழ்வியளின் அனுபவங்களை அருமையாக புனைவை புகுட்டி இயற்றியிருந்த கதைகளை(ஜெ கட்டுரை என்று கூறுகிறார்) வாசிக்கும் போது அதுவரை இருந்த வாழ்வியலோடு முற்றிலும் வேறு வாழ்வை வாழ்ந்த அனுபவம் அவருக்கு பல...
— Jan 15, 2024 02:25AM
Mohammed Ibrahimali
is on page 63 of 456
இந்நூல் ஜெயமோகன் கல்லூரியில் பயிலும் போது அவர் தன்னுடைய வீட்டை துறந்து ஓர் புதிய உலகத்தில் நுழைந்து வாழ்ந்த வாழ்வின் அனுபவங்களை கட்டுரை-கதை என்ற வடிவில் எழுதியுள்ளார். கிட்டத்தட்ட தன்வரலாறு நூல் போல இருந்தாலும் ஒரு நாவலுக்கு தேவையான அனைத்து சாரம்சமும் அடங்கியுள்ளது. முதல் இரு கட்டுரையை வாசித்ததுமே உணர்வை சுண்டி எழச் செய்கிறது. அந்த உணரவெழுச்சியும் ஒருவிதமான மன அமைதியை புகுட்டுகிறது.
— Jan 12, 2024 05:03AM
Comments Showing 1-2 of 2 (2 new)
date
newest »
newest »
message 1:
by
கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்
(new)
-
rated it 5 stars
Jan 17, 2024 06:23PM
'நுதல்விழி' என்ற பகுதியில் அருளப்பசாமி என்ற ஒரு கதாபாத்திரம் நமக்கு அறிமுகமாவார். அவர் வரும் இடமெல்லாம் மிகவும் அருமையாக இருக்கும்.
reply
|
flag

