Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following A. Muttulingam.
Showing 1-30 of 50
“அநீதியை எதிர்ப்பது ஆதி மனித இயல்பு. மனித சமுதாயத்தில் வெகுவிரைவில் சமத்துவம் சந்துபொந்தெல்லாம் நிறைந்துவிடும் என்பதில் அவனுக்கு அசையாத நம்பிக்கை.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு மரம் நிற்கிறது. பட்சிகள் அதன் கிளைகளையும், பூக்களையும் கொத்தி அழிவு செய்தபடியே இருக்கின்றன. ஆனால் மரம் ஒன்றுமே செய்வதில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. உயிர் கொடுத்தபடியே இருக்கிறது.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“வாழ்க்கைப் பயணம் சுவையானது. அதை ஒரு சுரங்கப் பாதையாக மாற்றுவது மனிதன்தான்.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஒரு கவியாவது தான் எல்லாவற்றையும் சொல்லியாகிவிட்டது என்று கூறுவதில்லை. எந்த ஒரு கவிக்கும் புதிதாகச் சொல்ல ஏதாவது முளைத்துக்கொண்டே இருக்கிறது.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“உருளும் கல்லில் பாசி பிடிப்பதில்லை என்பார். பாசியை வைத்து என்ன செய்வது. கல் உருண்டால்தானே பல இடங்களுக்கும் போகமுடியும்.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“எந்த ஒரு கலையும் அதன் தேடலின் முடிவில் புதிய ஒரு தேடலை ஆரம்பிக்கிறது. தன்னைப் புதுப்பிக்காத கலை அழிந்துவிடுகிறது.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“மூச்சு விடுவது உயிரினத்தின் அறிகுறி என்பது போல விளம்பரம் செய்வதும் ஒரு நிறுவனம் உயிரோடு இருக்கிறது என்பதின் அடையாளம்”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“சட்டம் என்றால் என்ன. நமக்கு நாம் போடுவதுதானே.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“இன்னொருவர் கெடும்போது ஏற்படும் திருப்தி, சந்தோசம் மனிதனுக்கு வேறு எதிலுமே கிடைப்பதில்லை.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“மனிதன் ஒரு புதிர். அதை விடுவிக்க வேண்டும் என்பதுதான் செக்கோவின் தேடல்.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஜோன் அப்டைக் என்றுதான் நினைக்கிறேன், "நீ உன் புத்தகத்தின் நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொண்டால் அந்த புத்தகத்தின் பாதகமான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தடயங்கள் எதிரி.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“ஆறுதல் பரிசு ( consolation prize ) என்று ஒன்று உண்டு. அதைவிட மோசமான பரிசு இந்த உலகத்திலேயே கிடையாது. தோற்றவரை ஆற்றுவதற்காகத் தரும் இந்தப் பரிசு உண்மையிலேயே தோல்வியை நினைவுபடுத்துவதற்காகக் கொடுக்கப்படுவது. இந்தப் பரிசு பெற்றவரை யாரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“பேதமையை பெண்ணின் லட்சணம் என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஒன்றும் தெரியாமை' (Ignorance) இது லட்சணமா? அது கூட பரவாயில்லை. மடமை (Stupiality) கூட பெண்ணின் லட்சணமாமே; அது அப்படித் தான் என்றால் எங்கள் பெண்களில் அந்த லட்சணம் நிரம்பி வழிகிறதுதான்.”
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“வாழ்க்கை என்பது கொதிக்கும் கொப்பரையிலிருந்து, எரி நெருப்புக்குள் வீழ்ந்து கருகுவதல்ல. புதிய நிர்ப்பந்தங்களின் அடிமையாவதல்ல. புதிய சூழலை வசப்படுத்துதல்! புதிய சூழலிலும் நாம் இழக்கத் தயாராக இல்லாத தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டே, புதிய சூழலிலே குதிரும் வாகான புதிய சுருதிகளை இனங்கண்டு, அவற்றைத் தமிழின் அனைத்து உயர்வுகளுக்கும் இசைவாக்கிப் புதிய நம்பிக்கைகளை வென்றெடுத்தல்!”
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“சூரியனுடைய சக்தி வெள்ளத்தை ஏழரை நிமிடங்கள் தடுத்து விடுகிறது. இது இரவு வருவது போன்றதல்ல. எங்களுக்கு இரவு நடந்து கொண்டிருக்கும்போது இந்தப் பூமியின் இன்னொரு பகுதியை சூரியனுடைய ஒளிக் கதிர்கள் தாக்கிக் கொண்டிருக்கும். கிரகணத்தின்போதோ, அந்த ஏழரை நிமிடங்கள், சூரியனுடைய உயிரூட்டும் சக்தி பூமியை அடைவதேயில்லை! தடைபட்டு போகிறது. பூமி அந்த சக்தியை நிரந்தரமாக இழந்து விடுகிறது. அது ஈடு செய்யமுடியாத ஒரு நட்டம்.”
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“பல வருடங்கள் அங்கே பிரிட்டிஷ் ஆட்சி நடந்தாலும் அதன் அறிகுறியைக் காணமுடியாது. சூடானியர்கள் பேசுவது அரபு மொழி. அவர்கள் பேசும் போதோ, எழுதும்போதோ மருந்துக்குகூட ஓர் ஆங்கில வார்த்தையை சேர்க்கமாட்டார்கள். அவர்களுடைய இன்னொரு குணாம்சம் விருந் தோம்பல். விருந்தாளிகளை உள்ளன்போடு உபசரிப்பதில் அவர்களுக்கு இணை யாருமில்லை.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“பணம் பணம்' என்று ஓடும்போது சிலர் வாழ்க்கையை தவற விட்டு விடுகிறார்கள்.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“அவர் பேசிய அத்தனை மணி நேரத்திலும் அவர் "எழுத்தாளருக்குள் இருக்கும் பொறியை அவர் ஊதிக்கொண்டே இருக்கவேண்டும்' என்று சொன்னது என்னை சிந்திக்க வைத்தது. டெலிபோன் புத்தகத்தில் பெயர் வராமல் இருக்க மாதம் இரண்டு டொலர் வாழ்நாள் முழுக்க கட்டுவதுபோல எழுத்தாளரின் கற்பனை பொறி வற்றிவிடாமல் இருக்கவும் கடுமையாக உழைக்க வேண்டும் - வாழ்நாள் முழுக்க.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“மனிதனுக்கு எவ்வளவு அழிவுபுத்தி இருக்குதோ அவ்வளவுக்கு யானைகளுக்கு சினேக புத்தியும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுற உணர்வும் இருக்குது.”
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“காகித விரயத்தில் எனக்கு உவப்பில்லை. ஒரு காகிதத்தை கசக்கி எறியும்போது ஒரு மரத்தின் இலை கண்ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான். இந்தத் தாள்களில் அச்சாகி வரும் கதைகளால் ஒரு வித பயனுமில்லை என்றால் இந்தக் காகிதங்களைத் தருவதற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்காக நான் கண்ர் வடிக்கிறேன். ஓ மரங்களே! என்னை மன்னிப்பீர்களாக!”
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஏற்படும் சினேகமானது எப்படியும் செக்ஸ’ல் கொண்டு போய் விட்டு விடும்.”
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“மனோரஞ்சிதப்பூ நினைத்த வாசத்தைக்கொடுக்கும்”
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“மனதுக்கு சரி என்று பட்டதைச் செய்யும்போது சாவு பயம் வராது என்பது அவனுடைய நம்பிக்கை.”
― கடவுள் தொடங்கிய இடம்
― கடவுள் தொடங்கிய இடம்
“உணவைப் பற்றிய ஸ்மரணைதான் எங்களுக்கு எந்த நேரமும். இந்த ஏக்கம்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏக்கம் மிகவும் முக்கியமானது.”
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
― அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம்
“ஓர் அளவுக்கு மேல் பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? வயிற்றின் அளவுக்கு மேல் உண்ண முடியுமா? அல்லது இரண்டு படுக்கைகளில் ஒரே சமயத்தில் உறங்க முடியுமா?”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“புத்தகத்தில் உண்மையான பற்று வைக்கும் ஒருவருக்கு வேறு பற்று இருக்காது.”
―
―
“உலகத்து ஜீவராசிகள் அனைத்தையும் காவல் காக்க வேண்டுமென்றால் அதற்கு மனிதன் நிச்சயமாக தகுதியானவன் அல்ல. ஆனால் இயற்கை மனிதனைத்தான் தேர்வு செய்திருக்கிறது. மனிதன்தான் இருக்கும் உயிரினங்களில் எல்லாம் உயர்வானவன். இவனே கேவலமானவனும். இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்களை தரிக்கும் கிரகம் ஒன்றே ஒன்றுதான். பூமிக் கிரகம். 'ஒரே ஒரு கிரகம். ஒரே ஒரு பரிசோதனை' என்றார் ஒரு ஞானி. மனிதன் ஒருவனால் மட்டுமே அழிக்கமுடியும். அவனால் மட்டுமே காக்கவும் முடியும். மனிதன் எதனைத் தேர்ந்தெடுப்பான் என்பது இனிமேல்தான் தெரியவரும்.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
“சிலருக்கு வயிற்றுப்போக்கு இருப்பதுபோல் இவனுக்கு வாய்ப்போக்கு.”
― அ. முத்துலிங்கம் சிறுகதைகள்: 1958 - 2016
― அ. முத்துலிங்கம் சிறுகதைகள்: 1958 - 2016
“அடுத்த பிறவியில் அவருடைய முதுகாகப் பிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டேன். எந்தப் பிறவியிலும் அவருடைய கண்களால் பார்க்கப்படுவதை நான் விரும்பவில்லை.”
― அ. முத்துலிங்கம் கட்டுரைகள்
― அ. முத்துலிங்கம் கட்டுரைகள்


![கடவுள் தொடங்கிய இடம் [Kadavul Thodangiya Idam] கடவுள் தொடங்கிய இடம் [Kadavul Thodangiya Idam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1494836512l/35138283._SX98_.jpg)
![வடக்கு வீதி [Vadakku Veethi] வடக்கு வீதி [Vadakku Veethi]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1506680218l/36323425._SX98_.jpg)
